Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2016
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,261 முறை படிக்கப்பட்டுள்ளது!

எந்த படிப்பு யாருக்கு பொருந்தும்?

கல்வி மட்டுமே மனிதனை மாமனிதனாக, சான்றோனாக, செல்வச் செழிப்பு மிக்கவனாக மாற்றுகின்றது என்பதில் யாருக்கும் ஐயமில்லை. சிலர் பெருமைக்கு கல்லூரிக்கு வந்தாலும், சிலர் கல்யாண பத்திரிக்கைகளில் தனது பெயருக்கு பின்னால் கூடுதல் எழுத்துக்கள் வர வேண்டும் என்பதற்காகவும், தான் படித்திருந்தால் மட்டுமே தனக்கும் படித்த வரன் அமையும் என்பதற்காகவும் என ஒரு சில காரணங்களுக்காகவும் கல்லூரி வந்து போகின்றனர் சிலர். அவர்களுக்கு எந்தமாதிரியான உயர்கல்வி அமைந்தாலும் அவர்கள் அதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கப்போவதில்லை. அதனால் அவர்கள் வாழ்வில் எந்தவொரு மாற்றமும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் செல்வந்தர்கள் தங்களிடமிருக்கும் செல்வத்தை தக்கவைப்பதே அவர்களது நோக்கம்.

அடுத்த தரப்பு மாணவர்களோ ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர்கள் நினைப்பார்கள் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தமது குழந்தையும் தன்னுடைய கஷ்டங்களைப் படக்கூடாது என்று. தான் என்ன கஷ்டம் பட்டாலும் தனது மகனையோ, மகளையோ நல்ல கல்லூரியில், நல்ல பாடப்பிரிவில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணங்கொண்டவர்கள் ஏராளம்.

100க்கு 90% பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு சிறந்த உயர்கல்வி கொடுப்பதன் மூலம் தமது குழந்தைகளை நல்ல மனிதர்களாக ஆக்கிவிட்டால் அதன்மூலம் செல்வமும், பெயரும் தமது குடும்பத்திற்கு வந்துவிடும். சமூகத்தில் தாமும் உயர்ந்த நிலைக்கு சென்றுவிடலாம் என்பதாகவே அவர்களின் எதிர்பார்ப்பு உள்ளது.

பெற்றோர்களின் நிலை

தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் உள்ள பெற்றோர்களின் கல்வி நிலை பள்ளிக்கல்வியில் இடைநிலை அதாவது 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பாகத் தான் இருந்திருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களால் எப்படி தமது குழந்தைகளை சரியான உயர்கல்வியில் சேர்க்க முடியும்? அதற்கு வழிகாட்டுதலாக தான் இக்கட்டுரையை எழுதுகிறேன்.

தற்பொழுது 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ள மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அடுத்து என்ன படிப்பைத் தேர்ந்தெடுப்பது? என்ன படிப்பது? எது தனது குழந்தைக்கு பொருத்தமானதாக இருக்கும்? அதன்மூலம் அதிகம் சம்பாதிக்க முடியுமா? நினைக்கும் தொழிலை சொந்தமாக நடத்த முடியுமா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் சில பெற்றோர்களின் தூக்கத்தையும் இந்த எண்ணங்கள் கலைத்துக் கொண்டிருக்கிறது என்பதே 100% உண்மை.

ஆழ்கடலின் ஆழம் தெரியுமா?

கலை அறிவியல் படிப்புகள், பொறியியல், மருத்துவம், துணை மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், வழக்குறைகள், ஆடிட்டர், பொருளாதாரம், வணிகம் போன்ற எண்ணற்றபடிப்புகளும், அதில் வேலை வாய்ப்புகள் இருப்பது மிகப்பெரிய கடலில் நீந்தி மீன்பிடித்தும் கடலின் ஆழம் தெரியாது, நீளம் அகலம் தெரியாது, எந்த திசையில் செல்ல வேண்டும் என்பது தெரியாது, நம்மைவிட பெரிய மீன்கள் வந்தால் அது நம்மை வீழ்த்திவிடும். பாறைகளும், அபாயகரமான உயிரினங்களும் வசிக்கும் இடம். இவ்வளவு பெரிய கடலில் நாம் நீந்தி மீன்களுடன் கரை சேர்வதே வாழ்க்கையின் வெற்றி. அபாயகரமான கடலில் நீந்துவதற்கு தன்னம்பிக்கை என்ற துடுப்பு மட்டும் போதாது. அறிவு என்ற ஊன்றுகோலும் தன்னிடம் இருக்குமானால் படகினை எளிதில் ஓட்டி மீன்களுடன் கரை சேரலாம் என்பதே திண்ணம்.

200/200 மதிப்பெண்கள் உதவுமா?

2015ம் ஆண்டு ப்ளஸ் டூ-வின் போது தேர்வினை 9 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத முன்படுகின்றனர். ஒவ்வொருவரும் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் அரசு பள்ளி மாணவர்கள் ஒரு ஆண்டும், தனியார் பள்ளி மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகளும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 200/200 மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் வாழ்வில் வெற்றி பெற்றுவிடலாமா? மதிப்பெண்கள் குறைவாக பெற்றவர்களும், தேர்வில் தோல்வி அடைந்தவர்களும் எதிர்காலம் இல்லை என்றாகிவிடுமா?

தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதும், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதும் அவர்தம் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட தனிப்பட்ட முடிவுகளின் தன்மையே. அதற்காக நான் தேர்வில் தோல்வி அடையலாம் என்று கூறவில்லை. தோல்வி அடைந்தாலும் சரியான வழிகாட்டுதலின் மூலம் நல்லதொரு எதிர்காலத்தை அடையலாம் என்பதே என் கருத்து.

சரியான உயர்கல்வியை அடையாளம் காண்பது எப்படி?

இயற்கையில் ஒவ்வொரு மனிதனின் கைவிரல் ரேகை எப்படி மாறுபட்டு தனித்தனியாக உள்ளதோ அதைப்போல் கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் அவரவர்க்கென தனித்திறமைகளைப் பெற்றிருப்பர். அத்திறமைகளை வெளிக்கொணர்வதே கல்வி.அதாவது தன்னைத்தானே அறிந்து கொள்வதே கல்வி.

“விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பார்கள். அதைப்போல ஒவ்வொருவரின் எதிர்காலமும் அவர்களின் செயல்பாடுகள் பள்ளிப்பருவத்திலேயே அறியப்படுகின்றது. மாணவர்களின் தகுதிகளும், திறமைகளுக்கேற்ப உயர்கல்வி பிரிவு அமையப்பட்டால் அவர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கப்படுவதுடன் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

ஒரு சில மாணவர்களுக்கு இளமையிலேயே எதையும் ஆய்ந்து கேள்வி கேட்கும் திறன் இருக்கும்.அவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான துறைகள் பொருத்தமாக இருக்கும். சில மாணவர்கள் கணக்கு பாடத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களும் அத்துறை சார்ந்து உயர்கல்வி அமையப் பெறலாம். அதேநேரத்தில் மாணவர்களின் திறமையும், ஆர்வமும், அத்துறையின் வளர்ச்சி விகிதம், வேலைவாய்ப்புகள் போன்ற எதிர்கால காரணிகளைத் தொடர்புபடுத்தி மாணவர்களின் ஆர்வம் சரியானதா? அவர்கள் தேர்வு செய்யவிருக்கும் துறைசரியானதா? இவற்றையெல்லாம் ஆய்வு செய்து மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டப்படுகிறார்கள்.

உளவியல் தேர்வு

சில மாணவர்கள் வெளிப்படையாக இது பிடிக்கும், இது பிடிக்காது என்று அவர்கள் தனது முடிவில் தெளிவாக இருப்பார்கள். ஒரு சிலர் அவர்களாக எதையும் தேர்வு செய்துகொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு உளவியல் தேர்வு, அதாவது ஆழ்மனதில் உள்ள திறமைகளை Psychometric Test என்பது உளவியல் தேர்வின் மூலமூம், Personal  Counselling எனப்படும் நேரடி கலந்தாய்வின் மூலமும் கல்வி ஆலோசகர் ஆய்வு செய்து மாணவர்களின் திறன், ஆர்வம் அடிப்படையில் உயர்கல்வி வழிகாட்டுதல் வழங்கப்படுகின்றது.

பெற்றோர்கள் மாணவர்களின் கல்விக்கு செய்யும் தொகையினை ஒரு செலவாக கருதாமல் அதனை ஒரு மூலதனமாக நினைத்து சரியான முறையில், தமது குழந்தையின் வருங்காலத்தில் இந்த நாட்டின் நிர்வாகம் செய்யும் வல்லுனர்களாக வருவார்கள் என்பதில் உறுதியான செய்ய வேண்டும்.

கல்வி ஆலோசகராகிய எனக்கு ஆண்டுதோறும் உயர்கல்வியினைத் தேர்வு செய்வதில் சில ஆண்டுகள் காலத்தையும், பொருட் செலவையும் வீண்செய்து பின்னாளில் தமது குழந்தைகளை நல்ல நிலைக்கு வர உளவியல் தேர்வின் மூலம் அறிந்து சரியான உயர்கல்வி மூலம் நல்லதொரு வாழ்வை அமைப்பதற்கு வழிகாட்டிய வெற்றிக்கதைகள் அதிகம்.

தங்களது குழந்தையிடம் சரியான உயர்கல்வி தேர்வினை தேர்வு செய்ய உளவியல் தேர்வினை மேற்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய அன்பான வேண்டுகோள்.

கல்லூரிகளின் தரம், வேலைவாய்ப்பு நிலைகள், எந்த துறை அதிக வளர்ச்சி கொண்டுள்ளது போன்ற அறிய தகவல்களை மத்திய மாற்றும் மாநில அரசிடம் இருந்து நேரடி தொடர்பு கொண்டு மாணவர்களின் சரியான ஒரு உயர்கல்விக்கு வழிகாட்டுவது எங்களின் சிறப்பான சேவையென்று கருதுகிறோம்.

376மேலும் விவரங்களை பெற 96553 21216 என்ற எண்ணிலோ அல்லது selvaec@gmail.com மின்னஞ்சல் முகவரியிலோ, இரவு 8 மணி முதல் 9 மணி வரை 94444 34118 என்றஎண் மூலமாக பெறலாம்.

மூர்த்தி செல்வகுமாரன்