தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,501 முறை படிக்கப்பட்டுள்ளது!

இபாதத்துகளில் கவனம் தேவை (AV)

மனிதர்களுக்கு இலக்கு, இலட்சியம் என்பது மிகவும் முக்கியமானது. பொதுவாக ஒரு செயல் செய்யும் போது மற்றொன்றை எதிர்பார்ப்பது மனிதனின் இயல்பு. இறைவன் மனிதனைப் படைத்ததே தன்னை வணங்குவதற்குத் தான். இந்த உலகில் நல்ல அமல்கள் செய்தவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் சுவர்க்கத்தை பரிசாகத் தருகிறான். வணக்கம் என்பது நாமாக செய்வது அல்ல! மாறாக நபிகள் (ஸல்) அவர்கள் ஏவிய, செய்து காண்பித்த அல்லது அனுமதித்த காரியங்கள் மட்டுமே சரியான வணக்கமாகும். நிச்சயமாக நமது வணக்கங்களில் அல்லாஹ்விற்காக என்ற தூய எண்ணம் இருக்க வேண்டும். இல்லையெனில் நமது வணக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. சகோதரர் கோவை ஐயூப் அவர்கள் குளோப் கேம்ப் பள்ளியில் ஆற்றிய உரையை ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் தருகிறோம். டெளன்லோடு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 29,946 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! 1/2

‘‘பழைய சோறா இருந்தாக்கூட பரவாயில்லை. ஆனா தொட்டுக்க ஏதாச்சும் இருக்கணும்” என்று சொல்லுமளவுக்கு சைடு டிஷ்சுக்கு பழகிப்போனவை நமது நாக்குகள். ஐந்தாறு வகை காய்களைச் சேர்த்து கமகமக்கும் குழம்பும், ரசமும், கூட்டுமாக ஜமாய்த்திருந்தாலும், ‘‘அதெல்லாம் இருக்கட்டும்.. பொரியல் என்ன?” என்று கேட்டு அது தமக்குப் பிடித்தமானதா என்பதைத் தெளிவு படுத்திக்கொண்ட பிறகே சாப்பாட்டில் கை வைக்கும் ஆட்கள்தான் அதிகம் இங்கே. ‘‘சோறா?” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லும் குழந்தைகள்கூட பொரியலும் வறுவலும் பிடித்துப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,662 முறை படிக்கப்பட்டுள்ளது!

பள்ளிக்கூடங்களில் மாறும் பண்புகள்!

கொல்கத்தாவிலுள்ள லாமார்ட்டின் என்கிற கான்வென்ட் பள்ளியின் தலைமை ஆசிரியரின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகிய எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ரவன்ஜித் என்ற மாணவனின் தற்கொலைச் செய்தியைக் கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். கான்வென்ட் பள்ளிகளால் வகுக்கப்பட்ட கொள்கை, நியதி, நெறி, ஒழுக்கம் ஆகிய பாதையிலிருந்து தடம் புரளுகிற ஒவ்வொரு மாணவனும், பள்ளி நிர்வாகிகளால் கொடுக்கப்படும் தண்டனையை அனுபவிக்கிறார்கள். இந்தப் பள்ளிகள் தவறுகளின் அளவுகோலின் அடிப்படையில் (அதாவது சிறிய தவறாகயிருந்தால் சிறிய தண்டனையாகவும், பெரிய தவறாகயிருந்தால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,099 முறை படிக்கப்பட்டுள்ளது!

பாமர மக்கள் தரும் லஞ்சம் ரூ.471 கோடி

பாமர மக்கள் தரும் லஞ்சம் ரூ.471 கோடி: கடந்த 4 ஆண்டில் அதிகரிப்பு

நாட்டின் கிராம பகுதி மக்கள் ரேஷன் கார்டு, சுகாதாரம், கல்வி, தண்ணீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை பெற, கடந்தாண்டில் 471 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளனர்.

“இந்திய ஊழல் ஆய்வு 2010′ என்ற தலைப்பில், மீடியா ஆய்வு மையம், 12 மாநிலங்களில், 9,960 வீடுகளில், இதுதொடர்பாக ஆய்வு நடத்தினர். வடகிழக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,379 முறை படிக்கப்பட்டுள்ளது!

இரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்!

சில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன. இது, தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, தாவரங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு முறையாகும். இருப்பினும் அமெரிக்காவில் வாழும் ஒருவகை கிளியினம் இதுபோன்ற விஷமுள்ள விதைகளை உணவாக உட்கொள்கிறது. இது மிகவும் வியப்புக்குரிய செயலாகும்! ஏனெனில் தாவரங்களை உணவாக உட்கொள்ளும் மற்ற விலங்கினங்கள் இந்தச் செடியின் பக்கம் தலைகாட்டவே பயப்படும்போது, இந்தப் பறவையினம் மட்டும் தொடர்ந்து விஷமுள்ள இந்த விதைகளை உணவாக உட்கொண்டும் எந்த விதப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,439 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிராம்பு மருத்துவ குணங்கள்

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,328 முறை படிக்கப்பட்டுள்ளது!

கனவு நனவாக கைகொடுங்க சாமியோவ்…!

தெருவோரத்தில் உண்டு, உறங்கியபடி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் இன்ஜி., கல்லூரிகளில் படிக்கின்றனர். மிகுந்த சிரமத்துக்கு இடையே படிக்கும் இம்மாணவர்கள் படிப்பைத் தொடர, உதவும் உள்ளங்களின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

பேரூர், செட்டிபாளையம் ஊராட் சிக்கு உட்பட்டது ஆறுமுகக்கவுண்டனூர். இங்கு நரிக்குறவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பயிலும் இரு மாணவர்கள், படிப்பை தொடர நிதியின்றி பரிதவிக்கின்றனர்.

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர் பார்த்திபன், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,841 முறை படிக்கப்பட்டுள்ளது!

லிபியா சொல்லும் சேதி!

நீங்கள் எத்தனைச் சின்னவர்கள் என்பதல்ல விசயம்! உங்கள் அபார நம்பிக்கையும் நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியை தீர்மானிக்கும்!

இந்த வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஒரு வட ஆப்பிரிக்க இளைஞனுக்கு முற்றிலும் பொருந்தும். 1960களில் அந்த வாலிபன், எகிப்தின் கமால் அப்துல் நாசரை வாசித்தான்; சீனாவின் மாவோவை படித்துப் பார்த்தான். அப்பொழுது அவனின் வயது இருபதுக்கும் இருபத்தைந்துக்கும் இடையில் தான்! சிறுபிள்ளை விவசாயம் வீடு வந்து சேராது என்று பெரியவர்கள் இளையவர்களை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,940 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹலாலான உழைப்பின் சிறப்பு

இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.

தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதரே! . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,333 முறை படிக்கப்பட்டுள்ளது!

மின் தடைக்கு நிர்வாகக் குளறுபடி காரணமா!

மின் வாரியம் ஏற்க மறுப்பு: ஒரே நாளில் 1,400 மெகா வாட் மின்சாரம் வீண்

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்தும், மின் வாரியம் வாங்க மறுப்பதால் மின் தடை குறையாததோடு, காற்றாலை மின் உற்பத்தியாளர்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் தொழிற்சாலை, விவசாயம் மற்றும் குடியிருப்புகளுக்குச் சேர்த்து, மொத்தம் 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது, 2 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு மின்சார . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,782 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்பிற்கு இல்லை எல்லை!

கேரள மாநிலத்தில் ஆலப்புழையைச் சேர்ந்த செல்லம்மாவிற்கு வாழ்க்கையில் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு இருந்தன. காலம் கடந்து நடந்த திருமணம், திருமணமான சில மாதங்களிலேயே கணவரின் மரணம், உறவினர்களின் உதாசீனம், அதைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்த பிறகும் உறவினர்கள் வீட்டை விட்டுத் துரத்தியது என்று எல்லாம் சேர்ந்து அவரை அவரை அறுபதாவது வயதில் முச்சந்தியில் நிறுத்தியது. இனி வாழ வழியில்லை, வாழ்வதில் அர்த்தமும் இல்லை என்று நினைத்த செல்லம்மா வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்தார். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,292 முறை படிக்கப்பட்டுள்ளது!

சீரியல்கள் குடும்பத்தை சீரழிக்குமா…

எப்படா சூரியன் மறையும்னு தவங்கிடக்கிற பெண்களை பட்டணம் முதல் பட்டிகாடு வரை பரவலாக காணமுடிகிறது… காரணங்கள் பல அல்ல ஒன்றே…அது சீரியல்கள் என்கின்றனர் பெண்கள்..

திண்டிவனம் நகராட்சியில் பெண்களுக்கான பயிற்சியில் சிறப்பு பயிற்சியாளராக வெளிச்சம் செரீன் மற்றும் வெளிச்சம் மாணவர்களை அழைத்திருந்தனர் நகராட்சி நிர்வாகம்..

தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு குறித்து பேச தொடங்கினார் செரின் அவர்கள்.. பெண்கள் தான் சமூகத்தை பிரசவிக்கிற மொத்த பங்களிப்பை பெற்றுள்ளார்கள். சமூகத்தை சரியாக வளர்த்தெடுக்கிற பக்குவம் . . . → தொடர்ந்து படிக்க..