- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

புனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருளும் சாந்தியும் நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள்; அனைவர் மீதும் உண்டாவதாக!

சிறப்புமிக்கதொரு மாதம் நம்மிடம் வந்துள்ளது. இது ஓர் உன்னதமான பருவ காலம் இம்மாதத்தில் அல்லாஹ் பெருமளவு கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கிறான். ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் இம்மாதத்தில் நன்மையின் வாயில்களை திறந்து விடுகின்றான். இம்மாதம் வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.

நோன்பு இஸ்லாமிய அடிப்படை கடமைகளில் ஒன்று

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம். (2:183)

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்ப்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

யார் நோன்பு என்ற இந்த கடமையை மறுக்கின்றாரோ அவர் காஃபிராகி விடுவார்.இஸ்லாமிய ஆட்சியில் திருந்தி பாவமன்னிப்பு தேடுமாறு கூறவேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் நம்பிக்கை கொண்ட பின் (முர்தத்)இஸ்லாத்தை விட்டு விலகிச்சென்றவன் என்ற அடிப்படையில் அவனைக்கொன்றிட வேண்டும். பிறகு அவனை குளிப்பாட்டவோ,கஃபனிடவோ, ஜனாஸா தொழுகை நடத்தவோ, முஸ்லீம்களின் கப்றுஸ்தானத்தில் அடக்கம் செய்யவோ கூடாது.

ரமழான் மாதத்தின் சிறப்புகள்

நோன்பின் சிறப்புகள் 

ரமழான் நோன்பு எப்போது ஆரம்பம்?

பிறை பார்த்து நோன்பை ஆரம்பிக்கலாம். அல்லது உலகின் ஏதாவது ஒரு பகுதியில் பிறை பார்கப்பட்டதாக உறுதியான தகவல் ஒரு நபரின் மூலம் கிடைத்தாலும்  ரமழான் நோன்பின்  வருகையை உறுதி செய்யலாம். பிறைபார்க்;க முடியாமல் மேக மூட்டமாக இருந்தால் ஷஅபான் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து ரமழானின் நோன்பை நோற்கலாம். இம்மூன்று வழி முறைக்கும் குர்ஆன் சுன்னாவில் தெளிவான, உறுதிமிக்க ஆதாரங்கள் உண்டு.

ஆனால் சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்க்கக்கூடாது. ரமழான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் உங்களில் யாரும் (சுன்னத்தான) நோன்பு நோற்க்கக்கூடாது. வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்ப்பவர் நோற்றுக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)

ரமழான் நோன்பு கடமையானவர்கள்

நோன்பை முறிக்கும் செயல்கள்

வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அதற்குரிய பரிகாரம்:

 

நோன்பாளிகளின் கவனத்திற்கு:‎

ரமழான் மாதத்தில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்:

 

மூவருடைய பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அம்மூவரில் ஒருவர் நோன்பாளி எனவே ரமழானில் தினமும் அதிகமாக துஆச்செய்ய வேண்டும். இந்த துஆக்கள் குறிப்பாக ஸஹருடைய நேரத்திலும், இஃப்தாருடைய நேரத்திலும், ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இருத்தல் வேண்டும். நாம் செய்யும் துஆக்களின் வாசகங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸில் இடம் பெற்றவையாக இருந்தால் மிகச் சிறந்தது.

  1. இம்மாதத்தில் நபி(ஸல்) வேகமாக வீசுகின்ற புயல் காற்றை விட அதிகம் தர்மம் செய்திருக்கின்றார்கள். எனவே நாம் அண்டை, அயலார்களுக்கும், ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், வறியவர்களுக்கும், மதரஸாக்கள், கல்வி ஸ்தாபனங்கள், அழைப்புப்பணி மையங்கள்; என நம்மை நாடி வருபவர்களுக்கு நம்மால் இயன்ற பொருளாதார உதவிகளைச் செய்ய வேண்டும்.
  2. முஸ்லீம்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய சட்ட திட்டங்களை அறியாதவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக கொள்கை (அகீதா) விஷயத்தில் பலஹீனமாக இருக்கின்றனர். எனவே குர்ஆன் ஹதீஸின் கருத்துக்களை ஸலஃபுஸ்ஸாலிஹீன்களின் புரிதல் அடிப்படையில் மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை படிப்பதற்கும், அவர்கள் ஆற்றிய உரைகளை கேட்பதற்கும் இம்மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  3. இஸ்லாமிய இணைய தளங்களை பார்த்து பயனுள்ள தகவல்களை சேகரித்து கௌ;வதுடன் மின் அஞ்சல் வழியாக நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ளவேண்டும்.
  4. இஃப்தார் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து மாற்று மத நண்பர்களை அழைத்து அவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
  5. கடைசி பத்து நாட்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்து ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவான லைலத்துல் கத்ரு இரவை அடைய முயற்ச்சிப்பது.
  6. மரணத்திற்கு பின் உள்ள வாழக்கைக்கு நம்மை தயார் படுத்திக்கொள்ள இம்மாதத்தை நன்கு பயன்படுத்திக் கொள்வோம்.

ரமழான் மாதத்தில் அவசியம் தவிர்க்க வேண்டிய தீய பழக்கங்கள்

உங்களுடைய கரங்களால் உங்களுக்கு அழிவை ‎தேடிக்கொள்ளாதீர்கள்!. (2:195), உங்களை நீங்களே ‎மாய்த்துக்கொள்ள வேண்டாம்.(4:29) நபி(ஸல்)அவர்கள் ‎‎கூறினார்கள் : நமக்கும் நாம் தீங்களிக்கக் கூடாது பிறருக்கும் ‎தீங்களிக்கக் கூடாது.(ஆதாரம் : இப்னு மாஜா, ஹாக்கிம்)‎

நபி(ஸல்) கூறினார்கள் : இந்த சமுதாயத்தில் பூமியினுள் ‎புதையுண்டு போவதும், கல்மாரி பொழிவதும், உருமாற்றமும் ‎ஏற்படும் இது அவர்கள் மது அருந்துவதினால், பாடகிகளை ‎வைத்து பாடல்களை கேட்டால், இசை கருவிகளை ‎உபயோகிப்பதால் அவ்வாறு நிகழும் (ஆதாரம் : திர்மிதி)‎

‎இப்னு ஹஸ்ம்(ரஹ்)கூறுகிறார் : அன்னியப்பெண்ணின் குரலை ‎கேட்டு ரசிப்பது முஸ்லீம்கள் அனைவர் மீதும் ஹராமாகும்.‎

குற்றவாளிகளைக் குறித்து- உங்களை ஸகர்(நரகத்தில்)நுழைய ‎வைத்தது ‎எது?(என்றுகேட்பார்கள்.)…(வீணானவற்றில்)மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம் எனக் கூறுவர்:(74 : 41,45)‎

நபி(ஸல்)கூறினார்கள் எவனொருவன்(சதுரங்கம்)செஸ் ‎விளையாடுகிறானோ அவன் தனது கையை பன்றியின் ‎‎இறைச்சியிலும் இரத்தத்திலும் நனைத்தவனைப்போலாவான் ‎‎(ஆதாரம் : முஸ்லிம்)‎

‎இது போன்ற அனைத்து தீய பழக்கங்களை விட்டும் ரமழானிலும் ‎அல்லாத நாட்களிலும் நம்மை பாதுகாதுகாத்துக்கொள்வோம்.‎

இறுதி பத்து நாட்கள், லைலத்துல் கத்ரு, இஃதிகாஃபின் சிறப்புகள்

‎(நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் ‎‎இரவெல்லாம் விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் ‎குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன் ‎மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள். (ஆதாரம்: புகாரி, ‎முஸ்லிம்)‎

நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; ‎நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே ‎‎இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் ‎தீர்மானிக்கப்படுகிறது.(43 : 3,4)‎

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் ‎கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு ‎என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) ‎‎இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் ‎மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் ‎கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் ‎‎இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை ‎உதயமாகும் வரை இருக்கும். (97:1-5)‎

‎ ‎யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ‎லைலத்துல் கத்ரு (இரவில்) நின்று வணங்குகிறாரோ ‎அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் ‎மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) அவர்கள் ‎‎கூறினார்கள்.(ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழான் மாதத்தின் கடைசிப் ‎பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ‎அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் ‎‎இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி) இந்த நபி மொழியிலிருந்து ‎பெண்களும் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதை அறிய ‎முடிகிறது.‎ ரமழானின் இறுதி பத்து நாட்களின் சிறப்பு குறித்து ஏராளமான நபி ‎மொழிகள் வந்துள்ளன.‎

‎ ‎மேலே கூறப்பட்டுள்ள நபி மொழிகளிலிருந்து ரமழானின் இறுதி ‎பத்து நாட்களின் சிறப்பை உணர முடிகிறது. ஒரு மனிதன் ‎லைலத்துல் கத்ரு இரவை அடைந்து விட்டால் 83 வருடங்கள் ‎செய்யும் அமலுக்கு கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் ‎கிடைக்கின்றது.‎

லைலத்துல் கத்ரு இரவு எப்போது?‎

ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படையான நாட்களில் ‎லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என ‎நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)இந்நபி ‎மொழியிலிருந்து நோன்பு 21,23,25,27,29 ஆகிய தினங்களில் ‎ஏதேனுமொன்றில் லைலத்துல் கத்ரு இரவை அடைந்து ‎கொள்ளலாம் என்பதை அறியமுடிகிறது. ஆனால் முஸ்லீம்களில் ‎பெரும்பாலோர் 27 ஆம் இரவுதான் லைலத்துல் கத்ரு என்று ‎எண்ணி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதை ‎காணலாம். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ‎‎(பித்அத்தான)வழிகேடான காரியமாகும்.‎

கடைசி பத்து நாட்களில்  ஓதவேண்டிய துஆ

أللهم إنك عفو تحب العفو فاعف عني

தமிழில்; : அல்லாஹ{ம்ம இன்னக்க அஃகப்;வுன் துஹிப்புல் அஃகப் வ ‎‎ஃகபஉஃகபு அன்னீ. ‎

பொருள் : இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். ‎மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. (ஆதாரம் : ‎திர்மிதி)‎

ஜகாத்துல்ஃபித்ர் பெருநாள் தர்மம்

நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ‎ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) ‎அவர்கள் ஜகாத்துல்ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம் : ‎அபூதாவூத்)‎

யாரின் மீது கடமை?‎

முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், குழந்தைகள், ‎அடிமை, சுதந்திரமானவர் என அனைவர் மீதும் ஜகாத்துல்ஃபித்ர் ‎பெருநாள் தர்மம் கடமை. உஸ்மான்(ரலி) அவர்கள் வயிற்றிலுள்ள ‎சிசுவிர்க்காகவும் இத்தர்மத்தை வழங்கி இருக்கின்றார்கள். பேணுதல் ‎அடிப்படையில் இவ்வாறு வழங்குவது குற்றமாகாது.‎

எவற்றை தர்மமாக வழங்க வேண்டும்?‎

நாம் எந்த உணவை உண்போமோ அதுபோன்ற உணவு ‎தானியங்களைத்தான் தர்மமாக வழங்க வேண்டும்.‎

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், ‎பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த ‎‎(தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், ‎நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;. ‎அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான ‎தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்;. ஏனெனில் (அத்தகைய ‎பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் ‎வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் ‎வாங்க மாட்டீர்கள்…(2:267) மேலும் ஆடையாகவோ, ‎பாத்திரங்களாகவோ, வேறு பொருட்களாகவோ, பணமாகவோ ‎வழங்குவது கூடாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் உணவு ‎தானியமாகத்தான் வழங்க கட்டளையிட்டுள்ளார்கள்.‎

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது ‎நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்)கூறினார்கள். நூல் : முஸ்லிம்.‎

‎‎ஜகாத்துல்ஃபித்ரின் அளவும், அது வழங்கப்படும் நேரமும், ‎அத்தர்மத்தை பெறத்தகுதியானவர்களும்:

‎ஜகாத்துல்ஃபித்ரின் அளவு 2கிலோ 500 கிராம் உணவு ‎தானியமாகும்.‎

நோன்புப் பெருநாள் இரவிலிருந்து மறுநாள் காலை மக்கள் ‎பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்பாக ஜகாத்துல்ஃபித்ர் ‎பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும். பெருநாள் அன்று ‎காலையில் நிறைவேற்றுவது சிறந்ததுமாகும். அல்லது ‎பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு ‎செய்வதற்க்கும் மார்க்கத்தில் அனுமதி உண்டு. ஆனால் பெருநாள் ‎தொழுகைக்குப் பிறகு இக்கடமையை நிறைவேற்றினால் ஏனைய ‎தர்மங்களில் ஒரு தர்மமாகவே கருதப்படும்.‎

‎ஜகாத்துல்ஃபித்ர் தர்மம் பெற்றிட தகுதியானவர்கள் ஏழைகளும், ‎நிறைவேற்ற முடியாத கடன் சுமை உள்ளவர்களும் ஆவார்கள். ‎‎இத்;தர்மத்தை ஒன்றுக்கதிகமான ஏழைகளுக்கும் வழங்கலாம். ‎அல்லது பலருடைய தர்மங்களை ஒரே ஏழைக்கும் வழங்கலாம்.  ‎‎(அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)‎

யா அல்லாஹ்! எங்களது தீன் பற்றிய அறிவு ஞானத்தையும் ‎அதன்படி அமல் செய்யும் பாக்கியத்தையும் எங்களுக்கு ‎வழங்குவாயாக! அதில் எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக! ‎‎இறை விசுவாசிகளாகவே எங்களை மரணிக்கச் செய்வாயாக! ‎மேலும் உத்தமர்களின் குழுவில் எங்களை சேர்ப்பாயாக! கருணை ‎மிக்க இறைவனே! உனது கருணையினால் எங்களுக்கும், எங்கள் ‎பெற்றோர்களுக்கும், அனைத்து முஸ்லீம்களுக்கும் பாவமன்னிப்பு ‎வழங்குவாயாக!‎

யாசிர் ஃபிர்தெளசி – ஜுபைல் தஃவா சென்டர் – சுவனச்சோலை.காம் [1]

_________________________________________________________________________________________________

‎இக்கட்டுரை தொகுக்க உதவிய நூல்கள் : ‎