- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பல நாட்டு பழமொழிகள்!

   அமெரிக்க பழமொழிகள்

  1.      உலகில் புத்திமதிதான் இலவசமாக கிடைக்கும் சரக்கு
  2.      வெகுமதியும் தண்டணையுமே உலகை ஆட்சி செய்கின்றன.
  3.      நரியோடுசேர்ந்த சேவல் நன்மை அடையாது.
  4.      பழைய புத்தகங்களுக்கு வேர் நீளம்.
  5.      தேவையற்றதை வாங்காதே, தேவையானதை விற்காதே.
  6.      பெரிய சண்டைக்குப் பின்னால் பெரிய நட்பு இருக்கும்.
  7.      சொந்த் நாற்காலியில்தான்  சுகமாக உட்காரமுடியும்.

ரக்ஷ்ய பழமொழிகள்

  1.      பூண்டு ஏழு பிணிகளை தீர்க்கும்.
  2.      திருடின விறகும் எரியும்.
  3.      விக்கிரகங்கள் செய்பவன் அதை வணங்குவதில்லை.
  4.      நோயாளிக்கு தேனும் கசக்கும்.
  5.      பிறரை உள்ளன்புடன் நடத்துவது பெருந்தன்மையின் அடையாளம்.
  6.      மனைவிக்கு கணவனே சட்டம்.
  7.      பன்றி்க்கு உணவு நேரம் எது?.

    ஸ்பெயின் பழமொழிகள்

  1.       பெண்கள் கிடைததை விரு்ம்பமாட்டார்கள்,மறுத்ததையே விரும்பி வாடுவார்கள்
  2.       விருந்தினருக்கு முதுகுப் புறம்தான் அழகு.
  3.       அதிகம் பேசுகின்ற இருவர் நெடுந்தூரம் சேர்ந்து போக முடியாது.
  4.       கோழி ஊரெங்கும் கூவும், சேவல் குப்பை மேட்டில் இருந்துதான் கூவும்.
  5.       எது நன்மை என்பது அதை இழக்கு்போதுதான் தெரியும்.

இத்தாலி பழமொழிகள்

  1.       வாலைஆட்டினால்தான் நாய்க்குகூட உணவு கிடைக்கும்.
  2.       குழந்தை இல்லாதவனுக்கு அன்புதெரியாது.
  3.      இதயம் குறைவானால் நாவு அதிகம்.
  4.      நல்லது போனால் தெரியும் கெட்டது வந்தால் தெரியும்.
  5.       5.உன் பகைவனே உன்னை அறிவாளி ஆக்குபவன்.
  6.       6.தாமதித்து வருபவன் மிச்சம் உள்ளதையே உண்ணவேண்டும்.

கிரீஸ் பழமொழிகள்

  1.     இந்த உலகில் வாழவேண்டுமா எச்சரிக்கையுடன் இருங்கள்.
  2.     ஏழை உ ண்மையைச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.
  3.     பழிவாங்குதலைவிட மன்னித்தல் மேலானது.
  4.     அதிர்ஸ்டம் உள்ளவன் சேவலும் முட்டையிடும்.
  5.     நல்ல நடத்தையே சீரிய பண்பாக அமையும்.
  6.     ஈரமான விறகிலிருந்து மட்டுமல்ல எல்லா விறகிலிருந்தும் புகை வரும்.

ஆப்பிரிக்க பழமொழிகள்

  1.    பல ப்ழங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தால்,கடைசியில் அழுகிய ப்ழங்களைத்தான் வாங்க நேரிடும்.
  2.    மென்மையான சொற்கள் செல்வத்தைக் கொண்டுவரும்.
  3.    கம்புகள் கட்டோடு இருந்தால் அதை ஒடிக்க முடியாது.
  4.    செல்வம் தேயும்,கல்வி வள்ரும்.
  5.    பிச்சைக்காரனின் கோபம் அவன் தலையில்தான் விடியும்.
  6.    வீட்டுத் தலைவன்மீது எல்லோருடைய குப்பையும் கொட்டப்படும்.
  7.    நாயிடம் கடன் பட்டிருந்தால்,அதையும் அய்யா என்றுதான் அழைக்கவேண்டும்.

எஸ்டொனிய பழமொழிகள்

  1.  மல்ட்டுப் பசுவைவிட, பால் கொடுக்கும் வெள்ளாடு மேலானது.
  2.  நீ எதற்கு அஞ்சுகிறாயோ அது உன்னை எட்டிப் பிடித்துவிடும்.
  3.  உங்களை நேசிப்பவகளைவிட ,வெறுப்பவர்கள் இந்த உலகில் அதிகம் இருப்பதால்- பொறுமையோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
  4.  தொழில் தெரிந்தவனிடம்  வேலையே நடுங்கும்.
  5.  காலியாய் உள்ள தலைகள் எப்போதும் நிமிர்ந்தே நிற்கும்.

தொகுப்பு —எழிலன்.

தொடர்புடைய ஆக்கங்கள்

  1. குர்ஆனின் நற்போதனைகள்… [1]