துபையில உலகின் முதல் இஸ்லாமிய தமிழ்த் தொலைக்காட்சி துவக்கம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் 'கிரஸெண்ட் டிவி' எனும் உலகின் முதல் இஸ்லாமிய தமிழ்த் தொலைக்காட்சி துவக்க விழா 23.06.2006 வெள்ளிக்கிழமை எவரெஸ்ட் இண்டர்நேஷனல் ஹோட்டலில் 'கிரஸெண்ட் டிவி' இயக்குநர் காயல் இளவரசு தலைமையில் நடைபெற்றது.
கிரஸெண்ட் டிவியின் முதல் ஒளி(லி)பரப்பை ETA அஸ்கான் குழுமத்தின் மேலாண்மை இயக்குநரும், துபை ஈமான் அமைப்பின் தலைவருமான அல்ஹாஸ் சையத் எம் ஸலாஹுத்தீன் துவக்கி வைத்தார். அவர் தனது தலைமையுரையில் தனது எண்ணத்தில் உதித்த இத்திட்டத்தை செயல் வடிவாக்கியுள்ள காயல் இளவரசைப் பாராட்டியதுடன் இச்சேவை சிறப்புற அணைவரும் தங்களது ஒத்துழைப்பை நல்கிட கேட்டுக் கொண்டார்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ்இத்தொலைக்காட்சி சிங்கபூரிலிருந்து தனது சேவையினைச் செய்து வருகிறது.
இந்தியா,வளைகுடா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் இத்தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காணலாம் என இதன் இயக்குநர் காயல் இளவரசு தெரிவித்தார். உலகின் முதன் முதலாக ஒளிபரப்பாகும் இஸ்லாமிய தமிழ் தொலைக்காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Yamal - 202, 49 டிகிரி கிழக்கு நோக்கி இதன் அலைவரிசை அமைந்துள்ளது. Frequency 3780 என்பது இதன் தொழில்நுட்பத் தகவல்.
இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் எ லியாகத் அலி, ஏ. முஹம்மது தாஹா, எஃப் எம் அன்வர் பாஷா, 'செல்வி' தொலைக்காட்சி தொடர் புகழ் பாலா, தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் பைஜி, தென்றல் டிவி இயக்குநர் சாதிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிரஸெண்ட் தொலைக்காட்சி பற்றி விபரமறிய 98 400 42255 மற்றும் 99 400 7860.0 ஆகிய தொபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.