- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மலேசிய சித்தார்கோட்டை முஸ்லிம் சங்கத்தின் மூன்றாம் குடும்ப தின விழா

கோலாலம்பூர், பிரிக்ஃபீல்டில் உள்ள விவேகானந்தா பள்ளிவளாகத்தின் ‘கந்தையா மண்டபம்’ காலையிலேயே களை கட்டிவிட்டது. லை 8 மணிக்கே மலேசிய சித்தார்கோட்டை முஸ்லிம் சங்கத்தின் தலைவர் ஹாஜி கமருஸ்ஸமான், ஹாஜி புர்க்கான் அலி, ஜனாப் கனி உள்ளிட்ட அனைவரும் ஆஜாராயிருந்து வருபவர்களை வரவேற்கக் காத்திருந்தனர். காலை 10 மணிவாக்கில் ஓரளவு கூட்டத்துடன் விழா தொடங்கியது.ஞாயிறு பல வகையில் மலேசியாவில் சிரமமான நாள். வாரத்தின் அனைத்து அலுவல்களையும் அந்த நாளைக்கு ஒத்திபோட்டு எதை முதலில் செய்வது என்ற குழப்பத்திலேயே நாள் ஓடிவிடும்! வியாபாரிகள் அனுதினமும் அதிகாலையில் எழுந்து நாள் முழுக்கப் பம்பரமாய்ச் சுழல வேண்டியிருப்பதால், ஞாயிறு அன்று சற்றுத் தாமதமாகவே எழ முடிகிற யதார்த்தம்!

மேலும் பினாங்க், சபாக்பெர்னம், தைப்பிங்க் போன்ற தொலைவில் உள்ள ஊர்களில் இருந்து வருபவர்களும் சற்றுத் தாமதமாகத்தானே வரமுடியும்?

ஒவ்வொரு குடும்பமாக வந்து சேர்ந்து கொன்டிருந்தாலும், 12 மணிக்கெல்லாம் மண்டபம் நிறைந்துவிட்டது.

 

 


ஹபீப் ஆலிமின்

வாழ்த்துரை சுருக்கமாக இருந்தாலும் முஸ்லிம் ஆண் மற்றும் பெண்ணுக்கான இஸ்லாமியச் சூத்திரத்தை நேரடியாகத் தொட்டுக் காட்டி நெஞ்சில் பதிய வைப்பதாய் அமைந்தது.ஒரு முஸ்லிம் பெண்

 

 

  1. தொழுகை

  2. நோன்பு

  3. கணவருக்குப் பணிந்து தொண்டூழியம் செய்தல்

  4. தன் கற்பைக் காத்துக்கொள்ளல்

இந்நான்கும் கைக்கொண்டால், மறுமையில் அவருக்கு சொர்க்கமே என்றும்

ஒரு முஸ்லிம் ஆண்

  1. தான் உண்ணும் சிறந்த உணவை தன் மனைவிக்கு வழங்கவேண்டும்

  2. தான் உடுத்தும் சிறந்த உடையை தன் மனைவிக்கு வழங்க வேண்டும்

  3. மனைவியை அருவருப்பான வார்த்தைகளால் ஏசக்கூடாது; பிறர்முன்னால் கண்டிக்கக்கூடாது- தனியறையில் வைத்தே புத்தி சொல்லவேன்டும்

  4. முகத்தில் அடிக்கக் கூடாது.

அடுத்து பேராசிரியர் டாக்டர். ர. காதர் இபுறாஹிமதன் சிறப்புரையை நிகழ்த்தினார்.

…. பேராசிரியரின் உரை இப்படி அறிவார்த்தமாக நீண்டு அனைவரையும் நிறைவு படுத்தியது.


பிறர் காசுகொடுத்துக் கேட்கும் இத்தகைய பேருரையை நேரில் வந்து இலவசமாகக் கேட்க முடியாத நம்மவர்கள் நஷ்டவாளிகளே- இதை நான் என் உரையிலும் குறிப்பிட்டேன்.
இவ்வுரையுடன் பகலுணவு- லுஹர் தொழுகை இடைவெளி.


உணவு இடைவேளை முடிந்தவுடன் ஜனாப் ஹஸன் அவர்களின் ‘மேஜிக் ஷோ’ ஆரம்பித்தது.


விழா நிறைவுரை ஆற்ற நான் அழைக்கப் பட்டேன். சென்ற ஆண்டு குடும்பதின விழாவின் தொடர்ச்சியாகவே என் உரையை அமைத்துக் கொண்டேன்.
உரைச் சுருக்கம்:

என் உரைக்குப்பின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.


சில விழாத்துளிகள்:

  1. நம்மூரின் பெரும்பாலான முக்கியத் தொழிலதிபர்கள் நேரம் ஒதுக்கி விழாவில் கலந்துகொண்டனர்.

  2. சங்கத்தின் சந்தாவாக ஆன்டுக்கு ஒருமுறை வசூலிக்கப் படும் தொகை, அப்படியே செலவிடப்படாமல் வங்கியிருப்பில் வைக்கப் பட்டுள்ளது.

  3. மலேசியா வாழ் நம்மூர்வாசிகளுக்கான பல அரிய முற்போக்குத் திட்டங்களை சங்கம் – காலத்துக்கேற்ற வகையில் தயாரித்து வைத்திருக்கிறது. அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; தங்கள் ஒத்துழைப்பை முழுமையாக நல்க வேண்டும்.

  4. இன்ஷா அல்லஹ் அடுத்த ஆண்டு குடும்ப தின விழா இன்னும் சிறப்பாக அமைய அனைவரும் துஆ செய்யவேண்டும்!

  5. அன்று பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நடைபெற்றதால் சிலர் விழாவுக்கு வரமுடியவில்லை; என்றாலும் ஹாஜி முஹம்மது ரஷீத், ஜனாப் மெர்டேகா அஹ்மத் இபுறஹிம் போன்றோர் விழாவுக்கு வந்து பகல் நேரம் வரை இருந்து கௌரவித்துச் சென்றார்கள் என்பது சங்கத்தை கண்ணியப் படுத்திய நிகழ்வாகும்.

  6. [1]ி்ச்ி ப் ்கள் [1]