- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

கொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி!

 கால்வாய் ஓரங்களில் கொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி வளர்க்கப்படும்

நம்முடைய பாரம்பரிய விஞ்ஞானம் கொடுத்திருக்கும் பச்சிலை பொக்கிஷங்களின் அருமையை நன்குணர்ந்த தமிழக முதல்வர் கொசுக்களைக் கட்டுப்படுத்த மகத்தான மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடிகளை வளர்ப்பதின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிறது.

நொச்சி பச்சிலையின் மகத்தான மருத்துவ குணம் ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியும். பழங்காலம் தொட்டு இன்று வரை வேப்பிலை மற்றும் நொச்சி இலை போட்டு (புகைமூட்டி) கொசுக்களை விரட்டுவது அன்றாட கிராமத்து தமிழனின் பழக்க வழக்கம்.

இந்த பாரம்பரிய அறிவியல் அறிவு இன்றைய மனிதனுடைய வசதியான வாழ்க்கைக்கேற்ற புதிய உபகரணங்களை தயாரிக்க தூண்டுகிறது. இதன் விளைவாக ரசாயன முறைப்படி நொச்சியின் சாறு எடுத்து அதிலிருந்து பல்வேறு பூச்சி கட்டுப்பாட்டு கலவைகளும் மற்றும் உபகரணங்களும் உருவாக்கப்படுகின்றன. தண்ணீருடன் சாறு எடுத்தல், பெட்ரோலிய நொச்சியை பொறுத்த வரை எல்லா கண்டுபிடிப்புகளும், அடிப்படை ஆராய்ச்சியோடு நின்றுவிட்டன. நொச்சியை கொசுக்களுக்கு உபயோகப்படுத்தும் யுக்திகளை ஆராய்ச்சி செய்யாத பல்கலைக் கழகங்களே நம் நாட்டில் இல்லை.

நொச்சியின் சாறிலுள்ள ரசாயன மூலப் பொருட்கள் கொசுக்களின் மருத்துவ மற்றும் கொசு விரட்டும் பண்புகள் உடையது. கொசு மற்றும் பூச்சிகளின் தொல்லைகளைக் குறைக்க இயற்கையான முறையில் வீடுகள்தோறும் மற்றும் நீர் வழித்தடங்களின் ஓரங்களில் நொச்சிச் செடிகள் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு சுகாதாரமான சூழ்நிலை உருவாக்கப்படும்.

நன்றி: மாலைமலர்

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் லைனோலியிக், ஒலியிக், பால்மிடிக் போன்ற கரிம அமிலங்கள், கரோட்டின், வைட்டமின் சி ஈரிடாய்டு குளுகோசைடு, குக்குபின், நெகுண்டோசைடு, நிசிண்டாசைடு போன்றன உள்ளன.

காசநோய் புண்களை குணப்படுத்தும்
இலைகள் உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.

மூட்டுவலிக்கு மருந்து
முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

குடல்பூச்சிகளுக்கு எதிரானது
வேர் சிறுநீர் போக்கு தூண்டுவி, சளி அகற்றும்.காய்ச்சல் போக்குவி, வலுவேற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது. வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது.

கல்லீரல் நோய்களுக்கு மருந்து
மலர்கள் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கனிகள் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

நன்றி: ஒன்இந்தியா

நன்றி: காகிதத்தில்