Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2013
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,323 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒரு நாளைக்குப் பிச்சை எடுக்கும் தொகை ரூ 10,000/-

ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பிச்சையெடுப்பவர்களை பின் எப்படி அழைப்பதாம்?

இங்கல்ல, பிரிட்டனில் நாட்டிங்ஹாம் நகரில் பிச்சையெடுப்பவர்களுக்கு ஒரு வாரத்துக்கு 700 பிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் கிடைக்கிறதாம். அது 70,550 ரூபாய்க்குச் சமம். ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் என்றால் ஆண்டுக்கு 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

அதிக சம்பளம் கிடைப்பதாகச் சொல்லப்பட்டு பலரின் வயிற்றெரிச்சலுக்கு உள்ளாகிக் கிடக்கும் நமது ஐடி துறையினருக்குக் கூட இந்த அளவுக்குச் சம்பளம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,504 முறை படிக்கப்பட்டுள்ளது!

கை கால்களில் விறைப்பு (numbness)

கை கால்களில் விறைப்பு எரிவு வலிகள் வருவது எதனால்?

‘இரும்பிலைதான் குசினிச் சாமான்களை எல்லாம் வாங்கி வைக்க வேணும் போலை கிடக்கு. சாப்பாட்டு பிளேட் கப் கிளாஸ் என்று ஒண்டும் மிச்சமில்லாமல் போட்டு உடைக்கிறாள்’ தனது மனைவிமேல்தான் அவருக்கு அவ்வளவு கோபம். அவளும் கோபக்காரியா? திரைப்படங்களில் காண்பது போல ஆவேசமான மனைவியா என்று எண்ணி அவளது முகத்தைப் பார்த்தேன். சாந்த சொரூபியாகத்தான் தோற்றமளித்தாள்.

சாந்தசெரூபி போட்டு உடைப்பது ஏன்?

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,384 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிறு தானியங்களில் சத்தான சேமியா

மதுரையில் பலசரக்கு விற்பனைக்கு பேர்போன கீழமாசி வீதியை ஒட்டியுள்ள வெங்கலக்கடை தெரு வழியாக போகும் போது ஒரு கடை வாசலில் இருந்த வித்தியாசமான போர்டு கண்களை ஈர்த்தது.

இன்றைய துரத்தலான வாழ்க்கையில் எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும் நாம் இந்த வேகமான ஓட்டத்தில் தொலைத்தவை மொட்டை மாடிக்காற்று, சைக்கிள் பயணம், முற்றத்து கோலம், தோட்டத்து பூக்கள், கிணற்றுக்குளியல், எதிர்பார்ப்பு இல்லாத நட்பு, திருவிழாக்களிப்பு இவை எல்லாவற்றையும் விட தற்போது அதிகமாக இழந்த, இழந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,820 முறை படிக்கப்பட்டுள்ளது!

பக்கத்து வீட்டு அங்கிளை, நம்ம வீட்டுக்கு…

“பக்கத்து வீட்டு அங்கிளை, நம்ம வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லுங்கம்மா!”

பத்து வயதான அந்த குட்டிப்பெண், படிப்பில் படு சுட்டி. விளையாட்டில் அவளை மிஞ்ச ஆளில்லை. எப்போதும் பரபரவென ஒரு பட்டாம்பூச்சியைப் போல் சுற்றிகொண்டிருந்த குழந்தை, திடீரென வீட்டில் யாருடனும் அதிகம் பேசுவதில்லை. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதில்லை. சரியாகச் சாப்பிடுவதில்லை. முதல் ஐந்து ரேங்குக்குள் வருகிறவள் இந்த முறை தேர்வில் இரண்டு பாடங்களில் ஃபெயில். அவள் ரேங்க் கார்டைப் பார்த்த பிறகுதான் பெற்றோர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,847 முறை படிக்கப்பட்டுள்ளது!

தனிமையில் இறைவனை அஞ்சி செயல்படல் – Video

வணக்கசாலிகள், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்கள், இபாதத்தாரிகள் என்றெல்லாம் நாம் சிலரைக் கூறுகின்றோம். இதன் அடிப்படை நாம் வெளியிலே காணும் அவர்களின் செயல்பாடுகள் தான். ஆனால் உண்மையில் இறையச்சம் உடையவர்கள் யார் எனில்.. எல்லா நிலையிலும் குறிப்பாக மனிதர்கள் யாருமே பார்க்காத நிலையிலும் அல்லாஹ்வை அஞ்சி செயல்படுபவன் ஆகும்.

காரணம் மனிதன் பொது இடங்களில் பாவங்களைத் தவிர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள் என்ற வெட்கம், தன குடும்ப அல்லது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,561 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒரு கடிதமும் சில கேள்விகளும்…

ஒரு கடிதமும் சில கேள்விகளும்…மகனின் வளர்ச்சியில் அக்கறை

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தன் மகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அவனது ஆசிரியருக்கு எழுதிய கடிதம் உலக பிரசித்தி பெற்றது.

ஏமாற்றுவதைவிட தோற்பது எவ்வளவோ பெருமையானது என்பதை என் மகனுக்கு கற்றுத் தாருங்கள். எல்லோருமே தவறு என்று கூறினாலும் தன் சொந்தக் கருத்துக்களில் நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள். கண்ணீர் விடுவதில் அவமானமில்லை என்றும், சிடுமூஞ்சிகளை அலட்சியப்படுத்தவும், இனிமையாக பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,296 முறை படிக்கப்பட்டுள்ளது!

அப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல

அப்பன்டிசைடிஸ் என்ற பெயரைக் கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. இருந்தபோதும் நோய் பற்றிய தெளிவு பலருக்கும் இல்லை. நாம் உண்ணும் உணவில் உள்ள கல் குடலில் போய் அடைப்பதால்தான் ஏற்படுகிறது எனத் தவறாக எண்ணுபவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள்.

வயிற்றின் வலதுபுற கீழ்ப்பகுதியில்

அப்பன்டிக்ஸ் என்பது எமது உணவுக் கால்வாயின் பெருங்குடலில் விரல் போல நீளவடிவான ஒரு சிறு பை போன்ற உறுப்பு ஆகும். இது எமது வயிற்றின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,320 முறை படிக்கப்பட்டுள்ளது!

பாலூட்டும் புறா

தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா (Emerald Dove) பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்ட இந்த மரகதப்புறா மட்டுமல்ல, எல்லாப் புறாக்களும் தங்கள் குஞ்சுகளைப் பாலூட்டி வளர்க்கின்றன என்பது தெரியுமா?

புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள ‘crop’ எனப்படும் தொண்டைப் பையின் உட்புற சுவரின் திசுக்களில் சுரக்கிறது. இதனால் புறாப்பால் ‘crop milk’ எனவும் அழைக்கப் படுகிறது. திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்றே கெட்டியாக இருக்கும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,059 முறை படிக்கப்பட்டுள்ளது!

சந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க !

நம் மண்ணில் நெல்லும் கரும்பும் காய்கறிகளும் செழித்து விளைந்து நிற்க, உழவர் பண்டிகையான ‘பொங்கல்’ விழாவை ஊருடனும் உறவுகளுடனும் சேர்ந்து மகிழ்ச்சி ‘பொங்கப் பொங்க’ கொண்டாடுகிறோம்! அந்த நெல்லையும் கரும்பையும் பல பயிர்களையும் ஆசையுடனும் அக்கறையுடனும் விளைவிப்பது நம்நாட்டின் ‘முதுகெலும்பு’ எனப்படும் விவசாயிகள்தான். அவர்கள்தானே இப்பண்டிகையின் கதாநாயகர்கள்! அப்படி சில வி.ஐ.பி., விவசாயிகள் இங்கே பேசுகிறார்கள்…

‘என் வழி… இயற்கை வழி’ என்று விளம்பரப் பலகை வைக்காத குறையாக, இயற்கை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,494 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாம் ஓர் அறிமுகம் கேள்வி – பதில் நிகழ்ச்சி

இஸ்லாம் என்பது வாழ்க்கை நெறி. நாம் வாழும் பூமி மற்றும் உள்ள பிரபஞ்சத்தையும் அதில் வாழும் அனைத்து உயிரினங்களையும் மற்றவைகளையும் படைத்து பரிபாலித்து வருவது ஒரே இறைவனாகிய அல்லாஹ் தான். யார் இந்த மனித சமுதாயத்தை படைத்தானோ அவன் தான் சரியான வழிகாட்டலை தர முடியும். அது தான் இஸ்லாம் மார்க்கம்.

ஆனால் இஸ்லாம் பற்றி பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் முஸ்லிமல்லாதோர் மத்தியில் உள்ளது. அந்த வகையான சந்தேகங்களை நிவர்த்தி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,552 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2014

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் தேதியை, தமிழக அரசு, நேற்று அறிவித்தது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு, மார்ச், 3ல் இருந்தும், பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. பொதுத்தேர்வை, எத்தனை லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர் என்ற விவரம், இன்னும் சேகரிக்காத நிலையில், மிகவும் முன்கூட்டியே, தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது தேர்வுக்கான அனைத்து பணிகளும், மும்முரமாக நடந்து வருவதால், தேர்வு அறிவிப்பை, மாணவ, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,246 முறை படிக்கப்பட்டுள்ளது!

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும்.

இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் . . . → தொடர்ந்து படிக்க..