அமெரிக்க பழமொழிகள்
- உலகில் புத்திமதிதான் இலவசமாக கிடைக்கும் சரக்கு
 - வெகுமதியும் தண்டணையுமே உலகை ஆட்சி செய்கின்றன.
 - நரியோடுசேர்ந்த சேவல் நன்மை அடையாது.
 - பழைய புத்தகங்களுக்கு வேர் நீளம்.
 - தேவையற்றதை வாங்காதே, தேவையானதை விற்காதே.
 - பெரிய சண்டைக்குப் பின்னால் பெரிய நட்பு இருக்கும்.
 - சொந்த் நாற்காலியில்தான் சுகமாக உட்காரமுடியும்.
 
ரக்ஷ்ய பழமொழிகள்
- பூண்டு ஏழு பிணிகளை தீர்க்கும்.
 - திருடின விறகும் எரியும்.
 - விக்கிரகங்கள் செய்பவன் அதை வணங்குவதில்லை.
 - நோயாளிக்கு தேனும் கசக்கும்.
 - பிறரை உள்ளன்புடன் நடத்துவது பெருந்தன்மையின் அடையாளம்.
 - மனைவிக்கு கணவனே சட்டம்.
 - பன்றி்க்கு உணவு நேரம் எது?.
 
ஸ்பெயின் பழமொழிகள்
- பெண்கள் கிடைததை விரு்ம்பமாட்டார்கள்,மறுத்ததையே விரும்பி வாடுவார்கள்
 - விருந்தினருக்கு முதுகுப் புறம்தான் அழகு.
 - அதிகம் பேசுகின்ற இருவர் நெடுந்தூரம் சேர்ந்து போக முடியாது.
 - கோழி ஊரெங்கும் கூவும், சேவல் குப்பை மேட்டில் இருந்துதான் கூவும்.
 - எது நன்மை என்பது அதை இழக்கு்போதுதான் தெரியும்.
 
இத்தாலி பழமொழிகள்
- வாலைஆட்டினால்தான் நாய்க்குகூட உணவு கிடைக்கும்.
 - குழந்தை இல்லாதவனுக்கு அன்புதெரியாது.
 - இதயம் குறைவானால் நாவு அதிகம்.
 - நல்லது போனால் தெரியும் கெட்டது வந்தால் தெரியும்.
 - 5.உன் பகைவனே உன்னை அறிவாளி ஆக்குபவன்.
 - 6.தாமதித்து வருபவன் மிச்சம் உள்ளதையே உண்ணவேண்டும்.
 
கிரீஸ் பழமொழிகள்
- இந்த உலகில் வாழவேண்டுமா எச்சரிக்கையுடன் இருங்கள்.
 - ஏழை உ ண்மையைச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.
 - பழிவாங்குதலைவிட மன்னித்தல் மேலானது.
 - அதிர்ஸ்டம் உள்ளவன் சேவலும் முட்டையிடும்.
 - நல்ல நடத்தையே சீரிய பண்பாக அமையும்.
 - ஈரமான விறகிலிருந்து மட்டுமல்ல எல்லா விறகிலிருந்தும் புகை வரும்.
 
ஆப்பிரிக்க பழமொழிகள்
- பல ப்ழங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தால்,கடைசியில் அழுகிய ப்ழங்களைத்தான் வாங்க நேரிடும்.
 - மென்மையான சொற்கள் செல்வத்தைக் கொண்டுவரும்.
 - கம்புகள் கட்டோடு இருந்தால் அதை ஒடிக்க முடியாது.
 - செல்வம் தேயும்,கல்வி வள்ரும்.
 - பிச்சைக்காரனின் கோபம் அவன் தலையில்தான் விடியும்.
 - வீட்டுத் தலைவன்மீது எல்லோருடைய குப்பையும் கொட்டப்படும்.
 - நாயிடம் கடன் பட்டிருந்தால்,அதையும் அய்யா என்றுதான் அழைக்கவேண்டும்.
 
எஸ்டொனிய பழமொழிகள்
- மல்ட்டுப் பசுவைவிட, பால் கொடுக்கும் வெள்ளாடு மேலானது.
 - நீ எதற்கு அஞ்சுகிறாயோ அது உன்னை எட்டிப் பிடித்துவிடும்.
 - உங்களை நேசிப்பவகளைவிட ,வெறுப்பவர்கள் இந்த உலகில் அதிகம் இருப்பதால்- பொறுமையோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
 - தொழில் தெரிந்தவனிடம் வேலையே நடுங்கும்.
 - காலியாய் உள்ள தலைகள் எப்போதும் நிமிர்ந்தே நிற்கும்.
 
தொகுப்பு —எழிலன்.

