|
சென்னையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய
ஏழாம் மாநாடு இஸ்லாமிய இலக்கியக் கழகம்
அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம்
மாநாட்டை எதிர்வரும் மே மாதம் சென்னையில்
நடத்த திட்டமிட்டுள்ளது. (தேதி பின்னர்
அறிவிக்கப்படும்)
இம்மாநாட்டில் பல்வேறுதுறைகளில்
ஆய்வரங்கம் நிகழ்த்த முடிவு
செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு மலரும்
தயாராகிறது. அதற்காக கதை, கவிதை,
கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
இஸ்லாமிய இலக்கியத்தில் முனைவர்,
ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்டம்
பெற்றோர்க்கு பாராட்டு அளிக்கப்படும்.
பட்டம் பெற்றோர் விவரங்களை அனுப்பி வைக்க
வேண்டுகிறோம்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்குப்
பங்களிப்பைச் செய்தோரைப் பற்றிய
விவரங்களைத தரும் 'யார் எவர்?' நூலும்
தயாராகிறது. இந்நூலில் இடம் பெற விரும்பும்
இலக்கிய அன்பர்கள், தங்கள் பெயர், பிறந்த
நாள், ஊர், கல்வி, பணி, ஆக்கங்கள் ஆகிய
விவரங்களோடு, புகைப்டத்தையும் அனுப்ப
வேண்டுகிறோம்.
தொடர்பு முகவரி
முனைவர் ஹ.மு. நத்தர்சா
(துணைப் பொதுச்செயலாளர், இஸ்லாமிய
இலக்கியக் கழகம்)
தமிழ்த்துறை, புதுக்கல்லூரி,
இராயப்பேட்டை - சென்னை 600 014
அலைபேசி - 944176646 |