Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2016
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,843 முறை படிக்கப்பட்டுள்ளது!

நாம் எதை தீர்மானிக்க வேண்டும்?

images-3பிறர் செய்யும் செயல்கள் அங்கீகாரம் பெறும் போது பாராட்டும் நாம் அந்த செயலை தொடர்வதற்கு சற்று யோசிக்கதான் செய்கிறோம்.

இந்த சமூகம் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற நினைவு அல்லது பார்த்துக்கொண்டிருப்பதாக ஓர் உணர்வு நம் உள்ளத்தில் ஆழ பதிந்திருப்பதே ஒருசெயலை செய்வதற்கும் அல்லது செய்ய மறுப்பதற்கும் பொதுவான காரணமாக இருக்கிறது.

அட! நமது விருப்பு-வெறுப்புகளை தீர்மானிப்பதில் கூட அடுத்தவரின் விமர்சனமும் முக்கிய நிலையில் இருப்பது தான் ஆச்சரியமான உண்மை.
இதற்கு பெரிய உதாரணமெல்லாம் தேவையில்லை.

கடைக்கு போயி ஒரு சட்டை எடுப்பதாக இருந்தால் கூட அது நம் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா… நமக்கு பிடித்த கலரில் இருக்கிறதா என்று பார்ப்பதை விட நாளை அதை உடுத்தும் போது எதாவது ஒரு காரணம் சொல்லி பிறர் நம்மை கேலி பேசி விட கூடாது என்ற எண்ணத்திலே பெரும்பாலும் தேர்ந்தேடுக்கிறோம்.

பாருங்கள்… சாதாரண ஒரு சட்டையை தீர்மானிப்பதில் கூட நமது எண்ணங்கள் வசதிகளை விட இந்த உலகத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறோமென்றால் ஏனைய முக்கிய விசயங்கள் குறித்து என்ன சொல்வது..?

இப்படியான நம் மன நிலைக்கு என்ன காரணம்?
எந்த சந்தர்பத்திலும் நமது தீர்மானிப்பு பிறரால் தவறு என சொல்லப்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்வும், நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் வெற்றி பெற்றதாக இருக்க வேண்டும் என்ற ஒரு வறட்டு எண்ணமும் எப்போதும் நம்மை ஆட்கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட எண்ணங்களால் நமக்கு நிலையாக எந்த பயனும் இல்லை
முதலில், எப்போதும் வெற்றி என்ற எண்ணம் தேவையை இல்லாதது. வெற்றி என்பதும் தோல்வி என்பதும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஒன்றல்ல. எப்போதும் வெற்றியாய் தேர்ந்தெடுத்துக்கொள்ள!

மாறாக இந்த சமூகத்தால் நமக்கு வழங்கப்படும் ஒன்று. சென்ற முறை வெற்றி என்ற சமூகம் இந்த முறை தோல்வி என்கிறது. அதே சமூகம் அடுத்த முறை வெற்றி அல்லது தோல்வியை கொடுக்கும்.

நம்மை பொருத்தவரை இவை மாறி மாறி வரும் ஒரு செய்தி அவ்வளவே! நம்மால் முடிந்தவரை எதையும் செய்வது போதுமானது. ஏனெனில் இறுதி வரை நம்மால் வெற்றியை மட்டுமே தக்க வைத்துக்கொள்ளவும் முடியாது. அப்படி வைத்திருந்தால் வெற்றி என்பதன் சுவையை முழுதாய் உணரவும் முடியாது. இதை தெளிவாய் உணர்ந்தால் போலியான அச்ச உணர்வு நம்மை விட்டு அகன்று போகும்