சுவையான விவரங்கள்

 

தொகுப்பு: காஜா முயீனுத்தீன்

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...


உலகின் மிகப் பெரிய...

உயரமான பாலம் பிரான்ஸ் உள்ளது (The Millau bridge)
பூங்க யெல்லோஸ்டோன் தேசிய பூங்க
மலர் ரப்ஃலீசியா டக்வீட்
நாடு ரஷ்ய
துறைமுகம் நியூயார்க்கில் உள்ளது
நகரம் ஷங்காய்
விமான நிலையம் அரசர் காலீத் பன்னாட்டு விமான நிலையம். (சவூதி அரேபியா)
மசூதி உமய்யாத் மசூதி,டமாஸ்கல்.(சிரியா)
ஏரி கால்பிஸ்கோயைமோரி. (கஸ்பியன் கடல்)
பெருங்கடல் பசிபிக் பெருங்கடல். (ஆழம் 12,925 அடி)
பல்கலைக்கழகம் எம்.வி.யூனிவர்சிட்டி.(ரஷ்யா)
தீபகற்பம் அரேபியா.(1,250,000 சதுர மைல்)

உலகில் மிகப் பெரிய நாடும், மிகச் சிறிய நாடும் ஒரே கண்டத்தில் தான் அமைந்திருக்கின்றன. அது ஐரோப்பாக் கண்டம் தான். அந்த நாடுகள் ரஷ்யவும், வாட்டிகனும், ரஷ்யாவின் சில பகுதிகள் ஆசியாக் கண்டத்திலும் அமைந்திருக்கின்றன எனவே ரஷ்யா ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த நாடு என்று சிலர் சொல்வது தவறு. இது ஐரோப்பாக் கண்ட நாடுகள்.

உலகின் மிக உயரமான பாலம் (The Millau bridge)
  • உலகின் மிக உயரமான பாலம் பிரான்ஸ் நாட்டில் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இது தரையில் இருந்து 34.3 மீட்டர் உயரத்தில் நிற்கிறது. இரண்டு மிகப்பெரிய நகரங்களை இணைக்கும் இந்தப் பாலம் 2003ல் பொதுமக்களுக்காக பிரான்ஸ் நாட்டு அதிபர் சிராக்கால் திறந்து வைக்கப்பட்டது. இதுதான் உலகின் மிகப்பெரிய பாலமாகும்.
     
  • இந்தப்பாலத்தை கட்டி முடிக்க 39கோடியே 50லட்சம் டாலர் செலவானது. 85,000 சதுரமீட்டர் அளவு கொண்ட இந்தப் பாலத்தைக் கட்ட 205,000 டன் சிமெண்டும் 36,000 டன் இரும்பும் தேவைப்பட்டன. ஒவ்வொரு 400மீட்டருக்கு இடையிலும் தொலைபேசி வசதி கொண்ட இந்தப் பாலத்தின் நீளம் 2.45கி.மீட்டர், அகலம் 32மீட்டர்.
     
  • ஒரே சமயத்தில் 2000டன் எடையைத் தாங்கக் கூடியது இந்தப் பாலம். பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற நிறுவனத்தினரால் கட்டப்பட்ட இந்தப் பாலத்திற்கு 120 வருடம்வரை உத்திரவாதம் தரப்பட்டுள்ளது.
  • தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை,நீலம்,சிகப்பு
  • பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
  • பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
  • காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
  • அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
  • கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
  • உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
     

chittarkottai.com