Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2011
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,986 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஏற்பது இகழ்ச்சி அல்ல!

சமச்சீர் கல்வியை இந்தக் கல்வியாண்டு முதலாகவே அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உயர் நீதிமன்றம் இதைத்தான் சொன்னது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது, ஒரு நிபுணர் குழுவை அமைக்க ஆலோசனை வழங்கி, உயர் நீதிமன்றத்திலேயே அந்தக் குழுவின் பரிந்துரைகளைத் தாக்கல் செய்யச் சொன்னது உச்ச நீதிமன்றம். அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் இதில் தீர்ப்பு வழங்கும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,095 முறை படிக்கப்பட்டுள்ளது!

உடற்பயிற்சியும் சில உண்மைகளும் !

உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று. உடல் கொஞ்சம் வெயிட் அதிகமாகிவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சாப்பாட்டைக்குறை, உடற்பயிற்சி செய் என ஏகப்பட்ட அறிவுரை.

நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது.

மேலும், நாம் டி.வி.யில் காணும் சில விளம்பரங்கள் “பதினான்கு நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம்” என்றும், மற்றும் சில விளம்பரங்கள் “தினமும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,530 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்னாசியின் அருமை

அழகான அமைப்புடைய அன்னாசிபழம் தோன்றியது தென் அமெரிக்க நாடான பிரேசில். அங்கிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு பரவியது. கொலம்பஸ் இந்தியாவென்று எண்ணி மேற்கிந்திய தீவுகளுக்கு வந்தவர் இந்த அன்னாசியை ஐரோப்பியாவுக்கு கொண்டு சென்றார். பதினாறாம் நூற்றாண்டில் இந்தப்பழம் உலகெங்கும் பரவியது. 1548 ல் ஐரோப்பிய வியாபாரிகளால் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று ஹவாய் தீவுகளில் தான் அன்னாசி, உலகிலேயே அதிக அளவில் பயிரிடப்படுகிறது. உலக உற்பத்தியான 1.75 மில்லியன் டன்களில் 45 சதவிகிதம் ஹவாய் தீவுகளில் பயிரிடப்படுகிறது. ஹவாய் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,613 முறை படிக்கப்பட்டுள்ளது!

படிப்புக்கு ஒரு ஞானசேகரன்!

எந்த சூழலிலும் படிக்கலாம்; ஜெயிக்கலாம் என்பதற்கு ஞானசேகரன் சாட்சி. பெயருக்கு ஏற்றவாறு ஞானமுள்ளவர்தான். அதனால்தான் ப்ளஸ்டூவில் 1154 மதிப்பெண் எடு த்து மருத்துவ கட் ஆஃப் 199.25 மதிப்பெண்களுடன் கோவை மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டத்தில் சூரியபாளையத்தில் இருக்கிறது ஞானசேகரனின் சிறிய வாடகை வீடு. தமிழக அரசின் இலவச டி.வி.யும், கேஸ் அடுப்பும்தான், வீட்டிலிருந்த விலையுயர்ந்த பொருட்கள். தன்னுடைய குடும்பக் கதையை ஞானசேகரனே சொல்கிறார்.

‘என் அப்பா வீட்டிலேயே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,760 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூதாட்டி தந்த தன்னம்பிக்கை

டாக்டர் கலாம்

அந்தமிகப்பெரும் அழிவை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அதைப் போன்ற ஓர் இயற்கைப் பேரழிவை நவீன சரித்திரத்தில் இந்தியா கண்டதும் இல்லை. மனமகிழ்ச்சியைத் தரும் மக்களின் நண்பனாய், மீன் வளத்தை அள்ளித் தரும் தோழனாய், கடற்கரை வாழ் மக்களின் மனதோடும் வாழ்வோடும் கலந்திருந்த அற்புதமான கடல், திடீரென்று இப்படி பிரமாண்டமாய்ப் பொங்கித் தன் அலை என்கிற வலையால் ஆயிரக்கணக்கான உயிர்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போகும் என்பது யாரும் நினைத்துக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,731 முறை படிக்கப்பட்டுள்ளது!

உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில

உலகின் மிகப்பெரிய ஒரு மில்லியன் டொலர் தங்க நாணயம் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் உலகின் மிகப்பெரிய வரைபடம்

உலகின் மிகப்பெரிய வரைபடம் என்றதும் ரொம்ப சாதாரணமாக நினைத்துக்கொள்ள வேண்டாம். இது உண்மையில் உலகம் அளவுக்கு மிகப்பெரிய வரைபடம்.

ஸ்டாக்ஹோம் ஓவியரான எரிக் நார்டென்கருக்கு ஒரு வித்தியாசமான ஐடியா உதித்தது. ஜிபிஎஸ் கருவிவின் உதவியுடன், உலகின் மிகப்பெரிய ஓவியத்தை வரைய முடியும் என நம்பினார் அவர்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,250 முறை படிக்கப்பட்டுள்ளது!

சில நேரங்களில் சில மனிதர்கள்

நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள். சிலர் பத்திரிகைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தார். அந்த சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத் தாண்டாதவர்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,850 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ்நாள் நீட்டிக்கப்பட வேண்டுமா ?

அதிரை ஏ.எம்.பாரூக்

وَاتَّقُواْ اللّهَ الَّذِي تَسَاءلُونَ بِهِ وَالأَرْحَامَ إِنَّ اللّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

…எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் 4:1

உறவைப் பேணி வாழுங்கள் என்றும் உறவுகளை அலச்சியம் செய்யும் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்றும் சாதாரண உபதேசமாக அல்லாமல் எச்சரிக்கையாகவே விடுக்கிறது இஸ்லாம்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,503 முறை படிக்கப்பட்டுள்ளது!

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை

பட்டப்படிப்பை முடித்து, அரசு வேலையை எதிர்பார்த்து காருத்திருப்போருக்கு மத்தியில், தனது கால்களையே கைகளாக்கி, மொபைல்போன் ரிப்பேர் செயய்யும் சுயதொழில் மூலம் சாதித்து காட்டி வருகிறார் மாற்றுத்திறனாளி ஒருவர்.சென்னை, கிழக்கு கொளத்தூர் சாலையில் மொபைல்போன் சர்வீஸ் கடையை நடத்துபவர் கே.முகமது அசைன், 32. பிறவியிலேயே இரண்டு கைகள் இன்றி பிறந்ததால், மனம் தளராமல் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து படித்தார்.

தன்னுடைய இரண்டு கால்களால் பேனாவை பிடித்து எழுதி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பின், பத்தாம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,644 முறை படிக்கப்பட்டுள்ளது!

எஸ்.எம்.எஸ்., மூலம் சேவை செய்யும் இளைய தலைமுறை

இளைய தலைமுறை, எப்போதும் மொபைல் போனில் வெட்டியாக அரட்டை அடிப்பதையும், விடிய விடிய எஸ்.எம்.எஸ்.,சில், “கடலை’ போடுவதையும், மொபைல் போன் வாங்கித் தரும் பெரியவர்கள் ரசிப்பதில்லை. இதற்கு மறுபக்கமும் உள்ளது என்பது போல், இளைஞர்கள் கூட்டம், குறுந்தகவலை, சமூக சேவைக்காக பயன்படுத்திக் காட்டியுள்ளது.சேலம் மாவட்டம், ஊஞ்சகாடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் தன் மொபைலில் இருந்து, தினமும் காலையில், 200 பேருக்கு, “தகவல் மேடை’ என்ற பெயரில், பொது அறிவு செய்திகளையும், மாலை, “உங்களின் . . . → தொடர்ந்து படிக்க..