Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,828 முறை படிக்கப்பட்டுள்ளது!

திருப்பூருக்கு தேவை ஒரு லட்சம் தொழிலாளர்கள்!

நம் நாட்டில் மற்ற மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் இன்னமும் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் திருப்பூர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. படித்த பட்டதாரிகள் முதல், படிக்காத பாமரர் வரை, அனைத்து தரப்பினருக்கும் வேலை வாய்ப்பை வைத்துக் கொண்டு, தொழிலாளர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதற்கு, பின்னலாடை உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியே, முக்கிய காரணம்.

கடந்த 1929ல் மிக சிறிய அளவில் துவங்கிய பின்னலாடை உற்பத்தி தொழில், படிப்படியாக, 1978ல் ஏற்றுமதி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,053 முறை படிக்கப்பட்டுள்ளது!

பணியிடத்தில் பாலியல் தொல்லை !

பணியிடங்களில் பாலியல் தொல்லை– ஊடகத்துறையும் விதிவிலக்கல்ல

ஊடகத்துறையிலும் , மற்ற துறைகளைப் போலவே, பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாவது நடந்துகொண்டுதான் இருக்கிறது , ஆனால் ஊடகங்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேசாமல் பூடகமாக இருக்கும் நிலை இருக்கிறது என்று பெண் ஊடகவியலாளர் வலையமையப்பைச் சேர்ந்த கவிதா கூறுகிறார்.

தெஹல்கா இதழின் ஆசிரியர் தருண் தேஜ்பால் , அவருடன் பணிபுரியும் சக பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,479 முறை படிக்கப்பட்டுள்ளது!

இதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…!

தமிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதால், இந்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சராசரியாக ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள், சராசரியாக ஐந்தாண்டு கல்விக் கட்டணமாக (Tution Fees) மட்டும் ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சத்தை வசூலிக்கின்றன. உதாரணமாக, சாராய உடையாரின் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ரூ.9 லட்சத்தை ஆண்டு கல்விக் கட்டணமாகவும், பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,014 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஐ.ஐ.டி.,க்களில் தமிழக மாணவர்கள!

ஐ.ஐ.டி.,க்களில் சேரும் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைவதை தடுக்க, மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

ஜே.இ.இ., எழுத வேண்டும்: சென்னை, டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில், மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,க்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சேர, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையால் நடத்தப்படும், கூட்டு நுழைவு தேர்வுகளை (ஜே.இ.இ.,) எழுத வேண்டும்.கடந்த, 2012ல், இத்தேர்வு முறை, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,776 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூழ்குவது இந்திய நீர்மூழ்கிகள் மட்டும்தானா?

ஆண்டுக்கு ஓரிரு முறை அரிதாகப் பத்திரிகைகளில் வரும் படங்களோடு முடிந்துவிடும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மீதான கவனம், இப்போது தொடர்கதைபோல ஆகியிருக்கிறது. காரணம், கடந்த ஏழு மாதங்களில் மட்டும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களில் மூன்று விபத்துகள். அத்துடன் உயிரிழப்புகள். கடற்படைக் கப்பல்களின் விபத்துகளுக்குத் தார்மிகப் பொறுப்பேற்று, இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாகப் பதவி விலகியிருக்கிறார் கடற்படைத் தளபதி. நீர்மூழ்கிக் கப்பல் வீரர்களின் மரணம் பெரும் செய்தி ஆகியிருக்கிறது. இத்தகைய சூழலிலும்கூட இந்திய ஊடகங்கள் விவாதிக்காத ஒரு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,544 முறை படிக்கப்பட்டுள்ளது!

கருத்துரிமை – சட்டம் – கைதுகள்

இதற்கெல்லாமா கைது செய்வார்கள்? சமீபத்தில் செய்தித்தாள்கள் படித்தவர்களுக்கு நிச்சயம் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். அதே போல், சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது இந்தச் செய்திகள். எனில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்கள் கருத்தைச் சொல்பவர்கள் இனி கவனமாக இருக்கவேண்டுமா? கமெண்ட் போடுபவர்கள், லைக் போடுபவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமா?

சிவசேனா தலைவர் பால் தாக்கரே இறந்ததை முன்னிட்டு மும்பை நகரத்தில் முழு அடைப்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,088 முறை படிக்கப்பட்டுள்ளது!

காஸ் மானியம் – அதார் கார்ட் இனி அவசியம் இல்லை

சமையல் காஸ், சிலிண்டருக்கான மானியத்தை பெற, ‘ஆதார்’ அட்டை இனி கட்டாயமில்லை; வங்கி கணக்கில், மானியத்தை நேரடியாக வரவு வைக்கும் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், 402 ரூபாய் செலுத்தி, வழக்கம் போல், சமையல் காஸ் சிலிண்டரை பெறலாம். சமையல் காஸ் சிலிண்டருக்கான, மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு, வழங்கும் திட்டத்தை, பல்வேறு கட்டங்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், ‘ஆதார் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,123 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்தியா – சொல்ல மறந்த செய்திகள்!

கையால் மலத்தை அள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் இழிதொழிலை ஒழித்துக்கட்டக் கோரும் போராட்டங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், மைய அரசு தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக் கொண்டதைப் போல, கடந்த செப்டம்பர் மாதத்தில் இதற்காகப் புதிய சட்டமொன்றை – கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான சட்டம் – நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது.

ஐ.டி. கம்பெனிகள், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,074 முறை படிக்கப்பட்டுள்ளது!

சந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க !

நம் மண்ணில் நெல்லும் கரும்பும் காய்கறிகளும் செழித்து விளைந்து நிற்க, உழவர் பண்டிகையான ‘பொங்கல்’ விழாவை ஊருடனும் உறவுகளுடனும் சேர்ந்து மகிழ்ச்சி ‘பொங்கப் பொங்க’ கொண்டாடுகிறோம்! அந்த நெல்லையும் கரும்பையும் பல பயிர்களையும் ஆசையுடனும் அக்கறையுடனும் விளைவிப்பது நம்நாட்டின் ‘முதுகெலும்பு’ எனப்படும் விவசாயிகள்தான். அவர்கள்தானே இப்பண்டிகையின் கதாநாயகர்கள்! அப்படி சில வி.ஐ.பி., விவசாயிகள் இங்கே பேசுகிறார்கள்…

‘என் வழி… இயற்கை வழி’ என்று விளம்பரப் பலகை வைக்காத குறையாக, இயற்கை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,979 முறை படிக்கப்பட்டுள்ளது!

தரமான வாழ்க்கை – இந்தியாவிற்கு 7வது இடம்

தரமான வாழ்க்கை நடத்துவதில் இந்தியா 7வது இடம் பிடித்துள்ளது. என ஹச்.எஸ்.பி.சி.,எக்ஸ்பாட் என்னும் தனி ஆன்லைன் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட 37 நாடுகளில் முதலிடத்தில் தாய்லாந்து முதலிடத்திலும் பஹ்ரைன் 2 வது இடத்திலும் , சீனா 3வது இடத்திலும் கேமன் தீவுகள் 4 வது இடத்திலும் , ஆஸ்திரேலியா 5 வது இடத்திலும் சி்ங்கப்பூர் 6வது இடத்திலும் மற்றும் தைவான் 8 வது இடத்திலும் ஸ்பெயின் 9வது இடத்திலும் மற்றும் பிரேசில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,767 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அபாயம்!

சமீப காலம் வரை ஓஹோவென வளர்ச்சி கண்ட ரியல் எஸ்டேட் துறை, இப்போது தலைகீழாக மாறி இருக்கிறது. மனை மற்றும் வீடுகளின் விலை நடுத்தர மக்களால் வாங்க முடியாத அளவுக்கு எகிறிவிட்டதால், பலரும் சொத்து வாங்கும் முடிவை தள்ளிவைத்துவிட்டு, வாடகை வீடே நிரந்தரம் என்கிற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் இந்தியா முழுக்கவே வீடு மற்றும் மனைகளின் விலை சரியும் அபாயம் உருவாகியுள்ளது.

அண்மையில் அசோசம் அமைப்பு நடத்திய சர்வேயில் 82 சதவிகிதம் இந்திய இளைஞர்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,591 முறை படிக்கப்பட்டுள்ளது!

உங்கள் Gas பணம் உங்களுக்கு வந்து சேர

இந்த மாதத்தில் இருந்து GAS சிலிண்டருக்கான மானியம் நமது வங்கி கணக்கில் நேரடியாக தரப்படுகிறது. அதனால் இனி அணைத்து சிலிண்டர்களுக்கும் ஒரே விலை தான்.

இது ஒரு வகையில் நல்ல திட்டம் தான். கள்ளசந்தையில் மானியங்கள் தவறாக பயன்படுத்துவது தவிர்க்கப்படும். இருந்தாலும் ஆதார் அட்டை அனைவரும் பெறாததால் இன்னும் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு பல சவால்கள் உள்ளன.

இணையத்தில் பல வழிகளில் கிடைத்த தகவல்களை இங்கு தொகுத்து இருக்கிறோம். உங்கள் Gas மானியத்தைப் பெறுவதற்கு இந்த . . . → தொடர்ந்து படிக்க..