|
|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,236 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th June, 2016
நோன்பு நோற்பதன் அடிப்படை என்பது சாப்பிடாமல் குடிக்காமல் இருப்பது மட்டுமே அல்ல. மாறாக உள்ளம் தூய்மை அடைய வேண்டும். யார் மோசமான அதாவது பொய் சாட்சியம் போன்ற மோசமான செயல்களிலும் இருந்து விட்டு விட வில்லையோ அவர் உணவை – குடிப்பை விட்டு விடுவதால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை என்பதாக நபிகளார் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். நோன்பு என்பது நமக்கு இறையச்சத்தை ஏற்படுத்த வேண்டு்ம். ஆக ரமளான் நமக்கு வணக்கத்தை மட்டுமல்லாது சிறந்த . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,102 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th June, 2016
நபிகளார் ஸல் அவர்கள் ”உடலில் ஒரு சதைப்பிண்டம் உள்ளது. அது சீராகி விட்டால் உடல் முழுதும் சீராகி விடும். அது மாசுபட்டுவிட்டால் உடலே மாசுபட்டு விடும்” என்றும் அது தான் கல்பு என்று கூறினார்க்ள. உள்ளம் மாசுபடக் காரணிகளில் முக்கியமானது உலகில் ஆசாபாசத்தில் மூழ்குதல் ஆகும். எனவே நபிகளார் அவர்கள் இந்த உலகம் அழியக்கூடியது. ஒரு முஃமின்கள் ஒரு பயணியாக வாழ சொல்கிறார்கள். ஆனால் நாம் எப்படி நடக்கின்றோம். இந்த உலகமே கதியாக வாழ்கிறோம். மறுமையை மறந்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,812 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th June, 2016
தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தலையாய கடமையகாகும். இந்த தொழுகையை ஆன்கள் கண்டிப்பாக ஜமாத்துடன் தொழ வேண்டும். அதிகமான நன்மைகள் உண்டு என்பதை அறிந்திருந்தும் இன்று நாம் எந்த காரணமும் இல்லாமல் வேலை அதிகம் என்றும் அசதி என்றும் காரணங்கள் கூறி ஜமாத்தை விட்டு விடுகிறோம். ஆனால் அல்லாஹ் நபிகளார் ஸல் அவர்களுக்கு யுத்த களத்திலும் எவ்வாறு பகுதி பகுதியாக போர் வீரர்களுக்கு தொழுகை நடத்த வேண்டும் என்பதை அல்குர்ஆனில் சூரத்துல் நிஸா 102 . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,453 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th May, 2016
திருமண வாழ்வு என்பது பிரச்சனையையும் உள்அடக்கியது தான். சரித்திரத்தில் பார்த்தாலும் இன்றைய சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியும் பிரச்சனையும் கலந்தது தான் திருமண வாழ்க்கை. அன்பான மனைவி என்பவள் அழகிய முறையில் நடந்து கொண்டால் அன்பாக பண்பாக நடந்து கொண்டால் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் சீராகி விடும். ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்வு என்பது ஒரு அமானிதம். அல்லாஹ் அளித்த அருட்கொடை. நம் சமுதாயத்தில் இன்னும் பலர் வயதுகள் பல கடந்தும் கண்ணிகளாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,829 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st May, 2016
இயற்கையாக மனிதன் எந்த ஒரு நன்மையையும் தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்றே நினைப்பான். அதே போல் ஒரு தீமையோ அல்லது பாதிப்போ நடந்தால் அது தமக்கு நடக்கக் கூடாது என்றே நினைப்பான்.. ஆனால் நாம் அடையும் நன்மைகளை அடுத்தவர்களுக்காகவும் பகிர நினைப்பது என்பது மிக உயர்ந்த குணம். இது பாராட்டப்படகூடியதாகும். அன்று ஹிஜரத்தின் போது அன்சாரித் தோழர்கள் முஹாஜிர்களுக்கு செய்த நன்மையை அல்லாஹ் பாரட்டி அல்குர்ஆனில் ”… அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,810 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th May, 2016
தீனுல் இஸ்லாம் எல்லா விசயங்களிலும் ஒரு நடுநிலையான போக்கை கொண்ட மார்க்கமாகும். வணக்கமானாலும் சரி மற்றவைகளானாலும் இதே நிலை தான். ஒருவர் இரவு முழுக்க வணங்க வேண்டுமென்றாலும அல்லது தினந்தோரும் பகலில் நோன்பு பிடிக்க வேண்டுமென்றாலும் அனுமதிக்காது. நபிகளார் ஸல் அவர்கள் ஷஃபான் மாதம் வந்து விட்டால் தொடர்ந்து நோன்பு பிடிப்பார்கள். அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த தனி சிறப்பால் இவ்வாறு நோன்பு நோற்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு தடை செய்துள்ளார்கள். இந்த மாதத்தில் தான் நமது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,117 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th May, 2016 பூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள் கார்பன் 14 சோதனை
வானம், பூமி, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இம்மாபெரும் பிரபஞ்சம் (Universe) எப்படி தோன்றியது என்பதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனாலும் உறுதியான முடிவிற்கு அவர்களால் வர முடியவில்லை.
இருப்பினும் ‘ஹப்பிள் விதி’ (Hubble’s Laws) என்ற கோட்பாட்டின் படி ஏறத்தாள 1300 கோடி வருடங்களுக்கு முன் இப் பிரபஞ்சம் தோன்றியதாக கருதப்படுகிறது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,118 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th May, 2016
அல்லாஹ் ரசூலை முறையாக பின்பற்றிய மற்றும் அல்லாஹ் ரசூலால் பாராட்டப்பட்ட ஒரு சமுதாயம் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவர்களை நாம் பின்பற்றுவதால் இரு உலகிலும் வெற்றி பெறலாம். அவர்கள் தான் நபிகள் ஸல் அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள். அந்த வரலாற்றில் நமக்கு பல வழிகாட்டல் மற்றும் படிப்பினைகள் உள்ளன. கஅப் பின் மாலிக் அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமத்தைப் பார்க்கலாம். தபூக் போருக்கு அழைப்பு வந்த போது ”பேரித்தம் பழம் அறுவடைக்கான சூடான . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,983 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th April, 2016
அல்லாஹ் தனது திருமறையில் அல்லாஹ்வின் அடிமைகள் பற்றி அல்புர்கான் 63 முதல் 76 வரை கூறியுள்ளான். அல்லாஹ் இந்த உலகத்தில் படைத்த அணைத்துமே அவனுக்கு கட்டுபட்டவைகள் – அடிமைகள். நபிகளார் அவர்களும் தன்னை அளவுக்கு மேல் புகழாதீர்கள் – ஈஸா அலை அவர்களைப் புகழ்ந்தது போன்ற செய்யாதீர்கள்” என்றார்கள். அவல்லாஹ் மட்டும் தான் நமது எஜமானன். அவன் ரஹ்மான் – அளவற்ற அருளாளன். ரஹ்மானின் அடியார்கள் என்பவர்கள் இந்த உலகில் பணிவுடன் வாழ வேண்டும். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,811 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd April, 2016
சகோதரி விஜயட்சுமி பிராமின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தன்னுடன் படிக்கும் மாணவிகள் குர்ஆனை ஆர்வத்துடன் ஓதுவதைக் கண்டு அது என்ன அதில் என்ன உள்ளது தானும் படிக்க விரும்பி கேட்டபோது மறுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு ஏமாற்றத்தை கொடுத்தது. எனவே அந்த குர்ஆனைப் படித்து அதில் உள்ள தவறுகளை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டார். ஆனால் சுபுஹானல்லாஹ் எத்தனையோ மக்களை கவர்ந்து நேர்வழி காட்டிய அல்குர்ஆன் இவரையும் கவர்ந்து விட்டது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,520 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th April, 2016
அல்லாஹ் மனிதனை சிந்திக்கச் சொல்கிறான். எவன் சிந்தித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை வளர்க்கின்றானோ அவனைத் தான் விரும்புகிறான். காரணம் இவன் எல்லா நிலையிலும் அல்லாஹ்வை பயந்து வாழ்வான் – அவனது சட்ட திட்டங்களை முழுமையாக மதித்து நடப்பான். குருட்டுத்தனமாக அல்லாஹ்வை நம்புகிறவர்களை அல்லாஹ் விரும்புவதில்லை. அல்லாஹ்விடம் ”நான் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் எனது மனது திருப்தியடைய .. இறந்தவர்களை நீ எப்படி உயிர் கொடுக்கின்றாய் என்பதை எனக்க காட்டு” என்று இபுறாஹிம் அலை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,562 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th April, 2016
”இஸ்லாம் என்பதும் ஏதோ ஒரு சடங்குகள் அடங்கிய மதம். மற்ற மதங்களில் உள்ள கடவுள் போல் அரபியாவில் மரித்த ஒருவரைத் தான் அல்லாஹ் என்று கூறி அவரது சிலையை வணங்குகிறார்கள்.” இப்படித் தான் மாற்று மத சகோதர சகோதரிகள் பலர் நினைத்துள்ளனர். இதே கருத்தை உடைய பிராமண சகோதரி சுதா தன்னுடன் உள்ள கல்லூரி தோழிகளின் வித்தியாசமான செயல்களால் கவரப்பட்டார். சூடான பானத்தை அருந்தும் போதி ஊதி சாப்பிடக் கூடாது என்றும் சாப்பிடும் போது வீணாக்காமல் கையை . . . → தொடர்ந்து படிக்க..
|
|