முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்

ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் முதல்வர் உத்தரவு

முதல்வர் டாக்டர்.கலைஞர்


சென்னை:தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டிக்கு உறுப்பினர்களை முதல்வர் கருணாநிதி நியமித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு:

  • ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி
  • ஜே.எம்.ஆரூண் எம்.பி.
  • முகவை ஹாசன் அலி எம்.எல்.ஏ.
  • கீழக்கரை நகராட்சி தலைவர் பஷீர் அகமது,
  • பழநி நகராட்சி துணைத் தலைவர் ஹக்கீம்,
  • அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுலைமான் பாட்ஷா
  • தலைமை காஜி (ஜியா) குலாம் முகமது மேடி கான்,
  • சாமியத் இ அன்வருல் உலுõமைச் சேர்ந்த முகமது ரகூல் ஹக்,
  • வேலூர் அராபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லானா மவ்லவி முகமது இலியாஸ்,
  • தமிழ்நாடு ஹஜ் சேவை சங்கத்தின் முகமது காசிம்,
  • பர்வீன் டிராவல்ஸ் அப்சல் சாகிப்,
  • பிரசிடன்ட் ஓட்டல் அபுபக்கர்,
  • டாக்டர் அன்வருல்லா


ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன் அரசு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தமிழக அரசு இணையம்

த.மு.மு.க அமீரகத் தலைவர் நாகைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு

 

அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் சென்றிருந்த நாகப்பட்டிணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் தாயகம் செல்லும் வழியில் துபாய்க்கு இரண்டு நாள் பயணமாக வருகைப்புரிந்தார். அவரை முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமீரகத்
தலைவர் அப்துல் ஹாதி 19.11.06 அன்று சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.


குறிப்பாக இராஜேந்திர சச்சார் கமிட்டி முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு பரிந்துரை செய்துள்ள இட ஒதுக்கீட்டு முறையினை மத்திய, மாநில அரசுகள் முழு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்த வேண்டுமெனவும், பல ஆண்டுகளாக விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழகத்திலிருந்து வருகைப் புரிந்து ஏஜெண்டுகளால் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் அப்பாவி மக்களின் அவல நிலை தொடராமல் இருக்க தமிழக அரசு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் அமீரகத் தலைவர் கோரிக்கை வைத்தார்.


இதற்கு பதிலளித்த எம்.பி.விஜயன் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த ஓட்டுகளை ஒருங்கிணைத்துதோடு மட்டுமல்லாமல், மிகச் சிறப்பாக களப்பணியாற்றி திமுக-வின் வெற்றிக்காக பாடுபட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்ற கழக ரீதியாக மத்திய அரசை வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல் தனக்கு அறிமுகமான மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதன் அவசியத்தை விளக்குவதாகவும் கூறினார்.

நீதிமன்ற தீர்ப்பினைக் கூட பொருட்படுத்தாமல் சிறையில் வாடும் முஸ்லிம்களை ஜாமீனில் விட மறுத்த அதிமுக அரசின் கடந்த கால ஆட்சியினை நினைவு கூர்ந்த விஜயன் அவர்கள், நாடாளுமன்றத்தில் அப்துல் நாஸர் மதானி ஜாமீனில் விடுதலையாவதை கண்டித்துப் பேசிய பாஜக தலைவர் அத்வானிக்கு எதிராக குரல் கொடுத்ததையும் பகிர்ந்துக் கொண்டார்.


இந்த சந்திப்பின் போது கீழை.ஹஸன், அஜ்மான் மண்டலச் செயலாளர் பொறியாளர் இர்ஃபான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

http://www.tmmkuae.org/

மரபணு மாற்றம் செய்த பி.டி. ரக நெற்பயிர் அழிப்பு


கோவை, நவ. 11: கோவை அருகே பயிரிடப்பட்டிருந்த மரபணு மாற்றம் செய்த
பி.டி. ரக நெற் பயிர்களை அகற்றி ஆலாந்துறையில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இந்த ரகப் பயிர்கள் விஷத் தன்மை கொண்டது எனவும், உடல் நலத்துக்கு கேடு விளைவுக்கும் என்றும் கூறி அவற்றை அழித்தனர். கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே உள்ள ராமநாதபுரத்தில் தனியார் விதை நிறுவனம் ஒன்று 20 ஏக்கர் நிலத்தில் பல்வேறு வகையான நெல் ரகங்களை பயிரிட்டு சோதனைக் களம் அமைத்துள்ளது. இங்கு 20 சென்ட் நிலத்தில் மரபணு மாற்றம் செய்த பி.டி. ரக நெல் பயிரிடப்பட்டு உள்ளது.


இவற்றை தமிழக விவசாயிகள் சங்கம், உழவர் உழைப்பாளர் கட்சி, இயற்கை வேளாண்மை இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்த 100-க்கு மேற்பட்டோர் வயலில் இறங்கி பி.டி. ரக நெல் பயிரை அகற்றினர். இதனால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியது.


இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து நிருபர்களிடம் கூறியது:
அதிக மகசூல் பெற முடியும் எனக் கூறி ஆந்திரம், மகாராஷ்டிரத்தில் பி.டி. ரக பருத்தி விதைகளை விற்பனை செய்தனர். ஆனால், மகசூல் இல்லாத காரணத்தால் கடன் வாங்கி பருத்தி பயிரிட்ட ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் பருத்தி விவசாயிகள் குறைவு என்பதால் தற்போது நெல் விதைகளை இங்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
 

இந்த நெல் விதைகள் ஒரு முறை மட்டுமே முளைக்கும் தன்மை உடையது. அறுவடை செய்யும் நெல்லை விதைக்குப் பயன்படுத்த முடியாது. இந்த பி.டி. ரக நெல் விதைகள் பூச்சி, நோய் தாக்காதவாறு செறிவூட்டப்பட்டவை. இவை மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் கேடு விளைவிப்பவை. நமது பாரம்பரிய விதைகளை அழித்து பி.டி. ரக விதைகளை பரப்பும் முறையில் வெளிநாட்டு நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. பி.டி. ரக நெல் பயிரிட்டால் அந்த வய−ல் பிற பயிர்களை சாகுபடி செய்ய முடியாது.


பி.டி. ரகத்தில் தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறிகளின் விதையையும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். இவற்றை விவசாயிகள் அனுமதிக்கக் கூடாது. ஆலாந்துறையில் குத்தகைக்கு நிலத்தை பெற்று தனியார் விதை நிறுவனத்தினர் பி.டி. ரக நெல் பயிரிட்டுள்ளனர். இந்த விதையின் தன்மைகள் குறித்து அந் நிறுவனத்தினர் நில உரிமையாளருக்கு தெரிவிக்கவில்லை.


இந்த விதையின் பாதிப்புகள் குறித்து வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அரசுக்குத் தெரிந்தும் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு பசுமை இயக்கத் தலைவர் வி.ஜீவானந்தம்: மரபணு மாற்றம் செய்த பயிர்கள் சுற்றுச்சூழலுக்கும், பல்லுயிர் பெருக்கத்துக்கும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
அமெரிக்காவில் இவ்வகையான தானியங்களைச் சாப்பிட்ட 1,500 பேர் ஊனமடைந்துள்ளனர். 37 பேர் இறந்துள்ளனர்.
 

ஆலாந்துறையில் உள்ள சோதனைக் களத்தில் எந்த பாதுகாப்பு வழிமுறைகளும் இல்லாமல் பயிரிடப்பட்டு உள்ளன. பி.டி. ரக நெல் விற்பனை செய்யப்படும் பாக்கெட்டுகளில் விதைகள் குறித்த விவரம் இல்லை. தமிழகத்தில் 10 இடங்களில் பி.டி. ரக நெல் பயிரிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிகளில் பயிரிட்டுள்ள பி.டி. ரக பயிர்களையும் அழிப்போம் என்றார்.
 

நன்றி: தினமணி

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com