- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

அதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்?

[1] மாத்திரையா… ஒரே கசப்பு என முகத்தை சுளிப்பவர்கள் பலர். மாத்திரை என்னும் கசப்பு மிட்டாயை நாம் உட்கொள்ளும் விதங்கள் மாறலாம். ஆனால் அவற்றின் செயலில் மாற்றங்கள் கிடையாது. ஆனால், ஒன்றுக்குமேல் ஒரேவிதமான மாத்திரையை ஒரே நேரத்தில் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் மற்றும் அவற்றுக்கான முதலுதவி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் சுந்தரராமன்.

அதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. சாதாரண தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்ற எந்த ஒரு உடல் வலி மற்றும் நோய்க்கு அதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது. மருத்துவர் பரிந்துரைத்த அளவு மட்டுமே மாத்திரைகளை சாப்பிடவேண்டும்.

ஓவர் டோஸ் மாத்திரை…
சிலர் ஒன்றுக்கு இரண்டு மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் உடல்நிலை சரியாகிவிடும் என்று கருதி அதிக அளவு டோஸ் உட்கொள்கிறார்கள். பாரசிட்டமால் மாத்திரை 3 கிராம் அளவுதான் சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிட்டால் அது அதிக டோஸாகக் கணக்கிடப்படுகிறது. அதாவது,  நம் உடல்நிலையைப் பொறுத்தும், ஆரோக்கியம் மற்றும் வயதைப் பொறுத்தும் மாத்திரையின் டோஸ் அளவு மாறுபடும். நம் உடல் நிலை தாங்கிக்கொள்ளும் அளவை விட அதிகமாக இருந்தால் அது அதிக டோஸாக கணக்கிடப்படும்.

நீங்கள் உட்கொண்ட மருந்து ஓவர்டோஸாக ஆகிவிட்டால் ஏற்படும் பொதுவான அறிகுறிகள்

இந்த அறிகுறிகள் பொதுவானவை. இவை ஒவ்வொரு மாத்திரை மற்றும் நோயைப் பொறுத்து மாறுபடும். மேலும், உடல்நிலை, ஆரோக்கியம், வயது போன்றவற்றைப் பொறுத்தும் மாறுபடும்.

சர்க்கரை நோயாளிகள்…


சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரை சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இன்று அதிகமாக ஸ்வீட் சாப்பிட்டுவிட்டோம் என்று இரண்டு மாத்திரையை சாப்பிடக் கூடாது. அதேபோல காய்ச்சல், உடல் வலி போன்றவற்றுக்காக ஒரே விதமான மாத்திரையை அதிகமாக சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடும் அதிக டோஸ் மாத்திரை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிக அளவில் குறைத்துவிடும். லோசுகர் நிலையை உண்டாக்கும். சில நேரங்களில் படபடப்பு, மயக்கம் மற்றும் நாடித் துடிப்பைக் குறைத்துவிடும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள்…

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உட்கொள்ளும் மாத்திரைகள் அதிக அல்லது குறைந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து உடல் முழுவதும் ரத்தம் சீராக பாய உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாதாரண காய்ச்சல், உடல் வலி போன்றவற்றுக்காக அதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்ளும்போது, திடீரென ரத்த அழுத்தத்தின் அளவில் மாற்றம் உண்டாகும். மயக்கம், தலைசுற்றல், நினைவாற்றல் இழப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். இப்படியான மாற்றம் இதயத் துடிப்பை நிறுத்தும் அபாயமும் உள்ளது. சில நேரங்களில் உயிரிழப்புக்கூட ஏற்படுத்தும்.

மாத்திரைகள் எப்போது ஓவர் டோஸாக மாறும்..?

* ஒரே நேரத்தில் ஒரேவிதமான மாத்திரையை ஒன்றுக்குமேல் எடுத்துக்கொள்ளும்போது.

* நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், உடல் நிலைக்கு ஒத்துக்கொள்ளாது இருக்கும்போது ஓவர் டோஸாகக் கருத்தப்படும்.

அதிக டோஸ் மாத்திரைகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்…

சிறுநீரகம், கல்லீரல் மற்றும் குடல் போன்ற உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிக அளவு டோஸ் உள்ள மாத்திரைகள் வயிற்றில் அதிக நேரம் இருக்கும்போது வயிற்றில் உண்டாக்கும் அமிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால், வயிறு தொடர்பானஉபாதைகளை உண்டாக்கும்.

மருந்து ஓவர் டோஸாகி விட்டால் என்ன செய்ய வேண்டும்?

நிதானமாக இருக்க வேண்டும்.

முதலுதவிக்கு ஆம்புலன்ஸைத் தொடர்புகொள்ள வேண்டும்.

அதிக டோஸ் மாத்திரை உட்கொண்டவர் நினைவில்லாது இருக்கும்போது (unconscious), நேராகத் தரையில் படுக்கவைக்க வேண்டும். தலையை நேராக வைக்க வேண்டும். கால்களை சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.

அதிக டோஸ் மாத்திரை உட்கொண்டவர், வாந்தி எடுத்தால் சரியாகிவிடும் என்று எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது.

வலுக்கட்டாயமாக உண்பதற்கும் குடிப்பதற்கும் எதுவும் கொடுக்கக்கூடாது.

உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

முன்னெச்சரிக்கை எப்போதும் நல்லது..?

நன்றி:   விகடன்