- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

கவலையும் துன்பத்தையும் எவ்வாறு அணுகுவது (V)

இந்த உலகில் மக்களில் பலர் கவலைப்படுவது எல்லாம் தனக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பத்தை போக்குவது எப்படி என்பது தான். உண்மையில் இஸ்லாத்தில் சேர்ந்தால் – உண்மையான முஸ்லிமாக வாழ்ந்தால் சோதனை, துன்பம் இல்லாமல் வாழலாம் என்பது கிடையாது. ஆனால் உண்மை முஸ்லிமாக வாழ்ந்தால் அவனது மனம் பக்குவப்பட்டு ஒரு அதிசியமிக்கதாக ஆகிவிடுகிறது. ஆம் அவனுக்கு எந்த ஒரு இன்பமோ அல்லது பெரிய துன்பமோ ஏற்பட்டால் அவனது அன்றாட வாழ்க்கையையோ அல்லது மனதோ பெரிய பாதிப்படையாது. ஆம் அவன் இன்பம் ஏற்படும் போது இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். துன்பம் ஏற்படும் போது இறைவன் மீது பொறுமை கொள்கிறான். காரணம் இந்த உலகம் நிலையற்றது. நிலையான மறுமை வாழ்வில் வெற்றியை எதிர்பார்க்கின்றவன்… இந்த உலகில் ஏற்படும் எந்த துன்பத்தையும் பெரிதாக நினைக்க மாட்டோம்…. மேலும் விவரம் அறிய ஷேக் முஜாஹித் ரசீன் அவர்களது வீடீயோவைப் பார்க்கவும்…