தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,139 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரூ.3 லட்சம் பலே வருமானம் தரும் பால் காளான்!

இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு… அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.

‘பசுமை பால் காளான் பண்ணை’ என்கிற பெயர் பலகை பளிச்சிட்ட அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது… . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,816 முறை படிக்கப்பட்டுள்ளது!

முயற்சி சிறகுகள் முளைக்கட்டும்!

காத்திருக்கும்வரை நம் பெயர் காற்றென்றே இருக்கட்டும்… புறப்பட்டு விட்டால் புயலென்று புரியவைப்போம்! இது கவிஞர் மு. மேத்தாவின் தன்னம்பிக்கைமிக்க கவிதைகளில் ஒன்று. தென்றலாக இருப்பவரை, புயல்போல புறப்படச் செய்யும் அற்புத வரிகள் இவை. காத்திருத்தல் என்பதற்குகூட ஓர் காலவரை இருக்கிறது என்பதை உணர்த்தும் கருத்தாழம் மிக்கவை இக்கவிதை. நம் தேவைகளை, நியாயமான ஆசைகளை அடைவதற்கு விடாமுயற்சியும், வாய்ப்புகளைத் தேடுவதில் முனைப்பும் வேண்டும். தண்ணீர்கூட ஓடும்போதுதான் நதியாகிறது. மாறாக தேங்கினால் அதுவே குட்டையாகிவிடும்.அதுபோல, நமது முயற்சிகளில் வேகம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,775 முறை படிக்கப்பட்டுள்ளது!

வங்கிகளுக்கு மல்லையா கற்றுத் தந்த பாடம்

பல வங்கிகளிடம் 7,000 கோடி ரூபாய் அளவில் கடன் பெற்று, அதை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர் என்று பட்டியலிடப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சமீபத்திய லண்டன் பயணம்தான் வங்கி துறையில் இப்பொழுது பரபரப்பு செய்தியாகப் பேசப்படுகிறது.

2004 முதல் 2010 வரை 17 வங்கிகள் மல்லையாவின் பெயரை முன்னிறுத்திய கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு 7,000 கோடி ரூபாய் அளவிலான கடன் தொகையை வழங்கியிருக்கின்றன. இதில், 90% அளவுக்கான கடன் தொகை, ஸ்டேட் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,177 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை சேமியா உணவுகள்! 2/2

கீரை சேமியா கட்லெட்

தேவையானவை: சேமியா – 1 கப், கீரை (நறுக்கியது ) – 1 கப், உருளைக்கிழங்கு – 2, பிரெட் – 2 ஸ்லைஸ், மைதா – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது – ஒன்றரை டீஸ்பூன், மல்லித்தழை – சிறிது, எலுமிச்சம்பழச் சாறு – சிறிதளவு, உப்பு – தேவைக்கு, மைதா – அரை கப், பிரெட் தூள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,592 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்று அனாதை விடுதியில்! ஆனால் இன்று?

தனது நட்பு வட்டத்தில் அக்கா என்றழைக்கப்படும் ஜோதி ரெட்டி, அன்று நள்ளிரவு வரை அவர் தங்கி இருந்த அனாதைகள் இல்லத்திற்குத் திரும்பவில்லை. ஏனென்றால் அவள் அனைத்து விதிகளையும் மீறுவதென்று முடிவெடுத்து விட்டாள்.

அன்று அவர்கள் எடுத்த முடிவு உண்மையில் சற்றுத் துணிச்சலானது தான். அவள் சிரித்தாள். மனதின் ஆழத்தில் இருந்து உரத்த குரலில் சிரித்தாள். அது பதின்ம வயதுப் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட இன்பங்களில் இருந்து வெடித்துக் கிளம்பிய சிரிப்பு.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,645 முறை படிக்கப்பட்டுள்ளது!

சர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்

நோய்களைத் தடுக்குது எச்சில் ட்ரீட்மென்ட்!

நான்கு முறை தும்மல் வந்தாலே மருத்துவமனைக்கு ஓடுவார்கள் சிலர். டாக்டரும் பத்து டெஸ்ட்டுகளுக்கு பரிந்துரைச்சீட்டு எழுதித் தருவார். மூன்று நாள் ஆஸ்பத்திரி வாசத்தில் கணிசமான தொகை காலியாகி, வீடு திரும்பும்போது தெரியும்… அது சாதாரண ஜலதோஷம் என்று!

இன்றைய யதார்த்தம் இது. நோய் குறித்த எச்சரிக்கை அவசியப்படும் அதே வேளை, ‘எதற்கெடுத்தாலும் மருத்துவ மனையா’ என்கிற கேள்வியையும் தவிர்க்க முடிவதில்லை. ‘‘இதற்கெல்லாம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 11,824 முறை படிக்கப்பட்டுள்ளது!

தியாகப் பெண்மணிக்கு கிடைத்த பரிசு!

(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அல்குர்ஆன் 9 -111

அல்லாஹ்விற்காக தியாகம் செய்த எத்தனையோ ஆன்களும் பெண்களும் அன்றிலிருந்து இன்று வரை இருக்கின்றார்கள். நமது சிந்தனைக்காக உண்மை நிகழ்ச்சிகளில் இரண்டை இங்கே காணலாம். சரித்திரத்திலிருந்து ஒரு பெண்மணியின் தியாகத்தையும், சமகாலத்தில் ஏற்பட்ட – நமது மனதில் துடிப்பு ஏற்படுத்தக் கூடிய மற்றொரு சம்பவத்தையும் இந்த உரையில் நாம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 184,719 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்

‘அத்திப் பூத்தாப்போல இருக்கே?’ என்று ஒரு பழமொழி உண்டு. உண்மையில் அபூா்வமாக பூப்பதாக நினைக்க வேண்டாம். அது பூக்கலேன்னா எப்படி அத்திக்காயும் அத்திப்பழமும் நமக்குக் கிடைக்கும். அந்தப் பூ நம்ம கண்ணுக்கு அவ்வளவா தெரியறது இல்ல. ஏன்னா அது அடிமரத்திலயிருந்து உச்சி வரைக்கும் மரத்த ஒட்டியே காய்க்கும். அதனால் இதை “காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்” என்ற விடுகதையிலும் சொல்வர்.

மூலிகையின் பெயர்- அத்தி தாவரப்பெயர் – FICUS . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,152 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிங்கப்பூரில் குடிநீர் பிரச்னை தீர்ந்தது எப்படி?

ஒரு மாநகரத்தின் மக்கள் தொகைக்கேற்ப, அதன் அடிப்படை வசதிகள் திட்டமிடப்பட வேண்டும். திட்டமிடப்படாமல், நகரத்தை விரிவாக்கினால், இயற்கை வளங்கள் அழிவதோடு, பஞ்சமும், இயற்கைப் பேரழிவும் உண்டாகும்,” என்கிறார், அறம் முருகேசன், 50. அவர், பத்தாண்டுகளுக்கும் மேல், சிங்கப்பூரில் கட்டட வடிவமைப்பாளராக பணியாற்றியவர்.

சிங்கப்பூரில் எப்படி?

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சிங்கப்பூரை பொறுத்தவரையில், 5 கி.மீ.,க்கு ஒரு இடத்தில், மிகப்பெரிய மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,961 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெற்றியாளர்களின் முக்கியமான 12 சூத்திரங்கள்!

ஜெயிப்பது நிஜம்! வெற்றியாளர்களின் மிக முக்கியமான 12 சூத்திரங்கள்!! வெற்றியாளர்கள் உலகின் மிகப்பெரிய, அறிவு சார்ந்த சொத்தான, மூளையை (Intellectual Property Brain) பயன்படுத்தி, அதாவது சிந்தித்து, பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்னர். வெற்றியாளர்கள், கடந்த கால தோல்விகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. எதிர்காலத்தைப் பற்றி பயப்படுவதும் இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் வாழுகிறார்கள். தோல்வியின் மூலம் ‘எதைச் செய்யக்கூடாது’ என்றஅனுபவத்தையும், வெற்றியின் மூலம் ‘எதைச் செய்ய வேண்டும்’ என்றவெற்றியின் சூத்திரங்களையும் (Success Formulae) கண்டுபிடித்து, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,852 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை சேமியா உணவுகள்! 1/2

இட்லி, தோசைக்கு நிகரான டிபன் அயிட்டம் எதுவும் இல்லைதான். ஆனாலும், தினமும் இட்லி, தோசையே செய்துகொண்டிருப்பது போரடிக்காதா? அவற்றுக்கு பதிலாக எத்தனையோ அயிட்டங்கள் இருந்தாலும், எளிதில் செய்யக் கூடிய உணவுக்குதானே இல்லத்தரசிகளின் வோட்டு? அந்த வரிசையில் முதலிடம் பெறுவது சேமியாதான். இது எளிதில் கிடைக்கும். செய்வதும் சுலபம். குழந்தைகளுக்கும் பிடித்த சுவை. ஆனால், இந்த சேமியாவில் உப்புமாவைத் தவிர வேறு என்ன டிபன் செய்வது? உங்களின் இந்த குழப்பத்துக்கு விடை சொல்லவே இந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,860 முறை படிக்கப்பட்டுள்ளது!

மிதிவண்டி – சிறுகதை

மணிக்கு எப்போதுதான் பொழுது விடியுமோ என்று மனசு குதித்தது. இரவு அம்மா தந்த இட்லியும், சட்னியும் தொண்டையைத் தாண்டி இறங்கவேயில்லை. இரவு முழுக்க கலர்கலராய் கனவுகள் மனசுக்குள் வந்தபடி இருந்தன.

இன்றைக்குப் பார்த்து சூரியன் இறங்க மறுத்தது போல் அலுப்பாய் இருந்தது. காத்திருக்கும் போதுதான் நேரம் கடப்பது எத்தனை சிரமமென்று தோன்றியது. யாருக்கும் தெரியாமல் எழுந்து போய் இரண்டொருமுறை ஜன்னலை திறந்து வாசலை எட்டிப் பார்த்துவிட்டு வந்து படுத்துக் கொண்டான்.

. . . → தொடர்ந்து படிக்க..