- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

இவர்களுக்காகவும் பிரார்த்திப்போம்!

அல்லாஹ்வின் அருட்கொடைகளைச் சுமந்த இன்னொரு ரமலான் பிறந்து வளர்ந்து வருகிறது!

பசித்திருந்து, விழித்திருந்து நாம் முன்வைத்த பிரார்த்தனைகளின் பலத்தில் அவனது ரஹ்மத்தையும், மன்னிப்பையும் இரண்டு பத்துகளில் பெற்றுக் கொண்ட நாம், நரக நெருப்பிலிருந்து விடுதலை கோரும் கடைசிப் பத்தில் நுழைந்திருக்கும்போது இம்மாத நர்கிஸ் இதழ்விரிக்கிறது!

இந்தப் பத்தின் ஒற்றைப் படை எண் ஒன்றில்தான் லைலத்துல் கத்ர் இரவு வருகிறது!

இந்த இரவில் அடியான் கேட்கும் எந்தப் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து கூடுதல் மகிமை உண்டு!

பலாபலன் -பரிசளிப்பு உண்டு!

நாம் எல்லோருமே, நமக்காக – நம் குடும்பத்துக்காக, நமது உற்றம் சுற்றத்துக்காக நிச்சயமாக மன்றாட  விருக்கிறோம்!

அதனை சிறப்பாக நினைவுபடுத்தத் தேவையில்லை!

ஆனால், இந்த வேளையில் நினைவு படுத்தப் பட வேண்டிய சில பொதுத் தேவைகள் உள்ளன! நமது நாட்டின் வடக்கு எல்லையில் – காஷ்மீரில் பல ஆண்டுகளாக அணையாத நெருப்பாகக் கனன்று  கொண்டிருக்கும் வன்முறை இப்போது பெருந்தீயாகப் பற்றிப் பிடித்திருக்கிறது!

அதுதொடர்பில் வரும் செய்திகள் பரஸ்பரக் குற்றச் சாட்டுகளாக இருக்கின்றன. ஆனால், அன்றாடம்  கொல்லப் படுபவர்களோ அப்பாவிகளாகவே இருக்கிறார்கள் என்று செய்திகள் அறைகூவுகின்றன!

இப்போதுமட்டுமல்ல, எப்போதுமே இருதரப்புத்  துப்பாக்களிலிருந்தும் புறப்படும் குண்டுகள் நிரபராதிகளைத் தானே குறிவைக்கின்றன!

நன்றி: நர்கிஸ் – தலையங்கம் – செப்டம்பர் -2010