முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்

இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனை


இடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில்
எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.


திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.


இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல்
கைகாட்டுகிறது இலங்கை அரசு.

மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறுகிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது
மேலும் கூறியுள்ளது.


இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.


இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி
டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு
உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை
அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
 

100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர். புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.


எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப்
படுவது வேதனையல்லவா?


செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர்
கண்கள் குளமாகின.

அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி
ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர்
சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசுவோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.


விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலைநகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
 

அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இஸ்லாமிய ஏழுச்சி மையம் - ஷார்ஜா நடத்தும் 12வது

இஸ்லாமிய எழுச்சி மாநாடு

18.08.2006, வெள்ளிக்கிழமை

இடம்: இந்தியன் அஸோஷியேஷன் ஷார்ஜா

மாலை 4.30 முதல் இரவு 9.30 வரை

 

உரையும், நிகழ்த்துபவர்களும்

மனிதம்!! ஜலாலுத்தீன்

ஷாபானின் சிறப்புகள் - மெளவில அப்துஸ ஸமது மதனி

கேள்வி - பதில் - நாஸர் அலி கான்

வியாபாரம் - அப்துர் ரஹ்மான்

நிகழ்ச்சி ஏற்பாடு

இஸ்லாமிய எழுச்சி மையம் - ஷார்ஜா

ISLAMIC AWAKENING CENTRE (IAC) - SHARJAH

தொலைபேசி - 06.5628969, 050.5371918, 050.6374929, 050.6316748 

 
கோவையில் கூடிய ஜம்மியத்துன்னிஸா மகளிரணி

கோவை 05, ஆகஸ்ட் : நேற்று 04-08-2006 வெள்ளி அன்று மாலை 5.00 மணிக்கு MNP ளின் மகளிரணியான ஜம்மியத்துன்னிஸா சார்பில் "லெபனானை தாக்கும் யூத பயங்கரவாதம்" என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் கோவை மனித நீதிப் பாசறை மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் MNP ஜம்மியத்துன்னிஸா வை சேர்ந்த சகோதரி. ஹபீப் நிஸா அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார்கள்.

இஸ்ரேலின் அத்து மீறல்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஐநா சபையின் தீர்மானங்களுக்கு கட்டுப்படாத இஸ்ரேலை கண்டித்தும் பேசப்பட்டன. மற்றும் இக்கூட்டத்தின் முடிவில் கீழ்க்கண்ட திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

லெபனான் மற்றும் ஃபலஸ்த்தீன் மீத இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரவாத தாக்குதல்களை இக்கூட்டம் வண்மையாக கண்டிக்கின்றது.

யூதர்களும், அமெரிக்கர்களும் போட்ட "புதிய மத்திய கிழக்கு" என்ற திட்டத்தின் கீழ் இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இது அகண்ட இஸ்ரேல் என்ற திட்டத்தின் கீழ் தனது எல்லைகளை விரிவு படுத்தும் திட்டமாகும்.

ஐநா சபை உடனடியாக பன்னாட்டு படைகளை அனுப்பி இவ்வாக்கிரமிப்பையும் படுகொலைகளையும் தடுக்க வேண்டும்.

தற்போது லெபனானில் உள்ள ஐநா சபையின் அமைதி காக்கும் படையினரது மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை இக்கூட்டம் கண்டிக்கின்றது.

உலக நாடுகள் இஸ்ரேல் என்ற நாட்டுக்கு தந்திருக்கும் அங்கிகரத்தை ரத்து செய்ய வேண்டும்.

எந்த நிலையிலும் அமெரிக்க ஏகாதிபத்திய படைகளான நேட்டோ படைகளை லெபனானுக்குள் அனுமதிக்க கூடாது.ஏனெனில் அது யூதர்களின் இராணுவமாகவே செயல்படும்.

அழிக்கப்பட்ட லெபனானை கட்டியெழுப்ப உலக நாடுகள் முன்வர வேண்டும்.

லெபனான் மற்றும் ஃபலஸ்த்தீனுக்கு உதவ முன்வந்துள்ள பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை இந்த கூட்டம் பாராட்டுகின்றது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன. இக்கூட்டத்திற்கு பென்கள் திரளாக வருகை தந்திருந்தது இதை கண்டோருக்கு ஆச்சர்யத்தை எழுப்பியது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அபூர்வ உயிரினங்கம் படம் பிடிப்பு

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய வளம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆழ் கடலுக்கும் விசேஷ கேமிரா மூலம் அபூர்வ உயிரினங்கம் படமெடுக்கப்பட்டன.

அபூர்வ உயிரினங்கம்

தமிழகத்திலேய நீண்ட நெடிய கடற்பரப்பை கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்பரப்பின் மொத்த நீனம் 265 கிலோ மீட்டர் ஆகும். ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை உ்ளடக்கிய இந்த பகுதி மன்னார் வளைகுடா கடலில் உலகில் வேறு எங்கும் இல்லாத அபூர்வ ஆயிரத்து 337 வகை கடல் வாழ் உயிரினங்கங்கள்்ளன.

மேலும் இதேபோல 451 வகை அபூர்வ பவளப்பாறைகளும் உ்ளன. இந்த பவளப்பாறைகளும் பூங்காக்களில் கொத்துக்கொத்தாய் காணப்படும் பல வண்ண மலர்களை போல இருக்கும். இதுதவிர இந்த கடலில் மிக அபூர்வ கடல் தாவரங்க் புல் பூண்டுகளும் அதிகமாக வளர்ந்துள்ளன.

இந்த அபூர்வ கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், அரசு சார்பில் கடல் பூங்கா(மரைன் பார்க்) மற்றும் மன்னார் வளைகுடா அறக்கட்டளை ஆகியவை உருவாக்கப்பட்டு்ளன. இதற்காக மத்திய மாநில அரசு பல கோடி ரூபாய் செலவிட்டு வருகின்றன.

படம் பிடிப்பு

இந்த ஆழ்கடலுக்கும் காணப்படும் அபூர்வ உயிரினங்களையும் பவளப்பாறைகளையும், தாவரங்களையும் படமெடுத்து பதிவு செய்வதற்கான விசேஷ லென்சு பொருத்தப்பட்ட அதிநவீன கேமிராக்க் மேற்கண்ட நிறுவனங்க் விலைக்கு வாங்கி உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக ஆழ்கடலுக்கு் படம் எடுக்கும் நிபுணர்க் கிடைக்காததால் இந்த கேமிரா பயன் படுத்தப்படாமல் இருந்தது. இப்போது கோவாவை சேர்ந்த படம் எடுக்கும் நிபுணர்க் இதற்கென வரவழைக்கப்பட்ட்ளனர்.

இந்த மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 குட்டி தீவுக் உ்ளன. இந்த தீவுகளை சுற்றிதான் மேற்கண்ட கடல் வளம் அடர்ந்து செரிந்து குவிந்து்ளது. புகைப்படம் எடுக்கும் நிபுணர்க் சிறிய படகில் ஆழ்கடலுக்கும் சென்று நீந்தி அபூர்வ காட்சிகளை படம் எடுக்கிறார்க். இந்த படங்க் தத்ரூபமாக அழகாக உ்ளதாக அதிகாரிக் தெரிவித்தனர்.
 

நன்றி: தினத்தந்தி

முந்தைய பகுதி


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com