|
44 கல்வி நிலையங்கள் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதியை இழக்கின்றன!
மத்திய அமைச்சர் ஜகத்ரட்சகனின் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனம் உள்பட நாட்டில் உள்ள 44 கல்வி நிலையங்கள் நிகர்நிலைப்
பல்கலைக் கழகத் தகுதியை இழக்கும் என்று மத்திய அரசு திங்கள் கிழமையன்று
உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இந்தக் கல்வி நிறுவனங்களில் பயிலும் சுமார் 1,19,363 இளங்கலை மற்றும்
முதுகலை மாணவர்கள், எம்.பில். மற்றும் பிஎச்.டி. ஆராய்ச்சிகளை
மேற்கொண்டுள்ள 2,124 மாணவர்கள் மற்றும் தொலை தூரக் கல்வி பயிலும்
74,808 மாணவர்கள் தங்கள் கல்வியை இதே கல்விக் கூடங்களில் தொடரலாம்
என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்கள்
நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதி பெறும் முன் இணைக்கப்பட்டிருந்த
பல்கலைக் கழகங்களின் பட்டங்கள் தற்போதைய மாணவர்களுக்கும் வழங்கப்படும்
என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கான வழிகாட்டல்கள் குறித்து உச்ச
நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விபல் சர்மா தொடர்ந்த வழக்கில் உச்ச
நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் ஏ.கே. பட்னாயக் ஆகியோர்
அடங்கிய அமர்வு நீதிமன்றத்தில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
தங்கம் ஒரு சிறந்த மூலதனம்!
- ஹிமானா - தலையங்கம்
உலகத்தின் பொருளாதாரப் போக்கை
நிர்ணயிக்கும் சர்வ
வல்லமையுள்ள ஆயுதமாக அமெரிக்க டாலரையே உலகம் காண்கிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தால் தங்கத்தின் விலை
சரிகிறது; அது சரிந்தால் தங்கத்தின் மதிப்பு உயர்கிறது.
எனவே உலகத்தில் தங்கத்தின் மதிப்பைவிட உயர்ந்தது டாலர்
என்ற மதிப்பீடு உலகில் நிலவுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.
உலகத்தின் பெரும்பான்மை நாடுகள் தங்களுடைய சர்வதேச
வணிகத்தொடர்புக்கு அமெரிக்க டாலரை பயன்படுத்துவதே அதற்கான
காரணம். உலகம் இன்னொரு நாட்டின் நாணயத்தை அல்லது ஒரு
பொருளை (உதாரணம்: தங்கம்) பயன்படுத்தத் தொடங்கிவிட்டால்,
இந்த நிலை உடனே மாறிவிடும்.
அடிக்கடி தங்களது டாலரின் மதிப்பை ஏற்ற இறக்கத்துக்கு
ஆட்படுத்தி உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரச் சரிவுக்கு
வழியமைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, முதன்முதலாக
எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பியவர் மலேசியாவின் முன்னாள்
முதல்வர் டாக்டர் மஹாதீர் முஹம்மது அவர்கள்! அவர் அமெரிக்க
டாலருக்கு நாங்கள் இவ்வளவுதான் விலை தருவோம் என்று
தைரியமாக விலை வைத்தார்; அதனை நீண்ட காலத்துக்குத் தம்
நாட்டில் நிலைப்படுத்தியும் காட்டினார். இருந்தும்
உலகநாடுகள் அவரது வழியைப் பின்பற்ற முன்வரவில்லை.
இருந்தாலும் இப்போது சில நாடுகளுக்கு தைரியம்
வந்துவிட்டதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
.முழுமைக்கு
இங்கே கிளிக் செய்யவும்
சித்தார் கோட்டை
- ஓர்
ஆய்வுக்கோவை -5
(பொட்டலில்
பூத்த புது மலர் -2)
..எல்லையற்ற வியப்பால் அரபு வியாபாரி, "ஆ!
என்று கூவி விட்டார்.
சீனத்துப் பட்டு, பீங்கான், சாவகத்தீவின்
வாசனைப் பொருட்கள், சிங்களத் தீவின் தேயிலை, பாக்கு மற்றும் நறுமணப் பொருட்கள்!
கண்ணைக் கவரும் வண்ண வண்ணக் கைவினைப்
பொருட்கள்! முற்றிலும் அவர் எதிர்பார்த்திராத அபூர்வ பொருட்கள்.
"இவ்வளவு பொருட்களையும் எதற்காக
இந்தக்குடிசைக்குள் வைத்திருக்கிறீர்கள்?" என்று தேவரைப் பார்த்துக் கேட்டார்.
"விற்பதற்கு", ஒரே வார்த்தையில் பதில்
வந்தது.
"நானே வாங்கிக் கொள்கிறேன்"
சரக்குப் பொதிகள் அனைத்தும் -
செட்டியாரின் பொதிகள் உள்பட - பிரித்துப் பார்த்து அரபு வியாபாரி வாங்கிக்
கொண்டார். இந்த பேரத்தில் தேவர் வகைக்கு நல்ல இலாபம் கிடைத்தது........முழுமைக்கு
இங்கே கிளிக் செய்யவும்
பழைய சாதத்துல
இவ்வளவு விஷயமா?
...பழைய சாதத்தின் மகத்துவத்தைப்
பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி
ப்ரதீப் கூறியதில் இருந்து சில, நம் சினேகிதிகளுக்காக...
"காலையில் சிற்றுண்டியாக இந்த
பழைய சாதத்தைக் குடிப்பதால்,
உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல
பாக்டீரியாக்கள் இதில்
உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத்
தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும்
குணப்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல்
இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை
சீராக இயங்கச் செய்கிறது.
இந்தப் பழைய சாதம் உணவு
முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல
வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள்
வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்......முழுமைக்கு
இங்கே கிளிக் செய்யவும்
விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள்
கறையான்களின் குணநலன்களில் முக்கியமான
மற்றொன்று யாதெனில், அவைகள் தங்கள்
புற்றுக்களை பாதுகாக்கும் விதம். கறையான்
புற்றுக்களிள் உயரம் ஏழு மீட்டர் வரை (21
அடி) இருக்கும். இந்த புற்றுக்களில் ஒரு
சிறிய பழுது ஏற்பட்டுவிட்டாலும் உடனடியாக
கரையான்கள் எச்சரிக்கையாகி விடுகின்றன.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்
கறையான்கள் தங்களது தலைகளை புற்றுக்களின்
சுவர்களில் மோதி மற்ற கறையான்களை
விழிப்படையச் செய்கின்றன. எச்சரிக்கை
செய்தி கிடைத்ததும் விழிப்புற்ற மற்ற
கறையான்கள் குஞ்சுப் பருவத்தில் இருக்கும்
கறையான் முட்டைகளை (Larve)பாதுகாப்பான
மற்றொரு அறைக்கு எடுத்துச் செல்கின்றன.
ராஜா மற்றும் ராணி கறையான்கள் இருக்கும்
அறையின் வாயிற்பகுதி உடனடியாக கட்டப்படும்
சுவர் மூலம் மூடப்படுகிறது. பாதிக்கப்பட்ட
பகுதி முழுவதையும் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருக்கும் கரையான்கள் சூழந்து
கொள்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிக்கு
சுவர் கட்டத் தேவையான பொருட்கள் யாவும்
வேலைக்கார கறையான்களால் கொண்டு
வரப்படுகின்றது. சில மணி நேரங்களில்
பாதிக்கப்பட்ட பகுதியின் வெளிப்பகுதி ,
மற்றும் உட்பகுதி முழுவதும்
சரிசெய்யப்படுகின்றது. இவ்வாறு பல
பிரிவைச் சார்ந்த ஒவ்வொரு கறையான்களும்
அவசர காலங்களில் மட்டுமின்றி சாதாரண
வேளைகளிலும் ஒழுங்குற வகுக்கப்பட்ட ஒரு
திட்டத்தின் கீழ் செயல்படுவது போல எந்தவித
குழப்பமுமின்றி சிறப்புற செயல்படுகின்றன.
இவ்வாறு அவகைள் ஒரு குறுகிய கால
அவகாசத்தில் தங்களுக்கு இடப்பட்ட பணிகளை
இத்தனை சிறப்பாக முடிப்பதிலிருந்து
கறையான்களுக்கிடையே முறையாக தொடர்பு
கொள்ளும் திறமை உண்டென தெளிவாக அறிய
முடிகிறது. கறையான்கள் தங்களுக்கிடையே
வேலையை முறையாக பகிர்ந்து கொள்கின்றன.
பகிர்ந்து கொண்ட வேலைகளுக்கேற்ப எந்தவித
குழப்பமுமின்றி வானளாவிய உயரத்திற்கு
கூடுகள் கட்டுகின்றன. கட்டிய கூட்டினை
பாதுகாப்பதற்கென முன்னெச்சரிக்கையான
திட்டங்கள் தீட்டி அதன்படி
செயல்படுகின்றன. இத்தனை வேலைகளையும்
திறமையாக செய்து முடிக்கும் கறையான்கள்
பார்வையற்றவை.
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு
நம்பர்) -ஐந்தாம்
நம்பர்
மக்கள் நல்வழி நடக்க வேண்டுமென்பதற்காக அவர்களது வீடு
வரை தேடிச்சென்று அவர்களிடம் உரையாடல் , குஸூஸி உமூமி
கஸ்த்துக்களில் ஈடுபடுவதற்காக தமது அந்தஸ்த்து தொழில்
வர்த்தகம் அனைத்தையும் தியாகங்செய்து நேரமொதுக்கல்,
அலைந்து திரிந்து மூலை முடுக்குகளெல்லாம்
செல்வதால் ஏற்படும் சிரமங்களை அல்லாஹ்வுக்காகப்
பொறுத்துக் கொள்ளல் , எவ்வித சுயநல உலக நோக்கமுமின்றி
தன்னை விடப்படிப்பில் அந்தஸ்த்தில் செல்வ நிலையில்
தாழ்ந்தவர்களிடத்தில் கூட அவர்களின் காலடிக்குச் சென்று
பள்ளிக்கு அழைத்தல் , ஒரு காரியத்தைத் திட்டம;ட்டு
மஸூரா அடிப்படை யில் செய்தல் போன்ற விடயங்களைச்
சொல்லலாம் . இவர்களிடம் இவ்விடயங்களில் உலக நோக்கங்கள்
எதுவும் இல்லை- இவற்றை இவர்கள் பூரண இக்லாஸூடனேயே
செய்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன . இதற்காக இவர்களை
அனைவரும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
ஆனால் இவர்கள் தமது ஆத்மீக வழிகாட்டிகளாக
அல்குர்ஆன்-ஹதீஸை நம்பியிருக்காமல் இதை விடுத்து
இவர்களது மேலிடத்து உத்தரவுகளையும் வழிகாட்டல்களையுமே
நூற்றுக்கு நூறு நம்பியிருப்பதால் இவர்களிடம்
ஷிர்க்கான பித்அத்தான
விடயங்கள் பல இவர்களையறியாமலே ஏற்பட்டு விடுகின்றன.
குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தப்லீக் பெரியார்களின்
வேத நூலான அமல்களின் சிறப்பு, ஹஜ்ஜின் சிறப்பு, ஸதக்காவின் சிறப்பு
போன்றவற்றிலுள்ள அனைத்து விடயங்களையும் இவர்கள்
உண்மைப்படுத்துவதால், சரியானவையென உறுதிப்படுத்துவதால்
அதிலுள்ள நான் முன்னர் சுட்டிக்காட்டிய காட்டாத
அனைத்தையும் நம்பித்தொலைத்து விடுவதால்; அதன் மூலம்
பலவித பித்அத்தான ஷிர்க்கான
நம்பிக்கைகள் இவர்களிடம் தோன்றி விடுகின்றன .
எனவே இவர்களைப் பொறுத்த வரைக்கும் அல்குர்ஆனுக்கோ
ஹதீஸூக்கோ முரணான எந்தவொரு விடயத்தையும் இவர்கள்
செய்வதில்லை அதைத் தமது மேலிடத்துப் பெரியார்கள்
வலியுத்தினாலும் சரிதான் , மேலும் அவர்கள் சொல்பவை
இஸ்லாத்துக்கு மாற்றமானதா இல்லையா? எனப் பார்த்தே
எடுத்து நடப்போம் என இவர்கள் முடி வெடுத்தால்தான்
இவர்கள் புரியும் இக்லாஸான தப்லீக் நடவடிக் கைகளுக்கு
அல்லாஹ்விடத்தில் நற்கூலி கொடுக்கப்படுமென அடித்துச்
சொல்ல முடியும் . ஏனெனில் நாம் புரியும் ஒரு இபாதத்து
ஸாலிஹான அமலாக அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட
வேண்டுமாயின் அது முழுக்க இக்லாஸூடனும் செய்யப்பட
வேண்டும் . அதேபோல் நபியின் வழிகாட்டல்ப்படியும்
செய்யப்பட வேண்டும் என்பதை அல்குர்ஆனும் நபிமொழிகளும்
உறுதிப்படுத்துகின்றன
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
பன்றி காய்ச்சல் (Swine influenza - H1N1 flu, swine flu, hog flu, and pig flu)
உணவில் மஞ்சள் சேர்த்துக் கொண்டால்
பன்றிக் காய்ச்சல் நெருங்காது
பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்குதலைத் தடுக்க
முடியாமல் நோய் எதிர்ப்பு ஆற்றலை உடல் இழந்து வருவதற்கு,
நாம் அன்றாட உணவில் மஞ்சள் சேர்த்துக்
கொள்ளாமையே காரணம் என்று ஆயுர்வேத மருத்துவ வல்லுநர் நிலேஷ்
கோர்டே கூறியுள்ளார்.
இவர் கோவாவில் உள்ள கோமண்டக் ஆயுர்வேத மகாவித்யாலயா மற்றும்
ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்.
பழங்காலம் தொட்டு பயன்படுத்தப்பட்டு வரும் நறுமணப் பொருளான
மஞ்சள் மருத்துவப் பண்புகள் கொண்டது. உடலில் நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கக்கூடியது. நாம் அன்றாட
வாழ்வில் உணவுப்பொருள்களில் மஞ்சள் அளவு குறைந்து வருவது
கவலை அளிக்கிறது. என்றும் நிலேஷ் கோர்டே குறிப்பிட்டுள்ளார்.
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த 2009,
பிப்ரவரி 1-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மஹல்லா
ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டை
நடத்தியது.
தமிழகம் முழுவதிலுமிருந்து சங்கைக்குரிய உலமா பெருமக்கள்,
இமாம்கள், பள்ளிவாசல் தர்ஹா பணியாளர்கள், ஜமாஅத் தலைவர்கள்
பல்லாயிரக்கணக்கில் பங்கேற்ற இம்மாநாட்டில் மாண்புமிகு
அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக
பங்கேற்றார்.
தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நலவாரியம் அமைக்கப்பட
வேண்டும் என்ற கோரிக்கை இம்மாநாட்டில் பிரதான தீர்மானமாக
நிறைவேற்றப்பட்டது.
இக்கோரிக்கை முதல்வர் கலைஞர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு
சென்று நிறைவேற உறுதுணையாக இருப்பேன் என அம்மாநாட்டில்
உரையாற்றிய மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டது
குறிப்பிடத்தக்கது. முழுமைக்கு
இங்கே கிளிக் செய்யவும்
நோன்பாளிகளே உங்களைத்தான்!
- 'ரமழான்' இறுதிப் பத்தில் கூடுதல்
முக்கியத்துவம் கொடுத்து வணக்க
வழிபாடுகளில் ஈடுபடவேண்டும் என்றிருக்க,
அதை பெருநாள் ஏற்பாட்டில் கழித்து
பாழாக்கிவிடல்.
- 'ரமழான்' மாதத்தில் ஆரம்பத்தில் அதிக
தொழுகையாளிகளையும், இபாதத்தாளிகளையும்
காணலாம். ஆனால், நாள் செல்லச் செல்ல
சோம்பல் அதிகரித்து இபாதத்தாளிகளின்
எண்ணிக்கை குறைவதைக் காணலாம்! எனவே,
இறுதிப்பத்து கூடுதல் முக்கியத்துவம்
கொடுக் கப்பட வேண்டியது என்பதைக்
கவனத்தில் கொண்டு செயற்படுவோமாக!
- 'ஸஹரு'டைய நேரம்
'துஆ'வுக்கும், பாவ
மன்னிப்புக்கும் ஏற்றதாக இருக்கும்போது,
'இப் தாரு'டைய நேரம் 'துஆ'வுக்குரியதாக இருக்கும் போது, இவ்விரு நேரங்களையும்
உண்பதற்கும், பருகுவதற்குமுரிய நேரமாக
மட்டும் கருதி 'துஆ', 'இஸ்திஃபார்' விடயத்தில் அலட்சியமாக இருத்தல்.
- பள்ளிக்குச் செல்லும் பெண்கள் அலங்கார
ஆடைகளுடனும், வாசனைத் திரவியங்கள் பூசிக்
கொண்டும் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் பெண்கள் மனம்
பூசிக்கொண்டு பள்ளிக்கு வருவதை
தடுத்துள்ளார்கள் என்பது கவனத்தில்
கொள்ளத்தக்கதாகும்.
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
திருந்தினால் திரை விலகும் - (சிறுகதை)
ஷாகிரா பயோடேட்டாவை மட்டும் வாங்கிப் பார்த்தாள். அதில் படித்த, அழகான, வசதியான
பெண் வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது.
"வாப்பா,எனக்கு இந்த மாப்பிள்ளைகள் பிடிக்கவில்லை"என்றாள் ஷாகிரா.
"என்னம்மா சொல்றே, எந்த போட்டோவையும் பார்க்காமலேயே எப்படிம்மா பிடிக்கலைன்னு
சொல்றே?"
"பயோடேட்டாங்கிறது முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி, மாப்பிள்ளைகளுடைய குணம்,
நோக்கம்,எதிர்பார்ப்பு எல்லாம் அதிலேயே தெரிஞ்சுக்கலாம். எனக்கு
மார்க்கப்பற்றுள்ள, படித்த, எளிமையான மாப்பிள்ளை போதும், வாப்பா; பணம், வசதி
எல்லாம் வேண்டாம்".
"என்னம்மா, புரியாத பொண்ணா இருக்கியே! குணம் மட்டும் பத்தாது, பணம் தாம்மா நம்மை
வாழவைக்கும்".
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
அண்ணலாரின்
விருப்பம் அசைவ உணவா? (அளவான உணவு - ஆரோக்கிய வாழ்வு)
இன்று பரவலாக முஸ்லிம்கள் என்றாலே அசைவ உணவை விரும்பிச்
சாப்பிடுபவர்கள் என்ற பேச்சுள்ளது. அசைவ உணவு சாப்பிடலாம்
தவறில்லை. ஆனால் அதற்குத் தகுந்தாற்போல் வேலைப்பளு என்பது
தற்காலத்தில் குறைந்து விட்டது விளைவு! உடல் பெருக்கம்,
இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற உபாதைகளுக்கு
தள்ளப்படுகிறோம். குறிப்பாக இறைவழிபாடு, தொழுகை, நோன்பு
போன்றவற்றுக்கு அதுபோன்ற உபாதைகள் இடையூறை ஏற்படுத்தி
விடுகிறது. அசைவப் பொருளை வாங்குவது கட்டாயம் என்பது போன்ற
சில தினங்களை நாம் ஏற்படுத்தி உள்ளோம். குறிப்பாக ஜும்ஆ
வுடைய தினம் என்றாலே மட்டன், சிக்கன் எடுத்தாக வேண்டும்
என்ற கட்டாய நிலையை ஏற்படுத்திக் கொண்டோம். வெள்ளிக் கிழமை
என்றாலே மட்டன், சிக்கன் சமைத்தாக வேண்டுமா? ஸஹாபாக்கள்
வெள்ளிக்கிழமை என்ன உணவு சாப்பிட்டார்கள்? வரலாற்றை நாம்
புரட்டிப் பார்க்கும்போது ஸஹாபாக்களுக்கு வெள்ளிக்கிழமை
என்றாலே குறிப்பிட்ட உணவை சாப்பிடப் போகிறோம்! என்ற
சந்தோஷம் அவர்களுக்கு வந்து விடும். அப்படி என்ன உணவை
சந்தோஷமாக உண்டார்கள் என்பதை அவர்களின் மூலமாகவே நாம்
கேட்போம். ஹள்ரத் சஹ்ல் இப்னு சவுத் (ரளி) அவர்கள்
கூறுகிறார்கள். வெள்ளிக்கிழமை வந்து விட்டாலே நாங்கள்
சந்தோஷமும் மகிழ்வும் அடைவோம். காரணம் ஜும்ஆ தொழுகைக்கு
பிறகு வழக்கமாக ஒரு வயோதிகப் பெண்மணி எங்களுக்காக ஒரு உணவை
தயார் செய்து கொடுப்பார். அதை நாங்கள் சாப்பிடுவதில்
ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைவோம். அப்படி என்ன ஸ்பெஷலான
உணவு அது? என்று பார்த்தால் - தண்டுக் கீரையும், கோதுமையும்
கடைந்து தயாரிக்கப்பட்ட ஒரு வகையான உணவுதான் அது ! அதை
ஜும்ஆ தினத்தில் சாப்பிடுவதில்தான் ஸஹாபாக்கள் குதூகலம்
அடைந்துள்ளார்கள். ( புகாரி 5403 )
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!
1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது,
அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன்
செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர்
சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர்
இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம்
சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை
கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே
எடுத்துக் கொள்ள வேண்டும்.
2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை
கேன்சருக்கான செல் உருவாகிறது.
3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system)
வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு,
பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு,
டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
செல்போன்கள் -(அறிவியல் அதிசயம்)
தொலைபேசிகள் இயக்கத்திற்கு
வந்த பிறகும்கூட தொலைபேசியின் மூலம் அழைப்பது என்பது குதிரைக்
கொம்பாகவே இருந்தது. கிராமத்திற்கு ஒரு தொலைபேசியோ அல்லது பல
தெருவிற்கு ஒன்றோ என்று அங்கொன்றும் இங்கொன்று மாகத்தான் இருந்தன.
நாளடைவில் தொலை தொடர்பு துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் தாக்கத்தால்
பல வளர்ச்சிகள் ஏற்பட்டு இன்று வீட்டிற்கு ஒரு தொலைபேசி என்றாகி
தொலைது}ர அழைப்புகளுக்கு எஸ்.டி.டி. பூத்துகளுக்கு செல்வதைக்
குறைத்து இன்று மக்களே ஒரு நடமாடும் எஸ்.டி.டி. பூத்துகளாகவே
மாறுவதற்கு காரணமாய் அமைந்தது செல்போனின் வளர்ச்சி.
செல்போன் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகாலமான 1990-ல் செல்போனின்
எடை இரண்டு கிலோ முதல் இரண்டரை கிலோ வரையும் சார்ஜரின் எடை 1 கிலோ
வரையும் இருந்த இது இப்படி படிப்படியாக குறைந்து இப்போது கிராம்
கணக்கில் வந்துள்ளது. இனி வரும் அத்தியாயங்களில் செல்போன் எவ்வாறு
இயங்குகிறது மற்றும் பலவிதமான நவீன செல்போன்கள் மற்றும் பல்வேறு
அம்சங்களை பற்றிப் பார்ப்போம்.
முழுமைக்கு
இங்கே கிளிக் செய்யவும்
|