|
|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,951 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th July, 2011 எந்த சூழலிலும் படிக்கலாம்; ஜெயிக்கலாம் என்பதற்கு ஞானசேகரன் சாட்சி. பெயருக்கு ஏற்றவாறு ஞானமுள்ளவர்தான். அதனால்தான் ப்ளஸ்டூவில் 1154 மதிப்பெண் எடு த்து மருத்துவ கட் ஆஃப் 199.25 மதிப்பெண்களுடன் கோவை மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் சூரியபாளையத்தில் இருக்கிறது ஞானசேகரனின் சிறிய வாடகை வீடு. தமிழக அரசின் இலவச டி.வி.யும், கேஸ் அடுப்பும்தான், வீட்டிலிருந்த விலையுயர்ந்த பொருட்கள். தன்னுடைய குடும்பக் கதையை ஞானசேகரனே சொல்கிறார்.
‘என் அப்பா வீட்டிலேயே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
9,044 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th July, 2011 உலகின் மிகப்பெரிய ஒரு மில்லியன் டொலர் தங்க நாணயம் உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும் உலகின் மிகப்பெரிய வரைபடம்
உலகின் மிகப்பெரிய வரைபடம் என்றதும் ரொம்ப சாதாரணமாக நினைத்துக்கொள்ள வேண்டாம். இது உண்மையில் உலகம் அளவுக்கு மிகப்பெரிய வரைபடம்.
ஸ்டாக்ஹோம் ஓவியரான எரிக் நார்டென்கருக்கு ஒரு வித்தியாசமான ஐடியா உதித்தது. ஜிபிஎஸ் கருவிவின் உதவியுடன், உலகின் மிகப்பெரிய ஓவியத்தை வரைய முடியும் என நம்பினார் அவர்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,528 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th July, 2011 நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள். சிலர் பத்திரிகைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தார். அந்த சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத் தாண்டாதவர்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,909 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th July, 2011 இளைய தலைமுறை, எப்போதும் மொபைல் போனில் வெட்டியாக அரட்டை அடிப்பதையும், விடிய விடிய எஸ்.எம்.எஸ்.,சில், “கடலை’ போடுவதையும், மொபைல் போன் வாங்கித் தரும் பெரியவர்கள் ரசிப்பதில்லை. இதற்கு மறுபக்கமும் உள்ளது என்பது போல், இளைஞர்கள் கூட்டம், குறுந்தகவலை, சமூக சேவைக்காக பயன்படுத்திக் காட்டியுள்ளது.சேலம் மாவட்டம், ஊஞ்சகாடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் தன் மொபைலில் இருந்து, தினமும் காலையில், 200 பேருக்கு, “தகவல் மேடை’ என்ற பெயரில், பொது அறிவு செய்திகளையும், மாலை, “உங்களின் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,242 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th June, 2011 காஸ்ட்லி’யானது பள்ளி கல்வி: இன்ஜி., படிப்பை விட எல்.கே.ஜி.,க்கு கூடுதல் கட்டணம்
தமிழகத்தில், புதிது புதிதாக பள்ளிகள் துவங்கப்பட்டாலும், கல்விக் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பட்டப்படிப்பு மற்றும் இன்ஜினியரிங் படிப்பை விட, எல்.கே.ஜி.,க்கு அதிக தொகை செலவழிக்கும் நிலை காணப்படுகிறது. அரசு கல்லூரிகளில் இருக்கும் மதிப்பு, அரசு பள்ளிக்கு இல்லாததால், தனியார் பள்ளிக்கு பெற்றோர் படையெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
உலகமயமாக்கல் கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்ததும், ஐ.டி., துறை வளர்ச்சி, தமிழகத்தில், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,110 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th June, 2011 தந்தையின் மரணம்; தாயாரால் வேலை செய்ய முடியாத நிலை. தாங்க முடியாத தலைவலி. இத்தனையையும் தாங்கி, வாழ்வில் முன்னேற துடிக்கும் இவரது கல்விக்கு தடையாக வந்து நிற்கிறது ஏழ்மை. இதையெல்லாம் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார், பத்தாம் வகுப்பில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாரிச்செல்வம்.
ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டிணம் அருகே உள்ள களிமண்குண்டு பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் மாரிச்செல்வம். முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலை பள்ளியில் பயின்ற, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,675 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th June, 2011 பதவியேற்ற 10 நாட்களுக்குள் மின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவது மிகவும் வரவேற்க தக்க ஒன்று. சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்து பரிசீலித்து வரும் தமிழக அரசு இதற்காக தனிக் கொள்கையை வகுக்கும் நேரம் வந்து விட்டது.
சூரிய ஒளி மின் திட்டங்கள், பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள் என்பதால், மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் பஞ்சாயத்து அளவிலும் திட்டங்களை மாநில அரசு நடைமுறைப்படுத்த முடியும். அனல், அணு, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,439 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th June, 2011 ஏமன் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்கள் கவனத்திற்கு!
அரேபியா வளைகுடாவின் தென்கோடியில் உள்ள ஏமன் நாட்டில் தற்போது உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் உட்பட பல நாட்டவர் ஏமனில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஏமன் நாட்டு அதிபர் தற்போது சவுதி அரேபியா நாட்டிற்கு சென்றுவிட்டதால் , தெளிவற்ற சூழல் நிலவி வருகிறது. ஆகவே முன் எச்சரிக்கையாக ஏமன் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்கள் ஜூன் 18 க்குள் ஏமன் நாட்டு தலைநகர் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,780 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th June, 2011 நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான “தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு’ அறிவித்துள்ள புதிய கட்டணங்கள் பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்புடையதாக அமைந்திருக்கவில்லை என்பது கடந்த இரு நாள்களாக அனைத்துத் தரப்பிலும் எழுப்பப்படும் கண்டனங்களிலிருந்தும் குமுறலில் இருந்தும் தெரியவருகிறது.
சென்னையில் உள்ள சில குறிப்பிட்ட பெரிய பள்ளிகளில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம், ஏற்கெனவே நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு அறிவித்த கட்டணத்தைக் காட்டிலும் ரூ.7,000 அதிகமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. எஸ்பிஒஏ மெட்ரிக் பள்ளியில் பிளஸ் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,596 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd June, 2011 ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு வருமான வரி ரிட்டர்ன் தேவையில்லை
ஆண்டு வருமானம், ஐந்து லட்ச ரூபாய்க்குள் பெறுபவர்கள், இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக அவர்கள் தரும் தகவல் அடிப்படையில் வருமான வரி வசூல் செய்யப்படும். இது, நடப்பு நிதியாண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.
மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் சுதிர் சந்திரா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஆண்டு வருமானம், ஐந்து லட்ச ரூபாய்க்குள் பெறுபவர்கள், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,142 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 31st May, 2011 இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழிகாட்டுவதற்காக, தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.வி.எஸ்., கல்வி நிறுவனங்கள் சார்பில் உங்களால் முடியும் நிகழ்ச்சி, திருப்பூரில் நேற்று நடந்தது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் கேட்ட கேள்விகளுக்கு, அண்ணா பல்கலை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் மற்றும் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி ஆகியோர் அளித்த பதில்கள் வருமாறு:
பெண்களுக்கு பி.இ., சிவில் இன்ஜினியரிங் படிப்பு ஒத்துவருமா? ஜெயபிரகாஷ் காந்தி: படிப்பில் ஆண், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,270 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th May, 2011 பிளஸ்-2-வை போல் 10-ம் வகுப்பு தேர்விலும் நகரங்களை ஓரம் கட்டிய கிராமத்து மாணவிகள்: படிப்புக்கு ஏழ்மை தடையில்லை என்று நிரூபித்தார்கள்
எம் புள்ள டாக்டர் ஆவணும்… என்ஜினீயர் ஆவணும்… என்று எல்லா பெற்றோரும் கனவு காண்கிறார்கள்.
பிள்ளைகளின் படிப்புக்காக பலர் நகரங்களுக்கு குடிபெயர்கிறார்கள். நகர்ப்புற பள்ளிகளில் படித்தால்தான் நல்ல மதிப்பெண் வாங்க முடியும். மாணவர்களின் அறிவுத்திறன் வளரும் என்ற தவறான எண்ணம்தான் இதற்கு காரணம்.
ஆனால் படிப்புக்கு நகரம், கிராமம் என்ற பேதம் இல்லை. . . . → தொடர்ந்து படிக்க..
|
|