Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,887 முறை படிக்கப்பட்டுள்ளது!

TOEFL – டோபல் தேர்வை தெரிந்து கொள்ளுங்கள்

ஆங்கில திறனை மதிப்பிடுவதற்கான சர்வதேச தேர்வுகளில் டோபல் தேர்வு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

சர்வதேச பல்கலைக்கழகங்களில் இடம்பெறுவதற்கு நமக்கு உதவும் காரணிகளில் டோபல் தேர்வு மதிப்பெண்ணும் முக்கியமான ஒன்று. ஆங்கில பிரியர்களிடையே அத்தேர்வைப் பற்றிய ஆர்வம் எப்போதும் குறையாமல் இருக்கும். எனவே தற்போது அத்தேர்வை பற்றி இங்கே விரிவாக அலசலாம்.

டோபல் தேர்வு  (TOEFL)
கடந்த 1965 -ஆம் ஆண்டு முதல் இந்த தேர்வானது, கல்வி தேர்வு சேவை என்ற தனியார் லாபநோக்கமற்ற அமைப்பாலும், கல்லூரி வாரியத்தலும் நிர்வகிக்கப்படுகிறது.  இந்தத் தேர்வைப் பற்றி நீங்கள் முந்தைய தலைமுறையினரிடம் விசாரித்தால் அந்த தேர்வில் முன்பு இருந்த நிலையைவிட, தற்போது அபரிமிதமான மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

தாளில் எழுதும் தேர்வாக இருந்த இது, 1998 -இல் கணினி மயமாக்கப்பட்டதாகவும், 2005 -இல் இணைய மயமாக்கப்பட்டதாகவும் ஆனது. ஆனால் ஈரான், ஈராக், கென்யா, மியான்மர், நார்வே, ரஷ்யா, தென்ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சில குறிப்பிட்ட நிலையங்களில் தாள்வழி தேர்வு குறிப்பிட்ட தேதிகளில் இன்றும் நடைபெற்று வருகிறது.

தேர்வு எழுதும் முறை
தேர்வுக்கு முன்னதாக முதலில் இடத்தை முக்கியமாக தேர்வுசெய்து கொள்ள வேண்டும். ஏனெனில் இடத்தை வைத்து தாள்வழி தேர்வா? அல்லது இணையவழி தேர்வா? என்பதை முடிவுசெய்து கொள்ளலாம். இணையவழி தேர்வானது, படித்தல், கவனித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் போன்ற தேர்வின் அனைத்து பிரிவுகளையும் முக்கியமாக எடுத்துக்கொண்டு மதிப்பிடுகிறது. இணையவழி தேர்வானது ஒருங்கிணைந்த திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

தேர்வின் மொத்த நேரம் 4 மணிகள் மற்றும் ஒரே நாளில் எழுதப்பட வேண்டும். கணினிவழி தேர்வு எழுத நீங்கள் கணினியின் சில அம்சங்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். தேர்வு எழுதுகையில் நேரம் பார்த்தல், அடுத்தப் பக்கத்திற்கு செல்லுதல், கேட்புமுறை கேள்விகளுக்கு ஒலியை சரிசெய்தல், பத்திகளை விரிவாக படித்தல், பேசுமுறை தேர்வில் ஒலிப்பானை பயன்படுத்தல் போன்ற பல விஷயங்களுக்கு கணினி அறிவு அவசியம்.

பேச்சு தேர்வில் உங்கள் பதில்கள் ஆன்லைன் மூலமாக மதிப்பீட்டு மையத்திற்கு சென்றுவிடும். எழுதுதல் பிரிவு இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. முதல் பிரிவில் நீங்கள் படித்த மற்றும் கேட்டவற்றுக்கு பதிலை தட்டச்சு செய்ய வேண்டும். இரண்டாம் பிரிவில் உங்கள் கருத்தை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுத வேண்டும். மேற்கூறிய பிரிவுகள் இரண்டு, மூன்று அல்லது மொத்தமாக நான்கு பிரிவுகளின் கேள்விகளையும் கொண்டிருக்கும்.  இது எதை உணர்த்துகிறது என்றால், பத்தியை நீங்கள் படிக்க வேண்டும், தலைப்பை பற்றிய சிறிய விரிவுரையை நீங்கள் கேட்க வேண்டும்.

பின்னர் உங்கள் பதிலை வாயால் சொல்லவோ அல்லது எழுதவோ வேண்டும். இணையவழி தேர்வுக்காக பதிவு செய்பவர்கள், அதை முடித்தப்பின்னர், தேர்வின் நான்கு பிரிவுகளுடைய அணுகலையும் பெற முடியும். இத்தகைய மாதிரி முறையில், படித்தல் மற்றும் கவனித்தல் பிரிவுகளுக்கு நாமே பதில் கூறலாம், எழுதுதல் மற்றும் பேசுதல் பிரிவுகளுக்கு மாதிரி பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

தாள்வழி தேர்வுக்கு 2.30 மணிகள் கொடுக்கப்படும். பிரிவுவாரியாக இந்த நேரம் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள கேள்விகளை தேர்ந்தெடுத்து எழுதலாம். தாள்வழி தேர்வில் ஆங்கில எழுத்து தேர்வு தேவை.

தேர்வு மற்றும் உங்கள் மதிப்பெண்ணை கணக்கிடுதல்:

டோபல் தேர்வுக்கான மதிப்பெண் வெளிப்படையானது மற்றும் நம்பகமானது. எப்படியெனில், தேர்வெழுதியவரின் ஆங்கில பேச்சுத்திறன் பதியப்பட்டு, தேர்வு நிலையத்தில் இருக்கும் ஒரே நிபுணருக்கு பதிலாக, ஆறு நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இந்த தேர்வின் நம்பகத்தன்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் தனிச்சிறப்புகளுக்காகவே இதை பலர் தேர்வு செய்வதாக, கல்வி தேர்வு சேவை அமைப்பு
கூறுகிறது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 7500 கல்வி நிறுவனங்கள் இந்த தேர்வு மதிப்பெண்களை, மாணவர்களை சேர்ப்பதற்கான அளவுகோலாக எடுத்துக்கொள்கின்றன.
இவற்றில் உலகின் முதன்மையான 100 பல்கலைக்கழகங்களும் அடங்கும்.

மதிப்பீட்டு முறையில், கல்வி தேர்வு சேவை அமைப்பானது, மனித திருத்துனர்களையும் மற்றும் தானியங்கு திருத்து முறைகளையும் பயன்படுத்துகிறது. தேர்வில் பலதரப்பட்ட அம்சங்கள், சிந்தனைத் திறன் மதிப்பீடு மற்றும் ஒழுங்குமுறைகளை மதிப்பிட்டு வரையறுக்க மனித திருத்துநர்கள் முக்கியம் என்று கல்வி தேர்வு சேவை அமைப்பு நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

கல்வி தேர்வு சேவை அமைப்பின் திருத்துநர்கள் சிறப்பாக பயிற்சியளிக்கப்பட்டவர்கள், சான்றிதழ் தேர்வு தேறியவர்கள். தேர்வை முடித்தவுடன், தேர்வு எழுதியவர் தனது மதிப்பெண்களை ரத்துசெய்ய முடியும். ஆனால் குறிப்பிட்ட ஒரு பிரிவுக்கான மதிப்பெண்களை மட்டும் ரத்துசெய்ய முடியாது. மதிப்பெண்ணை
ரத்துசெய்வதன் மூலம் உங்களுக்கும் அல்லது எந்த கல்வி நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படாது. அதேசமயம் ரத்துசெய்த மதிப்பெண்களை மீண்டும் பெறலாம். ஒருவர் தேர்வு முடித்த 14 மணி நேரங்களுக்குள் முடிவுகளை ஆன்லைனில் பெறலாம்.

தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்
பல தரப்பு செய்திகளைக் கொண்ட உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை தொடர்ந்துப் படிக்க வேண்டும். உங்கள் ஆங்கில வார்த்தை வளத்தை அதிகரித்து கொள்ளவும். மேலும் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள் பார்ப்பதன் மூலமும், ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளை கேட்பதன்

Thopputhurai Noordeen