தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,383 முறை படிக்கப்பட்டுள்ளது!

உழுந்தம்பருப்பு சாதம் + தேங்காய் துவையல்.

உழுந்தம்பருப்பு சாதம். தேவையான பொருட்கள். 1. பச்சரிசி————– 4 (கிண்ணம்) அதாவது தேவையான அளவு. 2. உளுத்தம்பருப்பு( தோல் நீக்கியது)———– 1 கிண்ணம். 3. தேங்காய் பூ————— 1 முறி தேங்காய் 4. உப்பு ————— தேவையான அளவு. குறிப்பு: அரிசி, உளுத்தம் பருப்பு 4:1 என்ற விகிதம். செய்முறை: பச்சரிசியை நன்றாக மூன்று முறை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். உளுத்தம் பருப்பையும் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு முறி தேங்காயை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,462 முறை படிக்கப்பட்டுள்ளது!

டீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா!?

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் தினமும் இரவில் வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.

அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் “கப்’களில், டீ, காபி குடிப்பது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 39,094 முறை படிக்கப்பட்டுள்ளது!

கருஞ்சீரகம் – அருமருந்து

கருஞ்சீரகத்தினை சிலர் ஹதீஸ்களைக் கூறி வியாபாரம் செய்கின்றனர். இதன் உண்மைத்தன்மையை விளக்க முடியுமா? வஸ்ஸலாம். (மின்னஞ்சல் வழியாக சகோதரர் பிஸ்ருல்லாஹ்)

தெளிவு: கருஞ்சீரகம் குறித்தும் அதன் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன. ”கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா)

பொதுவாக கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,055 முறை படிக்கப்பட்டுள்ளது!

எதிரிகளையும் துணையாக்கிக்கொள்ளுங்கள் !

என்ன ஆச்சரியமாக உள்ளதா? எதிரி நமக்கு எப்படி உதவ முடியும்? நமது குறிக்கோளுக்கும், நமது முன்னேற்றத்திற்கும், வெற்றிக்கும் இடைஞ்சலே இந்த எதிரிதானே! அவரை எப்படி நான் துணையாக்கிக்கொள்வது? என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது..

முதலில் எதிரி என்றால் யார் என்று பார்ப்போமா!

நமது முகம் கண்ணாடி இல்லாமல் நமக்குத்தெரியாது . அதுபோலவே நமது முதுகும் நமக்குத் தெரியாது. ஆனால் நம் எதிரில் உள்ளவர்களுக்கு நம்முடைய முதுகும் முகமும் நன்கு தெரியும்(எதிரியாக இருந்தாலும் ) .

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,742 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்

கொடுமணல் தொல்லியல் களம் இன்றைய கொடுமணல் என்னும் சிற்றூரில் இருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், நொய்யல் ஆற்றின் வட கரையில், ஈரோடு நகரிலிருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ளது. இதன் அமைவிடம், சங்ககாலச் சேரநாட்டின் தலை நகரமான கரூரை, மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,131 முறை படிக்கப்பட்டுள்ளது!

சவுதி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சலுகைகள்

ஃபிரி விஷா, கூலிக்கபில் ஆகிய பட்டியலில் உள்ளவர்கள் இப்போதுள்ள சலுகையை பயன்படுத்திக் கொள்ள தனது பாஸ்போர்ட்டை பெறுவதற்கு பெரும் தொகையை கொடுப்பதாக கேள்விப்படுகிறோம்.

நேற்று ஒருவர் 16 ஆயிரம் ரியால் கொடுத்து கபிலிடம் தனாஜில் வாங்கிதாகச் சொன்னார், ஒருவர் 6 ஆயிரம் ரியால் கொடுத்து தானஜிலுக்கு பாஸ்போர்ட் வாங்கியதகவும், 4 ஆயிரம் ரியால் கொடுத்து பாஸ்போர்ட்ட வாங்கியதாகவும் சகோதரர்கள் சொல்கிறார்கள்.

விபரம் தெரியாமலும் அறியாமையிலும் நம் சகோதரர்கள் பல . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,658 முறை படிக்கப்பட்டுள்ளது!

இறைவனுக்கு வழிகாட்டாதீர்கள்!

தலைப்பு சரிதானா என்ற சந்தேகம் உங்களில் பலருக்கு வந்திருக்கக் கூடும். இறைவன் அல்லவா நமக்கு வழிகாட்ட வேண்டும் அப்படி இருக்கையில் இறைவனுக்கு சிலர் வழிகாட்டத் துணிவது போலவும், அது வேண்டாம் என்பது போலவும் அல்லவா சொல்லப்படுகிறது என்றும் திகைக்கலாம். ஆனால் தலைப்பு சரி தான். தொடர்ந்து படியுங்கள்.

அண்ட சராசரங்களை இம்மி பிசகாமல் இயக்கத் தெரிந்த இறைவனுக்கு நம்முடைய வாழ்வை இயக்குவது எப்படி என்று சரிவரத் தெரிவதில்லை என்பது நம்மில் பலருடைய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 24,808 முறை படிக்கப்பட்டுள்ளது!

தும்மல் வராமல் தடுக்க…!

வாழ்நாளில் ஆயிரக்கணக்கான முறை நீங்கள் தும்மலை சந்தித்திருப்பீர்கள். சில பேருக்கு ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறைதான் தும்மல் வரும். சில பேருக்கு தொடர்ந்து 10 அல்லது 15 தும்மல்கள் வந்துவிடும். காலையில் படுக்கையிலிருந்து எழுந்து காலை கீழே தரையில் வைத்தவுடனேயே எனக்கு தொடர்ந்து 15, 20 தும்மல் வந்து விடுகிறது என்று சொல்பவர்களும் உண்டு.

சாதாரணமாக ஜலதோஷம், மூக்கில் நீர் வடிதல், தொண்டைப் பிரச்சினை, அலர்ஜியினால் ஏற்படும் ஜலதோஷம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,300 முறை படிக்கப்பட்டுள்ளது!

வட்டி – ஒரு சமுதாயக் கேடு!

“(அதிகமானோர்) வட்டியை உண்ணக் கூடிய அல்லது அதனுடை புழுதியாவது படியக் கூடிய ஒரு காலம் மக்கள் மீது வரும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவப்பது அபூ ஹுரைர (ரலி) அவர்கள். (நஸாயீ)

இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்நபி மொழி நூற்று நூறு பொருந்தி வருவதை தெளிவாகவே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. வட்டியின் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது என்று முடிவு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,093 முறை படிக்கப்பட்டுள்ளது!

நேர்மைக்கு முன் 1.9 கோடி ஒன்றுமில்லை!

நேர்மையற்ற பணம் வேண்டாம்: ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்

தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு நஷ்டஈடாக அளிக்கப்பட்ட ரூ. 1.9 கோடி பணத்தை, வழங்கியவர்களிடமே திருப்பி அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் குஜராத் ஆட்டோ டிரைவர் ராஜூ.

குஜராத் மாநிலம் சனாந்த் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ பர்வாத். ஆட்டோ டிரைவர். மேற்கு வங்க மாநிலத்தில் டாடா நானோ தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு கிளம்பிய போது, அங்கிருந்து கிளம்பிய அந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,673 முறை படிக்கப்பட்டுள்ளது!

பயமும் தயக்கமும்!

கண்பார்வையில்லாத ஒருவரிடம் இருக்கின்ற கண்ணாடி போன்றது : படிப்பறிவில்லாத முட்டாள்களிடம் உள்ள புத்தகங்கள்” என்று அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ்நாட்டில் தமிழைத் தவிர பல மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் வசித்து வருகின்றார்கள். எல்லாருமே ஓரளவு தமிழில் பேசுகிறார்கள்; பேசினால் புரிந்து கொள் கிறார்கள். ஆனால், மிகப் பெரும்பாலானவர்கட்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. இது ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.

ஆனால் தமிழைத் தாய் மொழியாகக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,440 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி

கிவி பழம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறப்பான உணவியல் தன்மை, மருத்துவப் பண்புகள் கொண்ட கிவி (Kiwi) என்ற பெயருடைய இந்தக் கனிக்கு சீனத்து நெல்லிக்கனி (Chinese Gooseberry) என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தகைய கனி பற்றி உலக அளவில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நிறைய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இந்தக் கனிக்கு இப்பெயர் எவ்வாறு வந்தது?

இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக . . . → தொடர்ந்து படிக்க..