- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஈமானை புதுப்பித்துக் கொள்வோம் (v)

ஆடைகள் இத்து போவது போல உங்களது ஈமானும் இத்து போகும் என்று நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த அளவுக்கு இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் (ஃபித்னா) பெருகி கொண்டே இருக்கும். ஃபித்னாக்கள் வரவர முன்னால் வந்தவைகள் சாதாரணமானதாகத் தெரியும்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: .. (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான். மேலும் அறிய ஷேக் முபாரக் மஸ்ஊத் மதனீ அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்.