தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,661 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருந்தாகும் பூக்கள்

நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சில பூக்கள் மருந்தாகப் பயன்படுகிறது. இந்த பூக்களின் மருத்துவ குணம் அறிந்து நாம் பயன்படுத்தினால் ஒரு சில நோய்களில் இருந்து எளிதாக விடுபடலாமே? இது உங்களுக்கு உதவுகிறதா? என்று பாருங்களேன்…

அகத்திப்பூ

அகத்திப்பூவைப் பச்சையாகச் சாப்பிட்டால் வெயிலினாலும், புகையினாலும் ஏற்படும் பித்தம், உடலில் தோன்றும் வெப்பம் ஆகியவற்றை நீக்கலாம்.

அசோகப்பூ

அசோகப்பூவை நன்றாகக் காய வைத்துத் தூளாக்கி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,852 முறை படிக்கப்பட்டுள்ளது!

மன்னிக்கப்படாத பாவம்!

அல்லாஹ், தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை தீமை பாவம் புண்னியம் என்பதை அறிவித்துக்கொடுத்தான்; அவற்றின் பிறதி பலனையும் விளக்கி காண்பித்தான்; மனிதனை சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும் தீயவைகளையும் செய்யக்கூடிய இயல்புடையவனாக அவனை ஆக்கியுள்ளான்.

எனவே மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களைத் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,799 முறை படிக்கப்பட்டுள்ளது!

மைசூர் அரண்மனை

இந்தியாவின் ஆக்ராவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடம், மைசூர் அம்பாவிலாஸ் அரண்மனைதான்.

மைசூர் அரண்மனை கட்டப்பட்டு இந்த ஆண்டுடன் நூறாண்டுகள் நிறைவடைகிறது. மைசூர் யதுவம்ச மன்னர்களின் வரலாற்றைக் கூறும் மைசூர் அரண்மனை 1897-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்ட துவங்கப்பட்டது.

பதினைந்து ஆண்டு கால மனித உழைப்பிற்குப் பின்னர் 1912-ம் ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான செலவு 41 லட்சத்து 47 ஆயிரத்து 913 . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,231 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெற்றியோடு விளையாடு

எதிர் தரப்பில் விளையாடுகிறவர்களின் எல்லா காய்களையும் வெட்டியும்கூட தோற்றுப் போகிறவர்கள் இருக்கிறார்கள். சில காய்களை மட்டுமே வெட்டி வெற்றி பெறுபவர்களும் இருக்கிறார்கள்.

விளையாட்டு என்பது விளையாடி பொழுதைக் கழிப்பதற்கு மட்டுமல்ல. உடலால், மனதால், நம்மை மேம்படுத்திக் கொள்வதற்காகவும்தான்.

வெற்றிக்காக நாம் படிக்க வேண்டிய பாடங்கள் விளையாட்டிலும்கூட இருக்கிறது. செஸ்ஸிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இங்கே…

சதுரங்கம்

வெற்றியாளர்களே முதலில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 11,927 முறை படிக்கப்பட்டுள்ளது!

‘வால்பாறை’ போய் வர வேண்டிய சுற்றுலாத் தலம்!

வால்பாறை – வாழ்க்கையில் ஒரு முறையாவது போய் வர வேண்டிய சுற்றுலாத் தலம்

வால்பாறை :: கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.வால்பாறையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மேடு பள்ளங்களாக அந்த மலைப்பகுதியில் எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று கம்பளி போர்த்தப்பட்டது போல தேயிலைத் தோட்டங்கள்.

அதிகாலையில் பனி மூட்டம் மூடியிருக்கும் வேளையிலும் மழைக்காலங்களில் மேகங்கள் உருவாகி தேயிலைத் தோட்டங்களைத் தழுவிச் செல்லும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,516 முறை படிக்கப்பட்டுள்ளது!

நகங்களும் நலம் சொல்லும்!

நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கிறது. நகங்களை நலமாக வைத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள்…

நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவ தோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம். சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணையை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,968 முறை படிக்கப்பட்டுள்ளது!

புரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு

நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளின் ப்ரிட்ஜ் கட்டிய ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்.

1883 ஆம் ஆண்டு ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியர் கிழக்கு நதியின் மேல் மிக நீளமான தொங்கு பாலம் கட்ட முடிவெடுத்தார். பாலம் கட்டுவதில் கைத்தேர்ந்த பல இஞ்சினியர்கள் இது முடியாத காரியம் இதை கை விடுவதுதான் சரியான முடிவு என்றனர். இது போன்று தொங்குபாலம் இதற்கு முன் யாரும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,841 முறை படிக்கப்பட்டுள்ளது!

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி! வீடியோ

உண்மையான மகிழ்ச்சி என்ன என்பதை நாம் சரியாகப் புரியாமல் உள்ளோம். பெரும்பான மக்கள் செல்வம் அதிகம் இருந்தால் – சந்தோசம் – மகிழ்ச்சி பொங்கும் என்று நம்புகிறார்கள்.

ஆனால் பணம் படைத்தவர்கள் நிம்மதியாக உள்ளார்களா என்றால் — நிச்சயம் இல்லை. அவர்கள் கேளிக்கைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும் என்று எண்ணுகிறார்கள். அங்கேயும் அவர்கள் மகிழ்ச்சியைப் பெறவில்லை!

இந்த உலகில் மகிழ்ச்சியுடன் வாழ முடியாதா என்று எண்ணலாம். நிச்சயமாக இஸ்லாம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,516 முறை படிக்கப்பட்டுள்ளது!

தற்கொலையில் தீர்வை தொலைக்கும் பெண்கள்

தென் இந்தியாவைத் தற்கொலைகளின் தலைநகரம் எனச் சொன்னால் அது மிகையல்ல.

* இந்தியாவில் 15 நிமிடங்களுக்கு 3 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அவர்களில் ஒருவர் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்.

* புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாதம் ஒன்றுக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அவர்கள் அனைவருமே 15-30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

* கடந்த ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 10982 பேரும் கேரளாவில் 11300 பேரும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,453 முறை படிக்கப்பட்டுள்ளது!

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

உங்கள் செல்வாக்கு வட்டம்

“யுத்தம் என்று வரும்போது, அதில் எல்லாமே எளிது. ஆனால், எது மிகவும் எளிதோ அதுதான் மிகவும் கடினம்”. இது சீனப்பழமொழி. ஒரு தயாரிப்பு, பயன்படுத்த மிகவும் எளிது என்பதே வாடிக்கையாளர்களுக்கு சொல்லப் படுகிற செய்தி.

ஆனால் அந்தத் தயாரிப்பை அவ்வளவு எளியதாய் வடிவமைக்க எவ்வளவோ கடினமான நிலைகளை அவர்கள் கடந்து வந்திருக்க வேண்டும்.

மார்க்கெட்டிங் என்பது, ஒரு தயாரிப்பைக் கையாள்வது எவ்வளவு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,717 முறை படிக்கப்பட்டுள்ளது!

சமையல் கேஸ் தட்டுப்பாடு… சமாளிக்கும் சூத்திரங்கள் !

‘சிலிண்டர் தட்டுப்பாடு’… சமீப நாட்களாக நம் தினசரி பிரச்னையாகி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சிலிண்டர் கிடைக்காமலிருப்பது… கிடைப்பதற்கு அநியாயத்துக்கு தாமதம் ஆவது… என்பது போன்ற காரணங்களால், கிச்சன் சுமையும், டென்ஷனும் கூடிப்போக, ‘என்னதான் செய்றது..?’ என்று விரக்தியில் இருக்கிறார்கள் மக்கள்.

விரைவில் மாணியம் நிறுத்தப்படும். அதன் பின் வெளிமார்கெட்டுகளில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அரசு இதற்கான மாணியத்தை தனியாக பயணாளிகளுக்கு பணமாக கொடுப்பதாகக் கேள்வி. எது எப்படியோ கேஸ் என்பது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,239 முறை படிக்கப்பட்டுள்ளது!

மரணமும் வாழ்வும் (வீடியோ)

மனித வாழ்வில் மிக உறுதியானது மரணம் மட்டுமே. அத்தகைய மரணத்திற்கு நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம். கப்ருடைய வாழ்க்கை, மறுமையின் அகோர நிலை, கேள்வி கணக்கு, சொர்க்கம், நரகம், இவை அனைத்தையும் மரணத்திற்குப்பின் நாம் ஒவ்வொருவரும் சந்தித்தே தீர வேண்டும் என்ற உறுதியான ஈமானுடைய நாம் மரணத்தைப்பற்றி என்ன சிந்தனையில் இருக்கிறோம். இத்தகைய கேள்விகளுக்கு குர் ஆன் – ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இவ்வுரை மிக பயனுள்ளதாக இருக்கும்.

வழங்கியவர்: அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி, இஸ்லாமிய . . . → தொடர்ந்து படிக்க..