|
குர்ஆன் கூறும் கருவியல்: -
தொடர்-1 ஆண் அல்லது பெண்
குழந்தை - ஆணின் உயிரணுவே காரணம்
"இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று
ஜோடியாகப் படைத்தான் - (கர்ப்பக் கோளறையில்)
செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக்
கொண்டு" (அல் குர்ஆன் 53:45-46)
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய்
ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன்
இருக்கவில்லையா? (அல் குர்ஆன் 75:37)
ஒரு பெண், கருத்தரிக்கும் போது அது ஆண்
குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு
அவளுடைய கனவனின் உயிரணுவே காரணம்: மனைவி காரணமல்ல.
என்ற தற்கால அறிவியல் ஆராய்ச்சியின் முடிவை 1400
ஆண்டுகளுக்கு முன்னரே திருமறை வசனம் கூறியிருப்பது
குர்ஆன் கூறும் அறிவியல் அற்புதங்களில் ஒன்றாகும்.
இது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
பொதுவாக பெண்ணின் சினை முட்டையில் X என்ற
குரோமோசோம் மட்டுமே இருக்கும், ஆணின் விந்தணுவில்
X அல்லது Y என்ற குரோமோசோம் இருக்கும் என்பதையும்
X என்பது பெண்ணை உருவாக்கும் குரோமோசோம் என்றும் Y
என்பது ஆணை உருவாக்கும் குரோமோசோம் என்றும் நாம்
படித்திருக்கிறோம்.
இப்போது மேற்கண்ட குர்ஆன் ஆயத்துக்கள் இன்றைய
அறிவியலுடன் எவ்வாறு ஒத்துப் போகின்றது என்பதைச்
சற்று விளக்கமாகப் பாப்போம்.
X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் X
குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-X
என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் பெண்
குழந்தையாக உருவாகின்றது. (X-X என்ற குரோமோசோம்
ஜோடியைக் கொண்ட செல் பெண் குழந்தையை உருவாக்கும்
தன்மையைக் கொண்டது)

X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் Y
குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-Y
என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் ஆண்
குழந்தையாக உருவாகின்றது. (X-Y என்ற குரோமோசோம்
ஜோடியைக் கொண்ட செல் ஆண் குழந்தையை உருவாக்கும்
தன்மையைக் கொண்டது)
பெண்ணின் சினை முட்டை வெறும் X குரோமோசோமை மட்டுமே
உடையதாக இருக்கிறது. ஆனால் பெண்ணின் கர்ப்பப்
பையினுள் செலுத்தப்படும் விந்தணுக்களில் X
குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்களும் Y
குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்களும்
கோடிக்கணக்கில் உள்ளன. ஆனால் ஆணின் ஒரே ஒரு உயிரணு
மட்டுமே பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து
கருவாக வளர்கின்றது. பெண்ணின் சினை முட்டையுடன்
சேரக் கூடிய ஆணின் உயிரணு X குரோமோசோம் உடையதாக
இருந்தால் அது பெண் குழந்தையாகவும், பெண்ணின் சினை
முட்டையுடன் சேரக் கூடிய ஆணின் உயிரணு Y
குரோமோசோம் உடையதாக இருந்தால் அது ஆண்
குழந்தையாகவும் உருவாகிறது.
பெண்ணின் சினை முட்டை X ஆக மட்டுமே இருக்கிறது.
கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின்
உயிரணுக்கள் தாம் X ஆகவோ அல்லது Y ஆகவோ
இருக்கிறது. அதாவது கர்ப்பக் கோளறையில் செலுத்தப்
படும் ஆணின் உயிரணுக்களுக்களே சினை முட்டையுடன்
சோந்து பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ
உருவாகின்றது.
இதை இப்படியும் புந்துக் கொள்ளலாம்.
- பெண்ணின் சினை முட்டையுடன் - கர்ப்பக் கோளறையில்
செலுத்தப் படும் ஆணின் X குரோமோசோம் உடைய உயிரணு
சேர்ந்தால் பெண் குழந்தையாக உருவாகிறது.
- பெண்ணின் சினை முட்டையுடன் - கர்ப்பக் கோளறையில்
செலுத்தப் படும் ஆணின் Y குரோமோசோம் உடைய உயிரணு
சேர்ந்தால் ஆண் குழந்தையாக உருவாகிறது.
மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிவது
என்னவென்றால் கர்ப்பக் கோளறையில் செலுத்தப்படும்
ஆணின் இந்தியத் துளியே பெண் குழந்தையாகவோ அல்லது
ஆண் குழந்தையாகவோ உருவாகுவதற்கு காரணமாக
அமைகின்றது, பெண்ணின் சினை முட்டையல்ல. இன்னும்
சற்று விளக்கமாக கூறுவதென்றால் ஆண் குழந்தை அல்லது
பெண் குழந்தை என்ற ஜோடிகளை உருவாக்குவது பெண்ணின்
கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் போதுள்ள
இந்தியத் துளியைக் கொண்டே என்பது நன்கு
புலப்படுகின்றது.
இப்போது மேற்கண்ட வசனங்களை ஒருமுறை படித்துப்
பாருங்கள்.
"இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று
ஜோடியாகப் படைத்தான் - (கர்ப்பக் கோளறையில்)
செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக்
கொண்டு" (அல் குர்ஆன் 53:45-46)
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய்
ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன்
இருக்கவில்லையா? (அல் குர்ஆன் 75:37)
20 ம் நூற்றாண்டின் இந்த அரிய கண்டுபிடிப்பை 7 ம்
நூற்றாண்டிலேயே கூறிய அல்லாஹ்வின் திருமறையின்
அறிவியல் அற்புதங்களை உலகிற்கு எடுத்துக்கூறுவது
நமது கடமையன்றோ?
இன்றும் நம்மில் சிலர் தம் மனைவி பெண் குழந்தைகளை
மட்டுமே பெற்றெடுக்கிறாள், ஆண் குழந்தையே
பெற்றெடுப்பதில்லை என்று குறை கூறுகிறாகள்.
குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ ஆகுவதற்கு தம்முடைய
உயிரணுவே காரணம் என்பதை அறியாததே இதற்குக் காரணம்.
இவர்கள் பின் வரும் இறைவசனங்களைச் சிந்திக்கக்
கடமைப்பட்டுள்ளாகள்.
அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும்
ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன்
படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண்
மக்களை அளிக்கிறான்; மற்றும் தான்
விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.
அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண்
மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும்
தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் -
நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.
(அல்குர்ஆன் 42:49-50) |