

- 1.கொடம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
கொடம்புளி சூப் எப்படி செய்யணும்?
கொடம்புளி ஐம்பது கிராம் – முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும்.
கொள்ளு (கருப்பு காணம்) இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைத்து விடணும் .
காலையில் இந்த நானூறு மிலி-யையும் கொதிக்க வைத்து நூறு மிலியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.
இந்த நூறு மிலியாக வற்றவைத்து – வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள வாய்விடங்கம்,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.
- 2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்கக் கூடாது
- 3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3 மணி நேரமாவது இடைவேளை விடணும். பகலில் தூங்கக் கூடாது .
- 4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த அளவு நிறுத்தணும்.
- 5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.
- 6 .வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது
- 8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும். அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால் சாபிடலாம்.
- 9 .எண்ணையில் பொறித்த உணவுகளை , சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.
- 10 . டிவி பார்த்து கொண்டே சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது பேச கூடாது.