தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2025
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,724 முறை படிக்கப்பட்டுள்ளது!

உயர் கல்விக்கு ஏங்கும் ‘முதல்’ மாணவி!

பிளஸ் 2 தேர்வில் 1,134 மதிப்பெண் பெற்று உயர்கல்விக்கு வழி இன்றி தவிக்கிறார், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மாணவி நாகலட்சுமி. இவரது தந்தை சரவணன், ஆட்டோ டிரைவர்.

தேவாங்கர் பள்ளியில் பிளஸ் 2 படித்த நாகலட்சுமி, பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். மருத்துவ கல்விக்கு 193.25 மதிப்பெண் (கட் ஆப்) பெற்றுள்ளார். தந்தையின் குறைந்த வருமானத்தில் தான் குடும்பம் நடக்கிறது.

அதிக மதிப்பெண் பெற்றும், “டாக்டர் கனவு’ எட்டாக்கனியாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,042 முறை படிக்கப்பட்டுள்ளது!

இராமநாதபுரத்தில் தொடரும் அவலங்கள்!

ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் அவதி

ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் பரிதவிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா ஸ்தலங்களான திருப்புல்லாணி, ஏர்வாடி, உத்தரகோசமங்கை, தேவிபட்டினம் போன்ற ஊர்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ரயிலில் வந்து ராமநாதபுரம் ஸ்டேஷனில் இறங்கி பஸ்களில் செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் வந்து இறங்கும் ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பறை, சுகாதாரமான குடிநீர், பயணிகள் ஓய்வு அறை போன்ற வசதிகள் இல்லாததால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,402 முறை படிக்கப்பட்டுள்ளது!

கட்-ஆப்: உயருமா… உயராதா?

“கடந்தாண்டை விட, இந்தாண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளதால், முக்கிய இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான கட்-ஆப் மதிப்பெண் உயரும் வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தர அங்கீகாரம் பெற்றுள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், 60 இடங்களை உயர்த்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அது கிடைக்கும் பட்சத்தில் கடந்தாண்டு கட்-ஆப் மதிப்பெண்ணில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விடாது,” என, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார். இதனால், கட்-ஆப் உயருமா… உயராதா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,791 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஐஏஎஸ் தேர்வில் சென்னை திவ்யதர்ஷினி முதலிடம்

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் நாட்டிலேயே முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் திவ்யதர்ஷினி.

பி.ஏ., பி.எல் படித்துள்ள திவ்யதர்ஷினி, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல். படித்தவராவார். இவர் 2010ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின.

நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்திருப்பது குறித்து திவ்யதர்ஷினி பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நல்ல . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,125 முறை படிக்கப்பட்டுள்ளது!

சும்மா என்று சுலபமா சொல்லிவிடலாமா?

நாம் வாழ்க்கையில் அடிக்கடி, பயன்படுத்தும் ஒரு சொல் ‘சும்மா’ என்பதாகும். இது பற்றி ஒரு சிறு விளக்கம்!

“சும்மா இருப்பதே சுகம்!” இச்சொல் “திருமந்திரம்” என்ற நூலில், திருமூலரால் எடுத்தாளப்படுகிறது. “சும்மா” என்பதற்கு “அமைதியாய் இருப்பதே சுகம்” என்று பொருள். ஞானிகள், முனிவர்கள், தவசிகள் தங்கள் வாழ்வைத் துறந்து அமைதியாய் ஓரிடத்தில் தவம் செய்வதையே இச்சொல் குறிப்பதாக அமைந்தது.

வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருக்கும் குழந்தையிடம், அம்மா, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,004 முறை படிக்கப்பட்டுள்ளது!

அணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்

அணு உலைகளின் உள்வடிவமைப்பு மற்றும் இயக்கம்; ஒரு சிறுகுறிப்பு!

யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்ற அணுசக்தி வேதியற்பொருட்களிலிருந்து மின் உற்பத்திசெய்ய, அவற்றை அணு உலைகளில் அடைத்துவைது பயன்படுத்துவார்கள். அணு உலைகளில் பல வகைகள் உண்டு. சமீபத்திய, பெரும்பாலான நாடுகளில் மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படுவது கொதிக்கும் தண்ணீர் அணுஉலை அல்லது Boiling water reactor, BWR என்னும் ஒருவகை அணுஉலையே! ஜப்பானில் ஃபுகுஷிமாவிலும் இதுதான் பயன்படுத்தப்படுகிறது! இது 1950களில் அமெரிக்காவின் GE/ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

கொதிக்கும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,929 முறை படிக்கப்பட்டுள்ளது!

பாமர மக்கள் தரும் லஞ்சம் ரூ.471 கோடி

பாமர மக்கள் தரும் லஞ்சம் ரூ.471 கோடி: கடந்த 4 ஆண்டில் அதிகரிப்பு

நாட்டின் கிராம பகுதி மக்கள் ரேஷன் கார்டு, சுகாதாரம், கல்வி, தண்ணீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை பெற, கடந்தாண்டில் 471 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளனர்.

“இந்திய ஊழல் ஆய்வு 2010′ என்ற தலைப்பில், மீடியா ஆய்வு மையம், 12 மாநிலங்களில், 9,960 வீடுகளில், இதுதொடர்பாக ஆய்வு நடத்தினர். வடகிழக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,109 முறை படிக்கப்பட்டுள்ளது!

கனவு நனவாக கைகொடுங்க சாமியோவ்…!

தெருவோரத்தில் உண்டு, உறங்கியபடி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் இன்ஜி., கல்லூரிகளில் படிக்கின்றனர். மிகுந்த சிரமத்துக்கு இடையே படிக்கும் இம்மாணவர்கள் படிப்பைத் தொடர, உதவும் உள்ளங்களின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

பேரூர், செட்டிபாளையம் ஊராட் சிக்கு உட்பட்டது ஆறுமுகக்கவுண்டனூர். இங்கு நரிக்குறவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பயிலும் இரு மாணவர்கள், படிப்பை தொடர நிதியின்றி பரிதவிக்கின்றனர்.

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர் பார்த்திபன், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,647 முறை படிக்கப்பட்டுள்ளது!

லிபியா சொல்லும் சேதி!

நீங்கள் எத்தனைச் சின்னவர்கள் என்பதல்ல விசயம்! உங்கள் அபார நம்பிக்கையும் நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியை தீர்மானிக்கும்!

இந்த வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஒரு வட ஆப்பிரிக்க இளைஞனுக்கு முற்றிலும் பொருந்தும். 1960களில் அந்த வாலிபன், எகிப்தின் கமால் அப்துல் நாசரை வாசித்தான்; சீனாவின் மாவோவை படித்துப் பார்த்தான். அப்பொழுது அவனின் வயது இருபதுக்கும் இருபத்தைந்துக்கும் இடையில் தான்! சிறுபிள்ளை விவசாயம் வீடு வந்து சேராது என்று பெரியவர்கள் இளையவர்களை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,199 முறை படிக்கப்பட்டுள்ளது!

மின் தடைக்கு நிர்வாகக் குளறுபடி காரணமா!

மின் வாரியம் ஏற்க மறுப்பு: ஒரே நாளில் 1,400 மெகா வாட் மின்சாரம் வீண்

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்தும், மின் வாரியம் வாங்க மறுப்பதால் மின் தடை குறையாததோடு, காற்றாலை மின் உற்பத்தியாளர்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் தொழிற்சாலை, விவசாயம் மற்றும் குடியிருப்புகளுக்குச் சேர்த்து, மொத்தம் 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது, 2 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு மின்சார . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,604 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்பிற்கு இல்லை எல்லை!

கேரள மாநிலத்தில் ஆலப்புழையைச் சேர்ந்த செல்லம்மாவிற்கு வாழ்க்கையில் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு இருந்தன. காலம் கடந்து நடந்த திருமணம், திருமணமான சில மாதங்களிலேயே கணவரின் மரணம், உறவினர்களின் உதாசீனம், அதைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்த பிறகும் உறவினர்கள் வீட்டை விட்டுத் துரத்தியது என்று எல்லாம் சேர்ந்து அவரை அவரை அறுபதாவது வயதில் முச்சந்தியில் நிறுத்தியது. இனி வாழ வழியில்லை, வாழ்வதில் அர்த்தமும் இல்லை என்று நினைத்த செல்லம்மா வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்தார். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,114 முறை படிக்கப்பட்டுள்ளது!

சீரியல்கள் குடும்பத்தை சீரழிக்குமா…

எப்படா சூரியன் மறையும்னு தவங்கிடக்கிற பெண்களை பட்டணம் முதல் பட்டிகாடு வரை பரவலாக காணமுடிகிறது… காரணங்கள் பல அல்ல ஒன்றே…அது சீரியல்கள் என்கின்றனர் பெண்கள்..

திண்டிவனம் நகராட்சியில் பெண்களுக்கான பயிற்சியில் சிறப்பு பயிற்சியாளராக வெளிச்சம் செரீன் மற்றும் வெளிச்சம் மாணவர்களை அழைத்திருந்தனர் நகராட்சி நிர்வாகம்..

தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு குறித்து பேச தொடங்கினார் செரின் அவர்கள்.. பெண்கள் தான் சமூகத்தை பிரசவிக்கிற மொத்த பங்களிப்பை பெற்றுள்ளார்கள். சமூகத்தை சரியாக வளர்த்தெடுக்கிற பக்குவம் . . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்