அறிவை வளர்க்க - குர்ஆனை படியுங்கள்!
|
|
முயீனுதீன் |
நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...
கைரேகை
மரணத்திற்குப் பின் மனிதன் உயிர்பிக்கப்படுவது
அல்லாஹ்விற்கு எளியது என்று குர்ஆனிலே கூறப்படும்போது
குறிப்பாக மனிதர்களின் கைரேகை முக்கியத்துவம்
கொடுக்கபட்டுள்ளது.
அன்றுää அவன் நுனி விரல்களையும்
(முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (கியாமா
- 75:4)
|
|
ஒவ்வொரு
மனிதர்களுக்கும் கைரேகை என்பது தனித்துவம்
வாய்ந்ததாகும். இரட்டையர்களுக்கும் இது
பொருந்தும். ஆம் மனிதர்களின் அடையாளங்கள்
அவர்களின் நுனிவிரல்களில் என்றால் மிகையாகாது.
ஆம் எப்படி இன்றை நவீன உலகில் பார்கோடு
பொருள்களைப் வேறுபடுத்துகிறதோ அதே போல்
மனிதர்களின் பார் கோடு கைரே எனலாம். |
கைரேகை என்பது
இவ்வுலகில் உள்ள அனைவர்களுக்கும் ஒரு தனித்தன்மையுடைதாக
உள்ளது. இவ்வுலகில் வாழும்ää வாழ்ந்த அனைவர்ளுககும்
வித்தியாசமான கைரேகையாக இருந்தது.
எனவே தான் கைரேகையை மனிதர்களின் முக்கியமான அடையாளமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது வந்துள்ள புதிய செல்ஃபோன்
இந்த அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. யாருடைய
கைரேகை பதியப்பட்டதோ அவரைத் தவிர மற்ற யாரும் பயன்படுத்த
முடியாது.
இதில் என்ன முக்கியத்துவம் என்றால் இந்த கைரேகையின்
தனித்தன்மைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தான்
கண்டுபிடிக்கபட்டது. அதற்கு முன்னர் மக்கள்ää இதை ஏதோ
கோடுகள் என்று தான் நினைத்திருந்தனர்.
எனினும் இறைவன் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆனிலே
இதைப் பற்றிக் குறிப்பிடுகிறான். பல காலங்களாக இதனுடைய
முக்கியத்தை மக்கள் அறியவில்லை. ஆனால் நாம் இன்று
வியப்படைந்து குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் என்பதை ஒப்புக்
கொள்கிறோம்.
கடல்கள்
ஒன்றோடொன்று கலக்காது!!!
அன்மை காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கடல்களின் பண்புகளில்
ஒன்று குர்ஆனில் காணப்படுகிறது.
அவனேää இரண்டு கடல்களையும்
ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே
ஒரு தடுப்பும் இருக்கிறதுää அதை அவை மீறமாட்டா.
(அற்றஹ்மான் - 55:19-20)
இரண்டு கடல்கள் ஒன்றோடென்று சந்தித்தும் கலக்காத அதிசிய
தன்மை அண்மையில் தான் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்களால்
கண்டுபிடிக்கப்ட்டது
நீரின் தன்மைக்கேற்ப அதன் மேலழுத்தத் தன்மை மாறுபடும்.
இந்த தன்மை நீர் ஒன்றோடொன்று கலப்பதை தடுக்கின்றது. இரு
பகுதியின் அடர்த்தி (உப்பின் அளவிற்கேற்ப மாறும்) வேறாக
இருந்தாலும் இந்த மேலழுத்தத் தன்மை ஒரு மெல்லிய தடுப்பு
போல் அவைகள் ஒன்றோடொன்று கலப்பதைத் தடுக்கின்றது.
கடலைப் பற்றியோää இயற்பியல் அறிவியலையோ மற்றும் நிரின்
மேலழுத்தம் பற்றியோ அறிவு இல்லாத அந்தக் காலத்தில் இந்த
அதிசியக்கும் உண்மையை குர்ஆன் கூறியது.
|
அட்லாண்டிக் கடல் மற்றும் மத்தியதரைக்
கடல்களில் அதிகமான அலைகளும் ஓட்டங்களும்
உள்ளன. ஜிப்ரால்டர் நீர் வீழ்ச்சி மூலமாக
மத்தியதரைகடலின் நீர் அட்டலாண்டிக் கடலில்
சேர்கின்றது. அட்லாண்டிக் கடலின் உப்பத்
தண்மையை விட மத்தியதரைக் கடலின் உப்பு சற்றுக்
கூடுதலாகும் (36.5 சதம்). அடர்த்தி மற்றும்
வெப்பநிலையும் வேறாக உள்ளது. இரு கடல்களும்
சேர்ந்திருந்தாலும் அவைகளின் வெப்பமோ அல்லது
உப்புத் தன்மையோ அல்லது அடர்த்தியோ
மாறுவதில்லை. காரணம் இரண்டுக்கு இடையே அந்த
தடுப்பு உள்ளது! |
|