Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2013
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,871 முறை படிக்கப்பட்டுள்ளது!

உலக செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புகள்

நீரில் இரண்டு முறை குளிக்க முடியாது என்பார்கள். இன்று அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய ஒப்புமைக்கு இதை பயன்படுத்தினாலும் தவறில்லை என்று எண்ண தோன்றுகிறது. அவ்வளவுக்கு விரைவான மாற்றங்கள் அறிவியல் துறையில், பதிய கண்டுபிடிப்புகளில் உருவாகி வருகின்றன. அறிவியல் கண்டுபிடிப்பு என்றவுடன் புதிதாக ஒரு பொருளை கண்டுபிடிப்பதை மட்டும் குறிக்கவில்லை.

கண்டுபிடிப்பட்ட பொருட்களின் தரம், மதிப்பு, வசதிகள் ஆகியவற்றை முன்னேற்றி செலவு, மாசுபாடு, எரியாற்றல் குறைந்த பொருட்களை உருவாக்கும் முயற்சிகளும் அறிவியல் கண்டுபிடிப்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,433 முறை படிக்கப்பட்டுள்ளது!

மகத்துவமிக்க இரவிற்கான வணக்கங்கள்! வீடியோ

ரமளானின் இருதிப்பத்து இரவுகள் மிகவும் சிறப்புக்குரியது. இதில் ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ருடைய இரவை தேடிப்பெற்றுக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். இருப்பினும் நபியவர்கள் நோன்பு கடமையானதிலிருந்து ஒவ்வொரு ரமளானிலும் கடைசிப்பத்து இரவுகளையுமே உயிர்ப்பித்தார்கள். இந்நாள்களில் நபியவர்கள் தங்களின் கீழாடையை இருகக்கட்டிக்கொள்வார்கள், பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள், முழு இரவையும் பகலையும் தொழுகையிலும், குர்ஆன் ஓதுவதிலும், திக்ரு செய்வதிலும், துஆ செய்வதிலும் ஈடுபடுவார்கள். ஒற்றைப்படை இரவுகள் என்று நபியவர்கள் ஒருபோதும் பிரித்துக்காட்டி, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 67,754 முறை படிக்கப்பட்டுள்ளது!

என்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்

என்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்’ என்று நெல்லிக்கனியைச் சொல்லுவது முற்றும் பொருந்தும். உள்ளங்கை நெல்லிக்கனி’ என்னும் சொல்தொடர் மிகவும் பிரசித்தமானது. நெல்லிக்காயினால் மனித சமூகத்துக்கு எத்தனை விதமான நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பொதுவாகத் தெரிந்ததே.

ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்துக்கு மூலக் காரணம் அவனுடைய உடம்பில் ஓடும் சுத்த ரத்தந்தான். இந்த ரத்தத்தில் அந்நியப் பொருள்கள் கலந்துவிட்டால் ரத்தம் கெட்டுவிடுகிறது. ரத்தம் கெட்டு விட்டல் வியாதிகள் உண்டாகின்றன. அவற்றைத் தடுக்கும் அல்லது எதிர்க்கும் சக்தி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,032 முறை படிக்கப்பட்டுள்ளது!

மரணமும் மண்ணறையும் (வீடியோ)

இந்த உலகம் என்பது நிரந்தரமற்றது. முடிவில்லாத உலகம் என்பது மறுமை தான். இந்த உலகில் நாம் செய்யும் செயல்களப் பொறுத்துத் தான் மறுமை வாழ்வு அமையும். ஒரு மனிதன் மரணம் தான் மறுமையின் ஆரம்பம். எனவே ஒருவரது மரணம் நல்லதாக அமைந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்.

நாம் மரணிக்கும் போது முஸ்லிமாக இருக்க வேண்டும். அதாவது லாயிலாக இல்லல்லாஹ் கூறியவனாக மரணிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும்…

ரமளான் இரவு நிகழ்ச்சி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,083 முறை படிக்கப்பட்டுள்ளது!

பாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது!.

ஒவ்வொரு நாளும் புதிதான மற்றும் ஆர்வமான ஒன்றை கற்றுக்கொள்ளும் படிப்பாக, பாரன்சிக் சயின்ஸ் படிப்பு திகழ்கிறது. குற்றப் புலனாய்வு நடவடிக்கையிலும், அதனையடுத்த நீதி வழங்கும் நடவடிக்கைகளிலும், ஒரு முக்கிய அம்சமாக பாரன்சிக் சயின்ஸ் திகழ்கிறது.

சூழல்

குற்றங்களை புலனறியவும், அதனை சரியான முறையில் கண்டறியவும், தூய அறிவியலைப் பயன்படுத்தும் செயல்பாட்டிற்கு பெயர்தான் பாரன்சிக் சயின்ஸ். இன்றைய நிலையில், நடைமுறையில் பார்த்தால், பயன்பாட்டில் இருக்கும் பாரன்சிக் அறிவியல் தொழில்நுட்ப சேவைகள், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,388 முறை படிக்கப்பட்டுள்ளது!

வஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்?

குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் என்று சொல்லுகிறவர்களைப் பார்த்து அல்லது தவ்ஹீத்வாதிகள் என்று பேசுபவர்களைப் பார்த்து வஹ்ஹாபிகள் என்று கூறப்படும் போது இந்த பெயர் எப்படி வந்தது இதன் அர்த்தமென்ன என நாம் தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகும்.

இந்த பெயரின் அர்த்தமென்ன?

இந்தப் பெயர் அல்லாஹ்வுடைய அழகு திருநாமங்களில் ஒன்றாகும்.வஹ்ஹாப் (வள்ளல்) பார்க்க குர்ஆன் 3:8,38:9,38:35 ‘வஹ்ஹாபி’ என்றால் ‘அல்வஹ்ஹாப்’ என்ற அல்லாஹ்வின் பெயருடன் இணைக்கப்பட்டு அல்லாஹ்வைச் சேர்ந்தவன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,829 முறை படிக்கப்பட்டுள்ளது!

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்

தற்போது மல்லிகைப் பூ சீசன் துவங்கியுள்ளது. மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக் கொள்ளவும், வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று மட்டுமே நினைத்திருந்தால் இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,533 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோய் எதிர்ப்பு சக்தி(Immunity)

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்தி வகைகள்:நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,924 முறை படிக்கப்பட்டுள்ளது!

எட்டு சவால்கள்…. எதிர்கொள்ளும் வழி !

உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்… குழந்தைகள்தான்! இன்றைய குழந்தைகள்… முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.

‘இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் குழந்தை இலக்கியப் படைப்பாளி நடராசன் மற்றும் மனநல ஆலோசகர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,332 முறை படிக்கப்பட்டுள்ளது!

முன்மாதிரி முஸ்லிமின் கொள்கை (வீடியோ)

ஒரு நாட்டில் மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு துணையாக மிகப்பெரிய சூனியக்காரன் ஒருவனும் இருந்தான். வயோதிகனான சூனியக்காரனுக்கு தான் இறப்பதற்குள் தன்னுடைய சூனிய வித்தையை நம்பிக்கையான ஒருவனுக்கு கற்றுத்தர வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிறுவனை தன்னிடம் அனுப்புமாறு மன்னனிடம் கேட்டான். மன்னனும் சிறுவன் ஒருவனை தயார்செய்து, சூனியக்கரனிடம் பாடம் படித்துவருமாறு தினமும் அனுப்பினான். பாடம்படிக்கச் செல்லும் வழியில், ஒரு நல்ல மனிதரின் தொடர்பால் சிறுவனுக்கு நேர்வழி கிடைத்தது. அந்த நேர்வழியின்பால் சிறுவனும் மக்களை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,254 முறை படிக்கப்பட்டுள்ளது!

உங்க வீட்டு செல்லம் அடம் பிடிக்கிறதா ?

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் அழுகையை நிறுத்தவும், அவர்களின் மனதில் தைரியத்தை வளர்க்கும் சில வழிமுறைகளையும்,கோவை அரசு கல்லூரி உளவியல் பேராசிரியர் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார். பள்ளிக்கூடங்கள் திறந்து மூன்று வாரங்களுக்கும் மேலாக ஆன நிலையில் பலரது குழந்தை தினமும் அழுது கொண்டே பள்ளிக்கு செல்கிறது. பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கிறது.

கோவை அரசு கலைக்கல்லூரி உளவியல்(சைகாலஜி)பேராசிரியர் செல்வராஜூ கூறியதாவது : குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் அழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மனோதத்துவ காரணங்களே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,638 முறை படிக்கப்பட்டுள்ளது!

முகப்பரு பாதிப்பிலிருந்து தப்பிக்க…

இளம் பருவ வயது துவங்கியவுடனே முகத்தில் பருக்கள் முளைக்கத் துவங்கி விடுகிறது. இந்த பருவ வயது பருக்களால் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முகம் பொலிவை இழந்து விடுகிறது. இதனால் தங்கள் முகம் முழுவதும் பள்ளம் விழுந்து அசிங்கமாகி விடுமோ என்கிற அச்சத்திலும், மன உளைச்சலிலும் இதற்கு மாற்று காண மருந்து தேடி அலையும் இளம் வயதினர் ஏராளம்.

முகப் பருக்கள் வருவது ஏன்?

1. முக சருமத்தின் உட்புறம் கீழ்பாகத்திலுள்ள நடுத்தோலில் நிறைய . . . → தொடர்ந்து படிக்க..