Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,506 முறை படிக்கப்பட்டுள்ளது!

தெரிஞ்சு சாப்பிடுவோம் 2

எம். முஹம்மது ஹுசைன் கனி

அத்திக்காய்

என்ன இருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.

பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.

பீர்க்கங்காய்

என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்

யாருக்கு வேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,799 முறை படிக்கப்பட்டுள்ளது!

தெரிஞ்சு சாப்பிடுவோம் 1

எம். முஹம்மது ஹுசைன் கனி

இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் காய், பழ வகைகளும் ஆகும். படைத்தவனுக்கே புகழ் அனைத்தும்!

இது வரை நாம் பார்த்த காயா பழமா தொகுப்புக்குப்பின்….

தவறாமல் தினமும் சாப்பிடுகிறோம்தானே! நாம் சாப்பிடும் உணவில் என்னென்ன இருக்கிறது என்பதை அறிந்து அப்போதைய நம் உடல்நிலைக்கு பருவநிலைக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட உதவவே இந்த இணைப்பு. எதையுமே தெரிந்து அனுபவிக்கும்போது கிடைக்கிற சந்தோஷம் அலாதிதான். தாஜ்மஹால் என்பதை எந்தப் பின்னணியும் அறியாமல் பார்க்கும்போது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,516 முறை படிக்கப்பட்டுள்ளது!

புற்றுநோயை விரட்டும் காலிஃப்ளவர்!

எம். முஹம்மது ஹுசைன் கனி

வரலாறு: முதலில் ஆசியாவில் பயிரிடப்பட்ட காலிஃபிளவர் பின்பு இத்தாலியில் மட்டுமே அதிகமாக பயிரிடப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் பிரான்சில் அறிமுகமாகியது. அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் சென்றது. இது குளிர்பிரதேச காய்கறி. வட இந்தியாவில் குளிர்காலங்களில் ஏராளமாகக் கிடைக்கும். தென்னிந்தியாவில் அந்தக் காலத்தில் இது பற்றி எதுவும் தெறியாததால் இதற்கு தமிழில் பெயர் கூட இல்லை.

குடும்பம்: இது காய்கறி வகை என்றாலும் சாப்பிடக்கூடிய பூ. மூலிகை இனத்தைச் சேர்ந்தது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,295 முறை படிக்கப்பட்டுள்ளது!

இது பழம் மட்டுமல்ல.. பலம் – வாழைப்பழம்

எம். முஹம்மது ஹுசைன் கனி

வாழைப்பழத்தை பழங்களின் ராணி என்று சொல்வார்கள். மனிதன் ஒரே இடத்தில் தங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்த நாளிலிருந்து வாழை உபயோகத்திற்கு வந்து விட்டதென்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். வாழை வெப்ப சீதோஷ்ண பகுதியில் தான் அதிகமாக விளையும். குளிர்பிரதேசத்தில் வராது. இதனால்தான் இந்தியாவில் அதிகமாக விளைகிறது. அதுவும் தென்னிந்தியர்களின் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாழை இல்லாமல் எந்த சுப, அசுப காரியங்களும் இடம்பெறுவதில்லை.

வரலாறு: வாழைப்பழம் முதலில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,540 முறை படிக்கப்பட்டுள்ளது!

கர்ப்பிணிக்கு சத்து – பீட்ரூட்

எம். முஹம்மது ஹுசைன் கனி

‘ஒரே காயைத் திருப்பித் திருப்பிச் சமைச்சு போரடிச்சுப் போச்சு. வித்தியாசமா என்ன காய் சமைக்கலாம்?’ என்று மூளையைக் குடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஞாபகத்தில் வருவது பீட்ரூட். ‘அதிகமா சமைக்காதது அதுதான்’ என்று முடிவு பண்ணி பொரியல் செய்திருப்பீர்கள். இன்னிக்கு சைடு டிஷ் பீட்ரூட் என்று தெரிந்ததும் கணவரும் குழந்தைகளும் ”ஐயையோ… இதை ஏன் சமைச்சே?” என்று நொந்து கொள்வார்கள். நிறைய பேர் பிடிக்காமல் ஒதுக்கி வைத்திருப்பார்கள். இப்படி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,064 முறை படிக்கப்பட்டுள்ளது!

பாயசக் கிழங்கு! – சர்க்கரை வள்ளிக்கிழங்கு

எம். முஹம்மது ஹுசைன் கனி

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நம்முடைய காரமான சமையலுக்கு ஒத்துப் போகாதது. அதை அதிகம் உணவில் சேர்க்காமல் இருந்தால் நஷ்டம் அதுக்கில்லை. நமக்குத்தான். ஏனெனில் அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலுள்ள ஒரு என்ஸைம் இதன் மாவுச்சத்தை, கிழங்கு முற்றியதும் சர்க்கரையாக மாற்றி விடுகிறது. சேமித்து வைக்கும் போதும் சமைக்கும் போதும் இனிப்பு இன்னும் அதிகமாகிறது. கிழங்கு வகையாக இருந்தாலும் இதற்கும் உருளைக்கிழங்குக்கும் சம்பந்தமில்லை. இது சுற்றிப்படரும் கொடி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,037 முறை படிக்கப்பட்டுள்ளது!

வீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று

எம். முஹம்மது ஹுசைன் கனி

பரங்கி பூசணி வகைகள் கொடியில் படர்ந்து காய்ப்பவை. இவற்றை ஸ்குவாஷ் என்பார்கள். குகர்பைட் என்னும் தாவரவியல் குடும்பத்தை சேர்ந்தது. இதில் வெள்ளரியும் அடங்கும்.

ஸ்குவாஷ் என்பது அமெரிக்க பழங்குடியினர் மொழியில் பச்சையாக சாப்பிடுவது என்று அர்த்தம். ஆனால் யாரும் இதை பச்சையாக சாப்பிட்டதில்லை. ஐயாயிரம் வருடங்களாக இதை சாப்பிடுகின்றனர். ஸ்குவாஷ் இரண்டு வகைகளை கொண்டது.

1. வெயில்கால வகை. பீர்க்கங்காய், பெங்களூர் கத்திரிக்காய் என்னும் சவ்சவ் முதலியன. 95% . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,795 முறை படிக்கப்பட்டுள்ளது!

நேர்மை

இன்று அன்று ஆயிஷத்து பாக்கிரா அலிக்கமா லின்மனைவி! அரசுப் பணியில் அலிக்கமால் ஒருகுமாஸ்தா! ஆயிரத்து எண்ணூறு அவனுக்கு வருமானம்! ஒண்டுக் குடித்தனம்; ஓயாத பற்றாக்குறை! உள்ளதைக் கொண்டு நல்லது காணும் உயர்ந்த மனநிலை ஆயிஷாவுக் கில்லை! அவள் அடிக்கடி அரற்றுவாள்; எகிறுவாள்! கண்ணைக் கசக்குவாள்; கணவனை ஏசுவாள்! “பிழைக்கத் தெரியாத பித்துக் குளியாக எனக்குக் கிடைத்தது இருக்குதே?” என்றவள் அங்க லாய்ப்பாள்; அடிக்கடி சண்டைதான்! வேறு வழியில்லை விலகவும் மதியில்லை! மனைவியின் அழுத்தத்தால் மாறினான் அலிக்கமால்! . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,142 முறை படிக்கப்பட்டுள்ளது!

கடலை சூப்

முந்திரி, பாதாம் போல வேர்க்கடலை ஒரு கொட்டை வகையைச் சார்ந்ததல்ல. இது ஒரு லெக்யூம் பீன்ஸ். ஆனால் இதிலிருந்து கொட்டைகளைப் போல எண்ணெய் எடுக்கலாம். வெண்ணெயும் செய்யலாம் (peanut butter).வேர்க்கடலைக்கு நிலக்கடலை, மங்கி நட், பி நட், கூபர், பிண்டா, கிரவுண்ட் பி என்று பல பெயர்கள் உண்டு. வரலாறு: இது 3500 ஆண்டுகளாக உபயோகத்தில் உள்ளது. தாயகம் பிரேஸில். போர்ச்சுக்கீசிய வியாபாரிகள் இதை பிரேஸிலிலிருந்து ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். ஆப்பிரிக்காவில் இருந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,148 முறை படிக்கப்பட்டுள்ளது!

பச்சைத் தேயிலை (Green Tea)

தினந்தோறும் நாம் குடிக்கும் ‘சாய்” என்ற தேனீர் பற்றி வியத்தகு விவரங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

தேனீர் பற்றி பொதுவாக நாம் அறிந்திருப்பது:

புத்துணர்ச்சி அளித்து நம்மை சுறுசுறுப்பாக இருக்கப் பயன்படுவதையும் காபியை விட இதில் காஃபின் அளவு குறைவு (மூன்றில் ஒரு பகுதி) என்பதையும் தான்.

மூன்று வகைத் தேயிலைகள்:

தேயிலையை பக்குவப்படுத்தும் முறையைப் பொறுத்து 3 வகைப்படும். பச்சை தேயிலை(Green Tea), ஊலூங் தேயிலை(Oolong Tea), மற்றும் கருப்பு தேயிலை (நாம் பயன்படுத்தும் Black . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,089 முறை படிக்கப்பட்டுள்ளது!

நம் பிரார்த்தனைகள் ஏன் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை?

இறைவன் தனது திருவேதத்தில், ‘என்னை அழையுங்கள். நான் பதில் அளிக்கிறேன்” (அத்தியாயம் 40 சூரத்துல் முஃமின் – 60வது வசனம்) எனக் கூறியுள்ளான். நாம் அல்லாஹ்விடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் நமது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே! ஏன்?

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,782 முறை படிக்கப்பட்டுள்ளது!

அய்மானுக்கு ஓர் அழகிய வெள்ளிவிழாப் பரிசு

சென்ற வாரம் வந்த இரண்டு வலை அஞ்சல்கள் பெரிதும் மகிழ்வித்தன.

ஒன்று: அய்மான் சங்கத்தின் வெள்ளிவிழா அழைப்பிதழ்!

இரண்டு: திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் பாரதி தாசன் பல்கலை அளவில் பெற்றுள்ள தேர்ச்சிச் சாதனைகள் பற்றிய தகவல்.

இறைவனின் நாட்டத்தால், 1994 முதல் அய்மானுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ள ஒரு சமுதாயக் களப்பணி ஊழியன் என்ற அடிப்படையில்

. . . → தொடர்ந்து படிக்க..