Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,551 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூட்டுத் தேய்வு நோய்

மூட்டுத் தேய்வு நோயை இனங் காட்டும் ஹெர்படன்ஸ் நோட் (Heberden’s Node)

இந்தப் பெண்ணின் கையின் விரலின் நகத்திற்கு அண்டிய மொளியில் கட்டி போன்ற இறுக்கமான ஒரு வீக்கம் தென்படுகிறது. இதனை மருத்துவத்தில் ஹெர்படன்ஸ் நோட் Herbedens Node என்பர்.

எமது பெரு விரல் தவிர்ந்த கை விரல்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு மூட்டுக்கள் (மொளிகள்) உள்ளன. இவை அசைவதின் மூலமே எமது விரல்களை மடக்கவும் விரிக்கவும் முடிகிறது. பொருட்களைப் பற்றிப் பிடிக்க இவை அவசியமானவையாகும்.

இவற்றை Inter Phalangeal Joints என்பர்.

இதில் கடைசியாக உள்ள Distal Phalangeal Joints(DIP) மூட்டு எனப்படும்.
இந்த மூட்டில் ஏற்படும் வீக்கம் காரணமாகவே ஹெர்படன்ஸ் நோட் தோன்றுகிறது.

ஹெர்படன்ஸ் நோட் ஒருவருக்கு இருந்தால் அவரது பிள்ளைகளிலும் வரக் கூடிய சாத்தியம் உண்டு.

பொதுவாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. அதிலும் ஆண்களை விட பெண்களில் அதிகம்.

ஹெர்படன்ஸ் நோட் என்பது ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் (Osteoarthritis) என்ற ஒரு வகை மூட்டு நோயின் அறிகுறியாகும்.

ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் வயதாகும்போது மூட்டுகளின் தேய்மானத்தால் ஏற்படும் நோய் இதுவெனப் பல காலம் கருதப்பட்டது.

அது உண்மைதான். ஆயினும் அதற்கு மேலாக எலும்பை மாத்திரமின்றி, அதைச் சுற்றியிருக்கும் குருத்தெலும்பு, சைனோவியம் எனப்படும் சவ்வு, சுற்றியிருக்கும் தசைநார்கள் என பலவற்றையும் தாக்கும் ஒரு நோயாக இருக்கிறது.

ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் சில அறிகுறிகள்

ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் உள்ளவர்களில் விரல்கள் பாதிக்கப்பட்டாலும், அது முக்கியமாக இடுப்பு எலும்பு, முழங்கால், பெருவில் ஆகியவற்றையே அதிகம் தாக்குகிறது.

மூட்டுகளில் வலி, வீக்கம், இறுக்கம் போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் தோன்றும்.
அவற்றின் உள்ளே நீர் சுரக்கக் கூடும். நாட் செல்ல,
அவற்றை ஆட்டும்போது மூட்டுகளினுள்ளே கொ கொர எனச் சத்தம் எழுவதுண்டு.

எடை அதிகரிக்கும்போது முக்கியமாக முழங்கால், இடுப்பு மூட்டுகளில் நோயின் தாக்கம் அதிகரிக்கும்.
மாறாக நோயுள்ளவர்கள் தமது எடையைக் குறைத்தால் நோயின் தாக்கம் குறையும்.

நடப்பதற்கு சிரமம் உள்ளவர்கள் நோயுள்ள பக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் கைத்தடி பிடித்து நடப்பது நோய் மேலும் தீவிரம் அடைவதைக் குறைக்கும்.

முழங்காலில் ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் இருப்பவர்கள் நடப்பதும், இடுப்பெலும்பு, அடி முதுகு ஆகியவற்றில் இருப்பவர்கள் நீந்துவதும் நல்ல பயிற்சியாகும்.

ஆயினும் கழுத்தெலும்பு வலி உள்ளவர்களுக்கு நீச்சல் நோயை அதிகரிக்கலாம்.

மருத்துவம்

நோயினால் மூட்டுகளில் ஏற்படும் வலியைத் தணிக்க சாதாரண பரசிட்டமோல் மாத்திரைகள் போதுமானதாகும்.
கடுமையான வலிநிவாரணிகள் தேவைப்படாது.
வலிநிவாரணி ஜெல் மருந்துகளை நோயுள்ள மூட்டுகளின் மேல் பூசுவது வலியைத் தணிக்க உதவும். பூச்சு மருந்தாக வெளியே பூசுவதால் வயிற்று எரிவு, பிரஸர் அதிகரித்தல் போன்ற பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம்.


மூட்டு வலிகளை மூணு வகையா பிரிக்கலாம். அதாவது
1. Osteo Artharitis, 2. Rhumotoid, 3. Gouti

முதல் வகை நீங்க சொன்னதுபோல விரல் மூட்டுகளில் வீக்கம், வலி, இரண்டாம் வகை வயதானவர்களுக்கும், உடல் பருமன் உள்ளவர்களுக்கும் அதிகமா வரக்கூடியது. மூன்றாம் வகை அதிக அளவில் இல்லை. நம்ம ஊர் பக்கங்களில் அதை சரவாங்கினு சொல்லுவாங்க.

பெண்களுக்கு அதிகப்படியா வரும் மூட்டு வலிகளுக்கான காரணங்கள் பாத்திங்கன்னா.. கால்சியம் சத்து குறைபாடு. நம்ம எலும்புகளில் 99% கால்சியம் சத்தும் 1% இரத்தத்திலும் இருக்கு. ஒரு குழந்தை உருவாகும்போது அதனுடைய எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் சத்தினை தாயின் முதுகெலும்பில் இருந்துதான் எடுத்துகொள்கிறது. அதனால தான் குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களுக்கு அதிகப்படியான இடுப்பு வலியும் வருகிறது.
நம்ம மூட்டு எலும்புகள சுத்தி கார்ட்டிலேஜ் டிஷ்யூ இருக்கும். இதுக்குள்ள (சைனோவைல் திரவம் ) (Glucosamine ) உடல் எடை கூடும்போதும், வயது கூடும்போதும் சைனோவைல் திரவம் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். அப்போ அந்த கார்டிலேஜ் டிஷ்யூல அழுத்தம் ஏற்பட்டு எலும்புகள் உரசிக்கொள்ள ஆரம்பிக்கும். அப்போதான் நமக்கு மாடிப்படி ஏறும்போதும், இறங்கும்போதும் கர்ரக் கர்ர்க் சத்தம் வர்றது. உடனடியா நாம அதுக்கு வைத்தியம் பார்த்துக்கணும். இல்லேன்னா மூட்டயே கழட்டி மாத்தற அளவுக்கு வந்துரும்.

ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1200mg to 1500mg வரை கால்சியம் தேவைப்படும்.
வேர்க்கடலை, வெந்தயக்கீரை,நண்டு, பால்,முட்டை இவைகளில் இருந்து கால்சியம் அதிக அளவு கிடைக்குது. அதையும் அளவா சேர்த்துக்கணும்

நன்றி: படுகை.காம்