- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

புதிய முறைமையை நோக்கி உலகம்!

20 -ம் நூற்றாண்டு முடிந்து 21-ம் நூற்றாண்டு பிறந்தது இப்போதுதான் நிகழ்ந்தது போலிருக்கிறது! ஆனால் இந்த நூற்றாண்டின் முதலாவது 10 ஆண்டுகள் ஒரு நொடிபோலப் பறந்து போய்விட்டது! இதோ… அடுத்த பத்தாண்டுக்குள் நுழையப் போகிறோம்!

கடந்த பத்தாண்டுகளில் உலகத்துக்கு நல்லவையும் நடந்தன; கெட்டவையும் நிகழ்ந்தன. ஆனால் … எட்டு ஆண்டுகாலம் அமெரிக்காவின் அதிபராக இருந்த புஷ் என்ற ஒரு மனிதரின் அவசரம் -அகங்காரத்தால் நிகழ்ந்த ‘அப்பாவி மரணங்கள்’தான் நம்மை இன்னும் கூட நம்மை எந்த முன்னேற்றத்தையும் ரசிக்க விடாமல் வருத்திக் கொண்டே இருக்கின்றன. அவர் ஆண்ட -உலகத்தை ஆட்டிவைத்த- அந்த 8 ஆண்டுகளின் விளைவுகளும் -பாதிப்புகளும் உடனடியாக ஒரு முடிவுக்கு வராமல், அடுத்த ஆண்டுகளுக்குள்ளும் பிரவேசிக்கின்றன என்பதுதான் நம்மை சஞ்சலத்துக்கு உள்ளாக்கும் இன்னொரு அதிர்ச்சி !

ஆனாலும் பிறக்கப்போகும் புதிய பத்தாண்டின் முதல் வருடத்தில் சில நம்பிக்கைக் கீற்றுக்கள் தெரிகின்றன!

எல்லாம் வல்ல இறைவன் புதிய பத்தாண்டுளில் உலக மக்களின் நிம்மதிகளுக்கு வேட்டுவைக்கும் எல்லா வகையான நச்சு சக்திகளையும் நீக்கிவிட்டு, அமைதியும், சமாதானமும், மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த ஓர் உலகத்தை உருவாக்கும் நல்லவர்களால் நிரப்புவானாக, ஆமீன்!

நன்றி: நர்கிஸ் – துணைத்தலையங்கம் -டிசம்பர் – 2009