Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2014
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,020 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி!

mutton briyaniசுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருள்கள்: பாஸ்மதி அரிசி – 1 கிலோ,   மட்டன் – 1 1/2 கிலோ,   நெய்  250 கிராம்,   தயிர் – 400 மில்லி (2 டம்ளர்),   பூண்டு – 100 கிராம்,   இஞ்சி – 75 கிராம் ,  பட்டை, கிராம்பு, ஏலம் – 3 வீதம்,   பெரிய வெங்காயம் – 1/2 கிலோ,   தக்காளி – 1/4 கிலோ,   பச்சை மிளகாய் – 50 கிராம்,   எலுமிச்சை – 1,   பொதினா, கொத்தமல்லிதழை – கையளவு,   கேசரிப்பவுடர் – சிறிதளவு,   முந்திரிப்பருப்பு – 50 கிராம்,   உப்பு – தேவையான அளவு

சமையல் குறிப்பு: விபரம்   செய்வது: எளிது, நபர்கள்: 4, தயாராகும் நேரம்: 15 (நிமிடம்),   சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)

முன்னேற்பாடுகள்:   1. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்   2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்   3. பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

 செய்முறை:

  •  1. குக்கரை அடுப்பில் வைத்து, சூடேறியது நெய்யை ஊற்றவும்
  • 2. நெய் சூடேறியதும் ஏலம் பட்டை கிராம்பைப் போடவும்
  • 3. பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
  • 4. பின்னர் அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதுகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்
  • 5. கழுவி சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மட்டன் துண்டுகளை அதில் போட்டு சிறிது நேரம் கிளறவும்
  • 6. தயிர், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கிளறிவிட்டு குக்கரில் வெயிட் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
  • 7. பின்னர் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு அரிசியை தனியாக வேறு பாத்திரத்தில் வேக வைத்துக்கொள்ளவும்
  • 8. குக்கரில் உள்ள குருமாவில் எலுமிச்சைச் சாறு ஊற்றி புதினா மல்லித்தழை போட்டு கொதிக்க விடவும்
  • 9. கொதிக்கும் குருமாவில் சமைத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி சமப்படுத்தவும்
  • 10. கேசரி பவுடரை சிறிது பால் கலந்து பிரியாணி மீது ஒரு பக்கமாக ஊற்றி, மூடி வெயிட் போட்டு லேசான தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கிவிடவும்
  • 11. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி பிரியாணியை வேறுபாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு பின்பு பரிமாறவும்.
  • பிரியாணி பார்ப்பதற்கு சிகப்பு, வெள்ளைக் கலரில் அழகாகவும் ருசி மிக்கதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.