சித்தார்கோட்டையில் பெண்கள் அரபிக் கல்லூரி

1992 ஆம் மர்ஹூம் மு. சே. சீ. இத்ரீஸ் அவர்களின் துணைவியார் ஜனாபா சீ.அ.அ.இ. பாத்திமா பீவி அவர்கள் காலமானார்கள். அவர்கள் தம் கணவனுக்குப் பணிவிடை செய்வது, மார்க்கக் கடமைகளில் கவனமாக இருந்து நிறைவேற்றுவது ஆகிய இரு செயல்களையும் வாழ்நாள் முழுவதும் செவ்வனே செய்து வந்தார்கள். அவர்கள் மறைவுக்குப் பின்னர் அண்ணாரின் கணவர் மு.சே.சீ. இத்ரீஸ் அவர்கள் தமது மணைவியின் நினைவாக அதே ஆண்டு பாத்திமா பீவி அரபிக்கல்லூரியை சித்தார்கோட்டையில் நிறுவினார்கள். அது முதல் ஆலிமாக்களை அக்கல்லூரி உருவாக்கி வருகிறது.

ஆரம்ப காலத்தில் உள்ளூர் மாணவிகள் அநேகம் பேர் ஓதினார்கள். தொடந்ந்து உள்ளூர் மாணவியர் அதிகம் ஓதவில்லை. ஆயினும் இந்நிஸ்வானின் சேவையை வெளியூர் மாணவிகள் நன்கு பயன்படுத்தினார்கள்.

இறைவனின் அருளாலும் நல்ல உள்ளம் கொண்ட ஊர் பெரியவர்களின் ஒத்துழைப்பாலும் பாத்திமாபீவி நிஸ்வான் நல்ல முறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இப்போது உள்ளூர் மாணவிகளும் ஆர்வமுடன் சேர்ந்து பயின்று வருகிறார்கள். வரும் ஆண்டுகளில் இன்ஷா அல்லாஹ் உள்ளூர் மாணவிகளே அதிகம் பட்டம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நிலை தொடர உள்ளூர் மாணவிகளுக்கு ஓதும் ஆர்வம் ஏற்பட வேண்டியது இன்றியமையாததாகிறது.

இது வரை சுமார் 31 பெண்கள் இந் நிஸ்வானில் பட்டம் பெற்று இருக்கிறார்கள். (2002 வரை). இங்குள்ள சிறப்பான பாடத்திட்டம் கட்டுமாவடி ஹஜரத் ஜனாப் கத்தீப் சாஹிப் அவர்களால் தயார் செய்யப்பட்டு போதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே ஒரு சில நிஸ்வான்களிலேயே இந்த பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த பாத்திமாவீவி பெண்கள் அரபிக்கல்லூரிக்கு ஹஜரத் ஜனாப் ஹத்தீப் சாஹிப் அவர்களே ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் உள்ளார்கள். இந்த அரபிக்கல்லூரி சித்தார்கோட்டையின் தாய்ச்சபையாம் முஸ்லீம் தர்மபரிபாலன சபாவின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெற்று இயங்கி வருகிறது.