Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,452 முறை படிக்கப்பட்டுள்ளது!

நம்பிக்கை என்னும் அழகிய நீரூற்று!

ஒருவன் மலை உச்சியில் இருந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டி ருந்தான். திடீரென்று கால் தவறி அதள பாதாளத்தில் விழுந்த போது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு வேரைப் பற்றிக்கொண்டான்.

பிடி தளர்ந்தால் கீழே விழுந்து உயிர் போகும் அபாயம்! அவன் இது வரை கடவுளை நம்பியதில்லை. மரண பயத்தில் திடீர் கடவுள் நம்பிக்கை வந்தது. கடவுளை நினைத்து, நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினான்.

அப்போது வானத்திலிருந்து ஒரு அசரீரி!

அசரீரி : ‘நீ என்னை நம்ப மாட்டாய்!.

மனிதன் : கடவுளே, என்னைக் கை விட்டு விடாதே. நிச்சயம் நம்புகிறேன்.

அசரீரி : எனக்கு நம்பிக்கை இல்லை.

மனிதன் : கடவுளே, உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ தான் காப்பாற்ற வேண்டும்.

அசரீரி : சரி, உன்னைக் காப்பாற்றுகிறேன். முதலில் நீ பிடித்திருக்கும் வேரை விட்டு விடு.

மனிதன் : வேரை விட்டு விட்டால் கீழே விழுந்து இறந்து விடுவேனே?

அதன் பின் வானத்தில் குரல் எதுவும் கேட்கவில்லை.

நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை முக்கியம் என்றால், அதை விட முக்கியம், நாம் மற்றவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை.

அந்த நம்பிக்கை கண்மூடித்தனமான நம்பிக்கையாக இருக்க கூடாது.

ஒருவர் மீது நாம் நம்பிக்கை வைப்பதற்கு முன், அவரைப் பற்றி முழு விவரங்களையும் ஆராய வேண்டும். நமது நம்பிக்கைக்கு அவர் தகுதியானவர்தானா என்பதைக் கண்டறிய வேண்டும்.

நம்பிக்கைதான் ஆதாரம்

தொழிலாளி மீது முதலாளி வைத்திருக்கும் நம்பிக்கைத்தான் அந்த நிறுவனத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல், அந்த முதலாளி மீது தொழிலாளிகள் வைத்திருக்கும் நம்பிக்கைத்தான் அவர்களை உண்மையாக, உற்சாகமாக உழைக்கத் தூண்டுகிறது.

கணவன்-மனைவி ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, பெற்றோர், பிள்ளைகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, உறவினர்களின் நம்பிக்கை, நண்பர்களின் பரஸ்பர நம்பிக்கை எனப் பிறர் மீது வைக்கும் நம்பிக்கைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

பஸ்ஸில் போகிறோம் என்றால் அந்த டிரைவர் நம்மை பத்திரமாகக் கொண்டு போய் சேர்ப்பார் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் அதில் பயணம் செய்கிறோம்.

இது பஸ்ஸுக்கு மட்டுமல்ல, விமானம், ரயில், ஆட்டோ, கார் என்று எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.

நம்பிக்கையின் அஸ்திவாரத்தில்தான் இந்தச் சமூக அமைப்பு சுழன்று கொண்டி ருக்கிறது. பெரிய வலைப் பின்னல்களைப் போல, ஒவ்வொருவருக்கிடையேயும் மெல்லிய நூலிழை போன்ற நம்பிக்கை இழையோடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருக்கிடையேயும் எந்த பந்தமோ, உறவோ, சம்பந்தமோ இல்லாவிட்டாலும், நம்பிக்கை என்ற நூலிழையில் எல்லோரும் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.

உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு ஓட்டலுக்கு போகிறீர்கள். தோசை ஆர்டர் செய்கிறீர்கள். தோசை வந்தவுடன் சாப்பிட்டு அதற்கான பணத்தைக் கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறீர்கள்.

இந்த சம்பவத்தில் ஒரு மெல்லிய நம்பிக்கை இருப்பது உங்களுக்குப் புரிகிறதா?

அந்த ஓட்டலில் உங்களுக்கு தோசை சுட்டுக் கொடுத்தவரை நீங்கள் முன்னே, பின்னே பார்த்தது கிடையாது. அதை உங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்த சப்ளையருக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும், அவர்கள் கொடுத்த தோசையை நீங்கள் எந்தவித தயக்கமும் இன்றி சாப்பிட்டீர்கள்.

நீங்கள் சாப்பிட்ட தோசையில் கெட்டது எதுவும் இருக்காது என்ற நம்பிக்கையில் தானே அதை சாப்பிட்டீர்கள்? இந்த நம்பிக்கை எங்கிருந்து வந்தது?

முன்பின் பார்த்திராதவர்களிடம் உங்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையை எந்த வகையில் சேர்ப்பது?

நம்பிக்கை என்பது உண்மையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் நம்புவது என்பது நிலையில்லாதது. அந்த நம்பிக்கை எப்போது வேண்டுமானாலும் அவநம்பிக்கையாக மாறிவிடும்.

ஒரு இளைஞன் தன்னை சீடனாக சேர்த்துக்கொள்ளும்படி சூஃபி ஞானி ஒருவரிடம் கேட்டான். ‘என்னை முழுமையாக நம்புகிறவர்களை மட்டுமே நான் என் சீடனாக ஏற்றுக் கொள்வேன்’ என்றார் அந்த ஞானி.

அதற்கு அந்தச் சீடன், ‘நான் உங்களை முழுமையாக நம்புகிறேன். என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்றான்.

‘சில நாட்கள் கழித்து பதில் சொல்கிறேன், அதுவரை இங்கேயே தங்கியிரு’ என்று கூறினார் ஞானி.

மறுநாள் காலை, ஒரு பெரிய மரத்தின் அடியில் அந்த சூஃபி ஞானியின் அருகே ஒரு பெண் அமர்ந்து, மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான் அந்த இளைஞன்.

இதைப் பார்த்தவுடன், பெண் சகவாசமும், மதுப் பழக்கமும் உள்ள அந்த ஞானி, ஒரு ஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான் இளைஞன்.

வெறும் முயற்சி அல்ல

அந்த இளைஞனின் முகத்தில் காணப்பட்ட அவநம்பிக்கையை கவனித்த அந்த ஞானி அருகே அழைத்தார். அந்த பெண்ணின் முகத்திரையை விலக்கினார். அப்பெண் அந்த ஞானியின் தாயார்.

மது பாட்டிலில் இருந்ததை அவனிடம் குடிக்கக் குடித்தார். அதைக் குடித்துப் பார்த்து அது வெறும் தண்ணீர் என்பதை உணர்ந்தான் அந்த இளைஞன்.

ஞானி கூறினார், ‘நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே?உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய முடியாதது ஏன்? மது பாட்டிலில் இருந்தது வெறும் தண்ணீர் என்று ஏன் நினைக்கவில்லை’ என்றார்.

தன்னை மன்னிக்கும்படி வேண்டினான் அந்த இளைஞன்.

‘உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ, எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும். உனது நம்பிக்கை, ஒரு முயற்சி. உண்மையான நம்பிக்கை ஒரு முயற்சியாக இருக்க முடியாது.

நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழ காக இருக்கும். அப்போது அதை எதனாலும் அழிக்க முடியாது’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

நன்றி தமிழ் இந்து