Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2017
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,294 முறை படிக்கப்பட்டுள்ளது!

10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி!

  இவர்தான் 10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி! #RealMersalDoctor

“சாதாரண அழுக்கு உடையுடனும், உழைத்துக் களைத்த முகத்துடனும் கையில் இருபது ரூபாயுடன், `இவ்ளோதான் சார் இருக்கு. இதுக்குள்ள வைத்தியம் பார்த்துடுங்க’னு வந்து நிப்பாங்க. ரொம்பக் கஷ்டமா இருக்கும். அந்த இருபது ரூபாயை வாங்கிட்டு ஊசி போட்டு மாத்திரையையும் கொடுத்தனுப்பிருவேன். `எதுக்கு இருபது ரூபா வாங்குறீங்க… சும்மாவே ட்ரீட்மென்ட் கொடுக்கல?’னு நீங்க கேட்கலாம். இலவசமாக் கிடைக்கிற எதுக்கும் மரியாதை இருக்காது… அதோட அடிப்படை மருந்துச் செலவுக்கும், கிளினிக் மெயின்டெனென்ஸுக்காவது பணம் வேணுமில்லையா? அதனாலதான் அவங்களால முடிஞ்ச காசை வாங்கிக்கிறேன்…’’ மிக இயல்பாகப் பேசுகிறார் டாக்டர் ராமசாமி. தென்காசி மக்கள் ராமசாமிக்கு வைத்துள்ள பெயர், ’10 ரூபா டாக்டர்.’

தென்காசி, வாய்க்கால் பாலம் அருகில் இருக்கும் ராமசாமியின் கிளினிக் எல்லா நேரத்திலும் நிரம்பிவழிகிறது. காத்திருக்கும் எல்லா முகங்களிலும் ஏழ்மையின் அடையாளம். எவரிடமும் எந்தப் பாகுபாடும் இல்லாமல், கனிவும் கருணையும் ததும்பப் பேசி, விசாரித்து, சிகிச்சையளித்துக்கொண்டிருக்கிறார் ராமசாமி.

நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் சிறிதும் தயக்கமின்றி, `நிறைய பேஷன்ட் இருக்காங்க… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…” என்று கூறிவிட்டு கவனம் பிசகாமல் பணியில் இணைகிறார்.

“நான் பெரிசா என்ன பண்ணிட்டேன்னு என்னைப் பார்க்க வந்திருக்கீங்க… மருத்துவம்ங்கிறது சேவைதானே… நாங்க படிச்சப்போ, எங்க பேராசிரியர்கள் எல்லாம் அப்படித்தான் சொல்லிக்கொடுத்து வளர்த்தாங்க. கடந்த நாற்பத்தாறு வருசமா இப்படித்தான். ஆரம்பத்துல ஒரு ரூபா, ரெண்டு ரூபாதான் வாங்கினேன். இப்பதான் பத்து ரூபா. காசு பெருசில்லை… நாம பார்க்குற வேலைக்கு ஒரு மரியாதை இருக்கணுமில்லே… அதுக்காகத்தான் இது…’’

“என்னோட சொந்த ஊர் கோவில்பட்டி பக்கத்துல நாலாட்டின்புத்தூர். அம்பாசமுத்திரம் அரசுப்பள்ளியில படிச்சேன். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில ரெண்டாவது பேட்ச் நாங்க. படிப்பு முடிஞ்சதும் கருங்குளம் அரசு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலை நேரம் போக, மீத நேரத்துல கருங்குளத்துலயே ஒரு கிளினிக் ஆரம்பிச்சேன். அப்ப இருந்தே, காசைப் பாக்குறதில்லை. இருந்தாக் கொடுப்பாங்க. இல்லேன்னா, போயிடுவாங்க. நானே சிலபேருக்கு பஸ்ஸுக்குக் காசு கொடுத்து அனுப்பிவைக்கிறதும் உண்டு. அப்படி, ஆரம்பிச்சது… இப்ப வரைக்கும் அந்தப் பாதை மாறலை…” – சிரிக்கிறார் ராமசாமி.

ஒரு மருத்துவர், குடும்ப மருத்துவராக இருப்பது இயல்புதான். ஆனால், குடும்பத்தில் ஒருவராக மாறுவது சிறப்பு. ராமசாமியை அப்படித்தான் மக்கள் நினைக்கிறார்கள். அது பற்றிக் கேட்டாலும் அதே புன்னகையை உதிர்க்கிறார் ராமசாமி.

“அது கொஞ்சம் பெருமிதமான விஷயம்தான். எவ்வளவு வேணும்னாலும் காசு சம்பாதிச்சுடலாம். மனிதர்களைச் சம்பாதிக்கிறது கஷ்டமில்லையா… நான் நிறைய மனிதர்களைச் சம்பாதிச்சுருக்கேன்.

மருத்துவத்தைப் பொறுத்தவரை, நம் மக்களுக்கு விழிப்புஉணர்வு போதலை. அதேநேரத்துல, நம்ம நாட்டுல மருத்துவத்துல ஏகப்பட்ட பாகுபாடு நிலவுது. ஏழைக்கு அரசு மருத்துவமனை, பணக்காரங்களுக்கு தனியார் மருத்துவமனைனு ஒரு நிலை இருக்கு. இது ரொம்பவே பாவம். கல்வி, மருத்துவம் ரெண்டும் அரசாங்கம் கையிலதான் இருக்கணும். அரசாங்கம் மக்களுக்கு நல்ல மருத்துவத்தை உறுதி செய்யணும்.


இன்னைக்கு மருத்துவப் படிப்பு நிறையச் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கு. மருத்துவங்கிறது ஒரு சேவை. சேவை செய்ய ஆசை இருக்கிறவங்க மட்டும்தான் மருத்துவம் படிக்கணும். மக்கள், மருத்துவர்களை தெய்வமா நினைக்கிறாங்க. அதனால, மருத்துவம் படிக்கிற மாணவர்கள் இந்தத் தொழிலோட புனிதத்தைப் புரிஞ்சுக்கணும். நோயாளியை கனிவாக அணுகணும். அவங்களுக்கு நம்பிக்கை கொடுக்கணும். நம்பிக்கைதான் பாதி மருந்து. அதைக் கொடுக்கத் தவறக் கூடாது…’’ என்கிறார் ராமசாமி.

மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தால், அங்கேயும் பத்து பேர் சிகிச்சைக்காக வந்து நிற்கிறார்கள். ராமசாமியின் மனைவி பெயர் பகவதி… வீட்டு நிர்வாகி. ஒரு மகள், விஜயா… திருமணமாகிவிட்டது.

பால்வினை நோய்களுக்கான ‘டிப்ளமோ இன் வெனீரியாலஜி’ (Venereology) முடித்திருக்கிறார். பால்வினை நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் சிறப்பு மருத்துவர்களுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. ஆயிரங்களில் ஃபீஸ் வாங்கலாம். ஆனால், பணத்தை ஒரு பொருட்டாக நினைக்காமல், மருத்துவத்தைச் சேவையாகச் செய்து வரும் ராமசாமி போன்றோரின் வாழ்க்கையை மருத்துவ மாணவர்களுக்குப் பாடமாகவே வைக்கலாம்.

 நன்றி: இரா.செந்தில் குமார் – விகடன்