தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2008
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,035 முறை படிக்கப்பட்டுள்ளது!

நேர்மை

இன்று அன்று
ஆயிஷத்து பாக்கிரா
அலிக்கமா லின்மனைவி!
அரசுப் பணியில்
அலிக்கமால் ஒருகுமாஸ்தா!
ஆயிரத்து எண்ணூறு
அவனுக்கு வருமானம்!
ஒண்டுக் குடித்தனம்;
ஓயாத பற்றாக்குறை!
உள்ளதைக் கொண்டு
நல்லது காணும்
உயர்ந்த மனநிலை
ஆயிஷாவுக் கில்லை!
அவள் அடிக்கடி
அரற்றுவாள்; எகிறுவாள்!
கண்ணைக் கசக்குவாள்;
கணவனை ஏசுவாள்!
“பிழைக்கத் தெரியாத
பித்துக் குளியாக
எனக்குக் கிடைத்தது
இருக்குதே?” என்றவள்
அங்க லாய்ப்பாள்;
அடிக்கடி சண்டைதான்!
வேறு வழியில்லை
விலகவும் மதியில்லை!
மனைவியின் அழுத்தத்தால்
மாறினான் அலிக்கமால்!
கைகூ சாமல்
கையூட்டு வாந்கினான்!
காசு சேர்ந்தது
கஷ்டமும் மறைந்தது!
ஆனால் ஒருநாள்
அவன்லஞ்சம் வாங்கையில்
கையும் களவுமாய்
காவலர் பிடித்தனர்!
வேலை போனது;
வீதிக்கு வந்தானே!
டமாஸ்கஸ் நகரின்
தலைவர்; கவர்னர்
அமர்பின் அப்துல்
அஜீஸெனும் நல்லார்!
நீதி வழுவா
நேர்மை யாளர்!
நிலைத்த புகழின்
நேரடி முகவரி!
அந்தத் தலைவரின்
அன்பு மனைவி
அருமை பாத்திமா
ஒருநாள் சொன்னாள்:
“பிள்ளைகள் தமக்குத்
துணிமணி எடுக்கனும்
துட்டுஎதுவும் இல்லைகையில்!
ஒருவாரச் சம்பளத்தை
ஒன்றாகக் கொடுத்தால்
எடுத்து விடலாம் ”
என்றவள் சொன்னதும்
துடித்துப் போனார்
தூயவர் அஜீஸும்!
“என்ன பாத்திமா,
இப்படிப் பேசுறே?
ஒருவாரம் பதவியில்
ஒட்டியிருப்பேன் என
உத்தர வாதம்
உள்ளதா? யோசி!
மக்கள் என்னை
மாற்றிட நினைத்தால்
மாசுகள் பட்டு
மருகனும் அல்லவா?
வேண்டாம்; வேண்டாம்!
வீண் பழி நமக்கு!”
என்றனர் கவர்னர்
என்னே நாணயம்!
அந்த அப்துல் அஜீஸும்
அவரது மனைவியும்
இந்த அலிக்கமாலும்
இவரது துணைவியும்
சொந்த பந்தம்தான்!
சோதர முஸ்லிம்கள் தான்!
என்ன செய்வது?
சொல்லுங்கள்….
என்ன செய்வது?

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்