|
சித்தார்கோட்டையைச் சேர்ந்த டாக்டர் சையித் இபுராஹிம் அவர்கள்
ஹிமானா சையித்
என்ற பெயரில்
உலகத்தமிழ்
மக்களிடையே பிரபலமாகி உள்ளார்கள்.
1964ல் மறுமலர்ச்சி வார இதழ் மூலம் தொடங்கிய தமது இலக்கியப்
பணி இன்று பல பத்திரிக்ககைளில் கவிதை, கட்டுரை, சிறுகதை,
தொடர்கதை என்று
தொடர்ந்து செல்கின்றது.
அவர்கள்
565
சிறுகதைகள், 9 நாவல்கள், 1000
கவிதைகள், 1000 கட்டுரைகள் மற்றும் 35 புத்தகங்களும் எழுதி
உள்ளார்கள்.
பல
பல்கலைக்கழகங்களில் பலர் அவரது ஆக்கங்களில் எம்.பில்
பட்டங்கள் பெற்றுள்ளனர்
அவர்களது ஆக்கங்களில்
ருசி
என்ற சிறுகதைத் தொகுப்பு
கேரள பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில்
பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்
சன்முகவனம் இவர்களது நாவல்களில் ஆராய்ச்சி செய்து டாக்டர்
பட்டம் பெற்றுள்ளார். கோடுகள்
கோலங்கள்
என்ற நாவல்
கேரள மேல்நிலைப் பள்ளி
பாடநூலில்
சேர்க்கப்பட்டள்ளது.
அது தவிர
'தமிழ்
மாமணி, 'பாரத் ஜோதி', 'சிறந்த குடிமகன்'
போன்ற விருதுகளும் பெற்றுள்ளார்கள்.
முஹம்மதியா பள்ளிகளின்
தாளாளராக பணிபுரிந்துள்ளார்கள். மாவட்ட ஐக்கிய
பொருளாதார சபையின்
செயலாளராகவும், மாவட்ட ஷரிஅத் கமிட்டி
உறுப்பினராகவும் உள்ளார்கள்.
இவ்வாறு
சமுதாய வளர்ச்சிக்காக பாரதம் மட்டுமல்லாது
மலேசியா,
சிங்கப்பூர்,
புருணை, இலங்கை, ஹாங்காங், தாய்லாந்து, அரபிய அமீரகம்,
சவுதிய அரேபியா, குவைத், போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளார்கள்.
சித்தார்கோட்டை இணைய தளத்தில அவர்களின் ஆக்கங்கள்
வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். |