முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்
ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்தமிழகபெண்களில் சென்னையைச் சேர்ந்த பர்சானா முதலிடம்

இந்திய ஆட்சிப்பணியாளர்களின் தேர்வில் முஸ்லிம்களின் பங்களிப்புமிகக்குறைந்தளவே இதுநாள் வரையிலும் இருந்துள்ளது. இவ்வாண்டு 27 முஸ்லிம்கள்தேர்வாகியுள்ளனர். அதில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
சென்னைகோடம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது சாதிக் அவருடைய மகள் மரியம் பர்சானாசாதிக். இவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 30வது ரேங்க்கும், தமிழக அளவில்பெண்கள் பிரிவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
திருப்புமுனை:
பர்சானாவிற்கு 12 வயது இருக்கும்போது தனது தந்தையுடன் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குசென்றிருக்கிறார். அப்போது அலுவலகத்திற்கு வந்த கலெக்டருக்கு அளிக்கப்பட்ட மதிப்பு, கவுரவம், கலெக்டருக்கு கிடைக்கக் கூடிய மரியாதை ஆகியவை இவருக்கு கலெக்டர் பதவி மீதுஏற்பட ஈர்ப்பின் காரணமா கலெக்டர் ஆக வேண்டும் என்று விரும்பினார். அவரதுவிருப்பத்தை தந்தை சாதிக் பர்சானாவின் சகோதரர் முகமது உசேன் சாதிக்கும் மலரச்செய்துள்ளனர்.
பர்சானா ராயபுரம்கெவின்ஸ் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், ஆயிரம் விளக்கு சர்ச் பார்க்கான்வென்டில் மேல்நிலைப் படிப்பையும் முடித்தார். அதன்பின் ஸ்டெல்லா மேரீஸ்கல்லூரியில் பி.காம். பட்டமும், தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியில்எம்.காம். பட்டமும் பெற்றார்.
டெல்லி வாஜிராம்ரவி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திலும், சென்னை கணேஷ் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திலும்தீவிர பயிற்சி மேற்கொண்டார். எனினும் அவருக்கு வெற்றி எளிதாக கிடைத்து விடவில்லை.முதல் முயற்சியில் முதல்நிலைத் தேர்விலேயே தோல்வி அடைந்தார்.
அடுத்த முறையில்மெயின் தேர்வு வரை மட்டுமே அவரால் செல்ல முடிந்தது. ஆனாலும் நம்பிக்கையை இழக்காமல்தொடர்ந்து முயற்சியில் இறங்கினார். 3வது வாய்ப்பில் வெற்றிக்கனி கிடைத்தது. 2007ம்ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். இறுதி தேர்வில் அகில இந்திய அளவில் 30வது ரேங்க் எடுத்து.தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பெண்களில் முதலிடத்தைபிடித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ். தேர்வுஎழுத முதலில் தன்னம்பிக்கை வேண்டும். நல்ல வழிகாட்டுதல் தேவை. அத்துடன் ஒரே மனதுடன்திட்டமிட்டு படிக்க வேண்டும். அப்படி படித்தால் யார் வேண்டுமானாலும் இந்த தேர்வில்வெற்றி பெற்று விடலாம்.
கலெக்டர் ஆகவேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. ஒரு கலெக்டருக்கு சமுதாயத்தில் அளிக்கப்படும்மதிப்பும், மரியாதையுமே நானும் அந்த பதவிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையைஏற்படுத்தியது. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பொது அறிவுதான் அடிப்படை தேவை. இதற்காகடி.வி.யில் செய்தியை தவறாமல் கேட்பேன். இவ்வாறு தனது சாதனைப் பற்றி கூறுகிறார்பர்சானா, பர்சானாவின் தந்தை சாதிக்கின் இயற்பெயர் சக்திவேல் நாடார். பலஆண்டுகளுக்கு முன்னரே இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும்குறிப்பிடத்தக்கது.


கோவை மீனா எஸ்டேட்டை சேர்ந்தவர் அரிசி வியாபாரி சுல்தான்.இவரது மகள் அஜிதாபேகம், 169வது ரேங்க் பெற்றுள்ளார்,
அரசு வழங்கிய தரிசு நிலத்தில் பருத்தி சாகுபடி

இலவச நிலம்

முதுகுளத்தூர் அருகே உள் ளது காக்கூர் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் ஏழை விவ சாயி சண்முகவேல்(வயது 70). தமிழக அரசின் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் சண்முகவேலுவுக்கு 1.46 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த இடம் கடந்த 20 வருடங்களாக காட்டு கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து விவசா யத்துக்கு தகுதியற்ற தரிசு நில மாக இருந்தது.

இந்த இடத்திற்கு நீர் ஆதா ரம் இல்லாததால் அருகில் உள்ள இடங்களில் இருந்து பம்பு செட்டு மூலம் விவசாயி சண்முகவேல் தண்ணீர் கொண்டு வந்தார்.

பருத்தி சாகுபடி

பல்வேறு இடங்களில் கடன் பெற்று அவர் பருத்தி சாகுபடி செய்தார். இதில் அவருக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதுகுறித்து விவசாயி சண் முகவேல் கூறியதாவது:- விவசாய துறையினர் இந்த நிலத்தை தகுதி வாய்ந்த நில மாக மாற்றி வழங்கினர். தமி ழக அரசின் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் பயனாக ஒன்றுக்கும் பயன் தராத தரிசு நிலம் இன்று பருத்தி விவ சாயம் செய்யும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ரூ.10 ஆயி ரம் செலவு செய்து பருத்தி பயிரிட்டேன். இப் போது ரூ.40 ஆயிரம் பலன் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

3 ஆயிரம் பேருக்கு

இதுகுறித்து விவசாய துறை அதிகாரி கூறியதாவது:- ராம நாதபுரம் மாவட்டத்தில் நில மற்ற 3 ஆயிரம் ஏழை விவசா யிகளுக்கு 2 ஆயிரத்து 270 ஏக்கர் நிலம் வழங்கப் பட்டுள் ளது. இதில் இதுவரை ரூ.25 லட்சம் செலவு செய்து ஆயி ரத்து 165 ஏக்கர் தரிசு நிலம் விவசாயத்திற்கு ஏற்ற இட மாக மாற்றப்பட்டு பயனாளி களிடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 

தொண்டி அரசுப் பள்ளியில் 7 மாணவிகள் தமிழக ஆளுநர் விருதுக்கு தேர்வு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் 7 பேர், சாரணியர் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக, தமிழக ஆளுநர் வழங்கும் "ராஜ்ய புரஸ்கார்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும், சாரணர் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றும் சாரணியர்களுக்கு, தமிழக ஆளுநர் அவர்களால் ராஜ்ய புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் இவ் விருதுக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 74 பள்ளிகளில் 9 பள்ளிகளைச் சேர்ந்த 25 சாரணியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், தொண்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் 7 மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிகள், ஆர். பாத்திமா மேரினோசா, கே. கலைவாணி, கே. வைரலெட்சுமி, வி. கஸ்தூரி, எஸ். நான்சி, ஆர்.ஏ. வைஷ்ணவி, எம். சபுணா யாஸ்மின் ஆகியோர்.

இவர்களை, சாரண ஆசிரியர் மு. அக்பர்அலி, பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ். மனோகரன், திருவாடானைத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர். ராமசாமி, தொண்டி பேரூராட்சித் தலைவர் புவனேஸ்வரி ராஜசேகர், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஷாகுல்ஹமீது ஆகியோர் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பாராட்டிப் பேசினர்.

துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி :


முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் பங்கேற்பு நபிகள் நாயகம் ( ஸல் ) நூல் வெளியீடு

துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி  தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் 23.05.2008 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

துவக்கமாக கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாகி திருவிதாங்கோடு அப்துல் காதர் இறைவசனங்களை ஓதினார். அமீர் பாட்சா தலைமை தாங்கினார். அவர் தலைமை உரையில் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் வெற்றியின் இலக்கணமாகத் திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் நிர்வாகத்தினர் நமது முயற்சிகளுக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். அமீரகத்தில் நாம் ஒருங்கிணைந்து செய்லபட்டு வருவது எதிர்காலத்தில் இந்த பழைய மாணவர் பயின்றோர் கழகம் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளிலும் விரிவடையும் வாய்ப்புகள் உருவாகும் என்றார்.

அமீரகத்தில் 32 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் கல்லூரியின் முதல் மாணவர் ரஹ்மத்துல்லாஹ் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இலங்கையில் இருந்த தனது குடும்பத்தினர் சில சூழ்நிலையின் காரணமாக தமிழகத்திற்கு 1970 ஆம் ஆண்டு வந்தோம். அப்பொழுது திருநெல்வேலியில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு ஏறி இறங்கி இடம் கிடைக்காத சூழநில் தன்னை அரவணைத்துக் கொண்ட சதக்கத்துல்லா அப்பா கல்லூரியினை நினைவு கூர்ந்தார். இன்றைக்கு தனது வாழ்வின் உயர்வில் முக்கியப் பங்காற்றிவருகிறது என்று சொன்னால் மிகையில்லை.

உலகில் முடியாதது எதுவுமில்லை. நாம் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டால் நாம் உயர்வடைவோம். உள்ளத்தில் உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றார் ரஹ்மத்துல்லாஹ். நமது கல்லூரியின் பழைய மாணவர் பயின்றோர் கழகத்திற்காக இணையத்தளம் ஒன்றை கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டலில் உருவாக்கப்பட வேண்டும் என்ற தனது வேண்டுகோளையும் விடுத்தார்.

பழைய மாணவர் பயின்றோர் கழக ஆலோசகரும், துபாய் சென்ட்ரல் பள்ளியின் தலைமையாசிரியருமான நுஸ்கி ஜமால் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் தனது முதிய வயதிலும் ஓய்வில்லாது சமதாயப் பணியாற்றி வருவதை பாராட்டினார். தாயகத்திலிருந்து கல்வி வளர்ச்சிப் பணிக்காக அமீரகம் வந்திருக்கும் முன்னாள் முதல்வரது பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். கல்லூரியில் பயின்று வரும் ஏழை மாணவர்களுக்கு பழைய மாணவர் பயின்றோர் கழகம் செய்து வரும் பணிகளைக் கூறினார்.

பழைய மாணவர்கள் திருவிதாங்கோடு அப்துல் காதர், மேலப்பாளையம் முஹம்மது இஸ்மாயில், குளச்சல் ஹமீது, உள்ளிட்ட பழைய மாணவர்கள் கல்லூரியில் மறக்க முடியாத தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் எழுதிய நபிகள் நாயகம் ( ஸல் ) எனும் நூலை அலோசகர் நுஸ்கி ஜமால் வெளியிட முதல் பிரதியை அமீர் பாட்சா மற்றும் ரஹ்மத்துல்லாஹ் பெற்றுக்கொண்டனர்.

முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோருக்கு நினைவுப்பரிசுகளை அமீர் பாட்சா வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காகவும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் அமீரகத்தில் துவங்கப்பட்டுள்ள பழைய மாணவர் சங்கத்தினரின் அரும்பணிகளைப் பாராட்டினார்.

கல்லூரி முதல்வராக இருந்த போது அப்போதைய காவல்துறை அதிகாரியாக இருந்த சைலேந்திர பாபுவுடன் இணைந்து மாணவர் போராட்டத்தினை முறியடித்த வெற்றிகரமான நிகழ்வை நினைவு கூர்ந்த அவர். திருநெல்வேலியில் இருக்கும் சில கல்லூரிகள் தங்களது சமுதாய மாணவர்களுக்கு மட்டுமே இடம் அளித்து வந்தாலும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மட்டுமே அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து அவர்களுக்கு உரிய படிப்புகளை வழங்கி வரும் பணியினைச் செய்து வருகிறது. உமா சங்கர் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நமது கல்வி நிலையத்தின் பயின்ற மாணவர் என்பதனை இங்கு பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இன்றைக்கு கல்லூரியில் பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் கல்வி வருவது அவர்கள் உயர்கல்வி படிப்பதில் எவ்வளவு ஆர்வமாகக் காணப்படுகின்றனர் என்பது விளங்கும்.பெண்களின் இத்தகைய கல்வி ஆர்வத்தின் காரணமாக கீழக்கரை, காயல்பட்டணம், மேலப்பாளையம், திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் பெண்களுக்கான கல்லூரிகளை சமுதாயத்தின சார்பில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் பல்கலைக்கழக அளவில் பல்வேறு சிறப்பிடங்களைப் பெற்று வருவதும் பாராட்டுக்குரியது.

நமது கல்லூரியின் என்.எஸ்.எஸ். அலுவலர் நசீர் அஹமது சிறப்பான என்.எஸ்.எஸ். பணிக்காக பல்கலைக்கழக அளவில் கௌரவப்படுத்தப்பட்டதினை நினைவு கூர்ந்தார். கல்வி உதவியானது காலத்தால் அழியாதது.

ஆரம்ப காலத்தில் கல்லூரியின் வளர்ச்சிக்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பேராசிரியர் கல்லூரியில் பல்வேறு படிப்புகளுக்காக தனது ஆசானும், மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தருமான மு. வ. அவர்களின் பங்களிப்பினையும், கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் காக்கா, ETA ASCON STAR குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், காயல்பட்டிண பிரமுகர்கள்,  உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தோர் கல்லூரியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருவதினை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இன்றைக்கு கல்லூரி தன்னாட்சி பெற்று சிறப்புற செயல்பட்டு வருகிறது. அன்றைக்கு அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் நமது கல்லூரி விழாவில் இக்கல்லூரி பல்கலைக்கழகமாகும் என வாழ்த்தி துஆச் செய்தார். அத்தகைய உயர்ந்த இலட்சியத்தை நோக்கி கல்லூரி செயலாளர் பத்ஹூர் ரப்பானி மற்றும் நிர்வாகத்தின் முயற்சியில் வீறுநடைபோற்று வருகிறது. கல்லூரியின் முதல்வராக பணியாற்ற்சி சேவையாற்றிய பலரையும் நினைவு கூர்ந்தார். தற்போதைய முதல்வராக இருக்கும் முனைவர் உதுமான் அவர்கள் சதாவதானி செய்கு தம்பி பாவலர் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் அன்பழகன் தனது ஆசிரியராவார். முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன், அமைச்சர் துரைமுருகன் தனது கல்லூரித் தோழர்கள். இத்தகைய நண்பர்களின் மூலமாக நல்ல பலவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

துபாயில் உள்ள் ஈடிஏ அஸ்கான் நிறுவனம் 66,000 குடும்பங்களுக்கு வாழ்வளித்து வருவதை ETA HRM Executive Director அல்ஹாஜ் எம். அக்பர் கான் மூலம் அறிந்து கொண்டேன். தான் துபாய் குறித்தும், அரபி இலக்கிய வரலாறு, உமறுப்புலவர் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதி வருவதாக குறிப்பிட்டார். இதற்காக பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வரும் நல்லுங்களைப் பாராட்டினார்.

செயலாளர் மசூத் நன்றி கூறினார்.

தகவல் : முதுவை ஹிதாயத்
 

 
பேராசிரியர் - தளபதி ஷபீகுர் ரஹ்மான் - சமுதாயப் பிரமுகர்கள் பங்கேற்பு
 
 
அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் மீலாதுப் பெருவிழா, வெள்ளி விழா மற்றும் மலர் வெளியீடு உள்ளிட்டவற்றை முப்பெரும் விழாவாக 15.05.2008 வியாழக்கிழமை மாலை அபுதாபி ஹோட்டல் கிராண்ட் கண்டினெண்டில் நடைபெற்றது.
 
விழாவிற்கு அய்மான் சங்க தலைவர், கீழக்கரை டவுண் காஜி அல்ஹாஜ் காதர் பக்‌ஷ் ஹுசைன் சித்திக்கீ தலைமை தாங்கினார். துவக்கமாக உத்திர பிரதேச மாநிலம் காஸிபூரைச் சேர்ந்த இமாம் மௌலவி முஹம்மது அஸ்லம் முஃப்தி இறைவசனங்களை அரபி மொழியில் ஓதினார். அதன் தமிழாக்கத்தை அய்மான் சங்க மார்க்க செயலாளர் பெரியபட்டணம் மௌலவி முஹம்மது ஷர்புதீன் ஆலிம் விவரித்தார்.
 
'நினைவு யாவும் உங்கள் மீது யா ரசூலுல்லாஹ்' எனும் பாடலை தேரிழந்தூர் தாஜுதீன் தனது கம்பீரக் குரலில் பாடினார்.
 
அய்மான் சங்க செயலாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
 
அல்ஹாஜ் காதர் பக்‌ஷ் ஹுசைன் சித்திக்கீ
 
அல்ஹாஜ் காதர் பக்‌ஷ் ஹுசைன் சித்திக்கீ தனது தலைமையுரையில் அய்மான் சங்கம் கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. திருச்சியில் துவங்கப்பட்ட அய்மான் மகளிர் கல்லூரியின் துவக்கம் முதல் பேராசிரியரின் பங்கு மகத்தானது. அய்மான் சங்கம் அமீரகத் தலைநகரில் பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமீரகத்தில் உள்ள ஊர் ஜமாஅத்துகளுக்கு வழிகாட்டும் பணி உள்ளிட்ட பல பணிகளைச் செய்து வருகிறது. அய்மான் சங்கப் பணியில் ஆரம்பத்தில் ஈடுபட்ட பலர் இன்று தாயகத்தில் இருந்தாலும் அவர்கள் கல்லூரிக்கு வந்து உற்சாகம் அளித்து வரும் நிகழ்வுகள் மிகவும் மகிழ்வையளிக்கிறது என்றார்.
 
தளபதி ஷபீகுர் ரஹ்மான்
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாலர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் அவர்கள் தனது தொடக்கவுரையில் பெண் கல்வி கற்றால் ஒரு சமுதாயம் கல்வி கற்றதற்கு ஒப்பாகும் என்றார். இதன் காரணமாக திருச்சியில் துவங்கப்பட்டுள்ள மகளிர் கல்லூரி மிகவும் பாராட்டுக்குரிய முயற்சி. தத்துவாஞ்சேரி பள்ளி திறப்பு விழாவில் திருப்பனந்தாள் ஆதீனம் உள்ளிட்ட சகோதர சமுதாயப் பிரமுகர்கள் பங்கேற்ற போது அவர்களிடம் நபிகளாரின் வழிமுறைகளில் குறித்து விவரிக்க முடிந்தது. இதன் மூலம் இஸ்லாம் குறித்த அவர்களது தவறான கண்ணோட்டங்கள் மறைய வாய்ப்பு ஏற்படும்.
 
கடந்த 1982 ஆம் ஆண்டு சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் மதினா வந்த போது 2000 தமிழக சகோதரர்கள் பங்கேற்ற சிறப்பான மீலாதுப் பெருவிழா நடைபெற்றது. மீலாது விழா என்று நடத்தாத ஊரில் அங்குள்ளவர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னர் அப்பெருவிழா சிறப்புற நடந்தேறியது. இன்றைக்கு தங்கத் தமிழக ஆட்சிக்கட்டிலை அனுபவித்து வருபவர்களானாலும் சரி, சட்டமன்ற, நாடாளுமன்ற பொறுப்புகளை வகித்து வரும் பலர் மீலாது விழா மேடைகள் மூலம் பரிணமித்தவர்களே.
 
இனவெறியை ஒழித்தது இஸ்லாம். இதனை இஸ்லாத்தை ஏற்று உம்ரா பயணமாக அமெரிக்காவில் இருந்து வந்த கறுப்பு இனத்தவர்கள் மூலம் பார்க்க முடிந்தது என்றார்.
 
சையது ஜாபர்
 
அய்மான் கல்லூரி செயலாளர் அல்ஹாஜ் சையது ஜாபர் அவர்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐந்து பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 58 பேர் பல்கலைக்கழக ரேங்கினைப் பெற்றுள்ளனர்.  மேலும் பல்வேறு போட்டிகளிலும் மெடல்கள் பெற்று சமுதாயப் பெண்கள் சாதனை புரிந்து வருகின்றனர். எண்பது சதவீத முஸ்லிம் பெண்கள் கல்வி பயின்று வருவது அய்மான் மகளிர் கல்லூரியின் தனிச்சிறப்பு. விரைவில் புதிய விடுதிக் கட்டடம் திறக்கப்பட உள்ளது.
 
அய்மான் சங்க வெள்ளி விழா மலர் இஸ்லாமிய அறிவுக் களஞ்சியம் ( இரண்டு )  பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களால் வெளியிட சமுதாயப் புரவலர் நோபிள் மெரைன் சாகுல் ஹமீது முதல் பிரதியினை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
 
பேராசிரியர் கே.எம்.கே.
 
பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் தனது விழாப்பேருரையில் அய்மான் சங்கத்திற்கு அடித்தளமிட்ட நல்லுளங்களை நினைவு கூர்ந்தார். பணியின் நிமித்தம் அமீரகத் தலைநகர் அபுதாபியில் பணிபுரிய வந்த நல்லுள்ளங்கள் தாயகத்தை, சமுதாயத்தை நினைவு கூர்ந்து கல்வி மற்றும் சமுதாயப் பணிகளுக்காக அய்மான் சங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். பொழுதுபோக்கு அமைப்பாக இல்லாமல் மார்க்க அடிப்படையில் ஒழுக்கத்தை நிலைநிறுத்தக்கூடிய வகையில் இச்சங்கத்தின் பணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தூர நோக்குப் பார்வையுடன் நிறுவப்பட்ட இச்சங்கம் இன்று மகளிர் கல்லூரியைச் செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.
 
இன்றைக்கு திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் பல இருந்தாலும் இருபது ஆண்டுகளுக்கு முன்பே திருவை அப்துல் ரஹ்மானின் கம்பீரக்குரலி திருக்குர்ஆன்  மொழிபெயர்ப்பை ஒலிநாடாவில் வழங்கி சாதனை படைத்துள்ளது அய்மான் சங்கம்.
 
முஸ்லிம்கள் அந்நியர்கள் என்று சொல்கின்றனர் சிலர். முஸ்லிம்கள் இந்திய நாட்டின் மண்ணின் மைந்தர்கள். ரிக் வேதத்தில் பிஸ்மிக்க யா அல்லாஹ் என குறிப்பிடப்பட்டுள்ளது என விவரித்த பேராசிரியர் அல்லாஹ் எனும் வாசகம் அரபு நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்ததல்ல. இந்தியாவிலிருந்து அரபு நாட்டிற்குச் சென்றது என பல்வேறு மேற்கோள்களுடன் தனது திருக்குர்ஆன் குறித்த ஆராய்ச்சி ஞானத்தை வெளிப்படுத்தினார்.
 
தமிழகம் ஒரு அமைதிப்பூங்கா. சகோதர சமுதாய மக்களை மீலாது விழா, பள்ளிவாசல் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அழைத்து கௌரவிப்பதன் மூலம் சமூக நல்லிணக்கம் வளர பேருதவியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. கம்பம் செல்வேந்திரன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இஸ்லாம் குறித்து தெரிந்து வைத்திருக்கும் தகவல்கள் என்னை வியக்க வைத்தது என்றார்.
 
அய்மான் சங்கத்தின் வெள்ளி விழா முழக்கம் ஏழைகளை நேசிப்போம். இல்லாதோர்க்கு வழங்கி வாழ்வோம், எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் என்பவை சிராஜுல் மில்லத் அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை தமிழ் படுத்தியதை நினைவு கூர்ந்தார்.
 
அய்மான் சங்கத்தின் பணி சிறக்க வாழ்த்தினார்.
 
பேராசிரியர் குளச்சல் சாகுல் ஹமீது
 
பேராசிரியர் குளச்சல் சாகுல் ஹமீது அவர்கள் தனது உரையில் தூர நோக்குப் பார்வையுடன் செயல்படும் அய்மான் சங்க கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டினார். அய்மான் சங்க மலர் குறிஞ்சி மலர் போன்றது என்றார்.
 
பேராசிரியர் ஃபாரூக்
 
திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் அய்மான் சங்கம் வெளியிட்ட திருக்குர்ஆன் ஒலிநாடா பல்வேறு நாடுகளிலும் ஒலிப்பதைக் கண்டு அதற்குக் காரணமான அய்மான் சங்கத்தினரைப் பாராட்டினார். இஸ்லாம் பல்வேறு துறைகளில் முன்னோடியாய் இருந்து வந்துள்ளதை பல்வேறு உதாரணங்கள் மூலம் விவரித்தார்.
 
நோபிள் மரைன் சாகுல் ஹமீது
 
அய்மான் மேற்கொண்டு வரும் சமுதாயப் பணிகளுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இன்றைக்கு பல்வேறு அமைப்புகள் புதிது புதிதாக முளைத்து வந்தாலும் நாம் அனைவரும் ஓரணியில் திரண்டால் மட்டுமே நமது பலத்தை வெளிப்படுத்த முடியும், இது குறித்து பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இனிமேலும் காலம் தாழ்த்தினால் நாம் தான் அதன் பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும் எனக்கூறினார்.
 
அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் மீலாது விழாக்களில் அமீரகத்தில் எதிர்காலத்தில் சகோதர சமுதாயப் பிரமுகர்களை அழைத்து நடத்த வேண்டும் என ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
 
இரவாஞ்சேரி முஹம்மது இக்பால் நன்றியுரை கூற தளபதியின் துஆவுடன் விழா நிறைவுற்றது.
 
விழாவில் அய்மான் சங்க நிர்வாகிகள் சிட்டிசன் அப்துல் மஜீது, சம்சுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள், ஈமான் சங்க நிர்வாகிகள், பல்வேறு ஜமாஅத் நிர்வாகிகள், அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
 
தகவல் : முதுவை ஹிதாயத் ( எம். என்.ஏ.)
 
 
பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் 'துபாய்' குறித்து நூலொன்றைத் தயாரிக்கும் பணியில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் ஈடுபட்டுள்ளார்.
 
இதில் துபாயில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகள், ஜமாஅத்துகள் குறித்த தகவல்கள், துபாய் பற்றிய பல அரிய தகவல்கள் இந்நூலில் இடம்பெற இருக்கின்றன.
 
துபாய் குறித்து தங்களுக்குத் தெரிந்த பல்வேறு தகவல்களையும் அறியத் தருவதன் மூலம் இந்நூல் மேலும் சிறப்புறும்.
 
தொடர்புக்கு
 
பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக்
நன்னெறி பதிப்பகம்
எண் 17-18 பி, பாறையடி தெரு
அஞ்சுவண்ணம்
திருவிதாங்கோடு 629 174
கன்னியாகுமரி மாவட்டம்
தொலைபேசி : 04651 - 248911
 
அமீரகத்தில் தொடர்புக்கு : 055 4067047
 
 
ஓமன் நாட்டில் தங்களது விசா காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் எவ்வித அபராதமுமின்றி நாட்டை விட்டு வெளியேற அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 8,000 இந்தியர்கள் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
 
கடந்த வருடம் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட போது 15,000 இந்தியர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து 13,900 பேர் நாட்டை விட்டு வெளியேறினர். தற்பொழுது 5541 பேர் வேலைக்கான விசாவில் வந்து அவ்விசா முடிந்த பின்னரும் புதுப்பிக்காமல் தங்கியுள்ளனர்.2603 பேர் விசிட் விசாவில் வந்து அது காலாவதியான பின்னரும் தங்கியுள்ளனர். இத்தகவல் இந்திய தூதர் அனில் வத்வா செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்
 
தகவல் : முதுவை ஹிதாயத்
கீழக்கரைஅரபு கல்லூரி பட்டமளிப்பு விழா

அரபு கல்லூரி

கீழக்கரையில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு 1671-ம் ஆண்டு மேலத்தெருவில் இஸ் லாமிய மார்க்க மகான் சதக் கத்துல்லா அப்பா என்பவ ரால் அரபு கல்லூரி தொடங் கப்பட்டது. இந்த கல்லூரிக்கு அல்மதரசத்துல் அரூஸிய்யா தைக்கா அரபிகல்லூரி என்று பெயர்.

இங்கு அரபு மொழி கல்வி கற்கும் ஆலிம், உலமாக்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது. இந்த கல் லூரியை தைக்கா சாகிபு ஒலியுல்லா மற்றும் மார்க்க மாமேதை செய்யது முகமது மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் ஆகியோரின் வாரிசு கள் நிர்வகித்து வருகின்ற னர்.

பட்டமளிப்பு விழா

இந்த கல்லூரியின் மவுலவி ஆலிம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிரஸ்டி அல்ஹாஜ் டி.எம்.அகமது அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். சென்னை சுலைமான் அறக் கட் டளை தலைவர் அல்ஹாஜ் கே.எஸ்.எம்.சாகுல்ஹமீது ஆலிம் முன்னிலை வகித்தார். அல்மதரஸத்துல் அரூஸிய்யா தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் கே.டி.எம். அகமது முஸ்தபா வரவேற்று பேசினார். டிரஸ்டி டி.எஸ்.ஏ.ஹமீது அப்துல் காதிர் அறிமுக உரையாற்றி னார்.கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி வாசல் கத்தீபு எம்.அஜ்மத் உசேன் ஆலீம் தொடக்க உரையாற்றினார். காயல்பட்டிணம் மதரஸா மஹ்ரத்துல் காதிரியா அரபி கல்லூரி முதல்வர் எஸ்.கலந் தர் மஸ்தான் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பேசி னார்.

விழாவில், கல்லூரி மேனே ஜிங் டிரஸ்டி அல்ஹாஜ் டாக் டர்.தைக்கா சுஐபு அலீம் கலந்து கொண்டு மாண வர்களுக்கு மவுலானா மவு லவி பட்டங்களை வழங்கி பேசினார். இதில் தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் தைக்கா அகமது ஷாகீர், கீழக் கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி பேராசிரியர் எம்.ரபீக் அகமது, அல்மதரசத்துல் அரூ ஸிய்யா தைக்கா பேராசிரி யர்கள் கே.ஏ.முகைதீன் அப் துல் காதர், எச்.முகைதீன் அப்துல்காதர், எம்.ஐ.முகமது சுல்தான், எஸ்.எஸ்.சலாஹூ தீன் ரிபாயி ஆகியோர் வாழ்த்தி பேசினர். டிரஸ்டி, அல்ஹாஜ் தைக்கா முகமது அஷரப் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

கலந்து கொண்டோர்

விழாவில் சீதக்காதி அறக் கட்டளை செயலாளர் காலித் ஏ.கே.புகாரி, இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனங்களின் நிர்வாகி ஷாக் கிர், உஸ்வத்துன் ஹசனா சங்க செயலாளர்எம்.கே.எம்.அசன் தம்பி, கே.வி.எம்.கïம், இஸ் லாமி பைத்துல்மால் -குத்பா கமிட்டி செயலாளர் மைதீன் தம்பி, டாக்டர்.செய்யது அப் துல்காதர், என்.டி.எம்.அகமது பாரூக், சா.கி.மு.ஹபீபு முக மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஹமீது சுல்த்தான் ஆலிம் அரூஸி உள்பட பல ருக்கு மவுலானா மவுலவி பட்டங்களும் மற்றும் அவர் கள் படித்த கல்வி படிப்புக் கான பட்டங்களும் வழங்கப் பட்டது. முடிவில் கல்லூரி முதல்வர் சலாகுதீன் ஆலிம் நன்றி கூறினார். கீழக்கரை மேலத்தெரு பள்ளிவாசல் இமாம் அல்ஹாஜ் எஸ்.ஏ.முக மது ஆரிப் ஆலிம் துஆ ஓதி னார்.
 

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com